என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கோவையில் ஆயுதத்துடன் வீடியோ வெளியிட்ட பெண் திருப்பூரில் பதுங்கல்- தனிப்படை விரைந்தது
- போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ரவுடிகளின் கொட்டம் சற்று குறைந்தது. ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவது குறைந்திருந்தது.
- வசதி படைத்த இளைஞர்களிடம் நைசாக பேசி, அவர்களை தனது இடத்திற்கு வரவழைத்து, தனது ஆண் நண்பர்கள் மூலம் அவர்களை மிரட்டி பணமும் பறித்து வந்துள்ளார்.
கோவை:
கோவையில் கடந்த மாதம் 13-ந்தேதி லட்சுமி கார்டனை சேர்ந்த கோகுல் என்பவரை மர்மகும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கோகுல் தலைமையில் ஒரு குழுவும், ரத்தினபுரியை சேர்ந்த குரங்குஸ்ரீராம் தலைமையிலான ஒரு குழுவும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டு குரங்கு ஸ்ரீராமை, கோகுல் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தார். இந்த கொலைக்கு பழிவாங்கவே குரங்குஸ்ரீராமின் நண்பர்கள் கோகுலை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
இதுதவிர இந்த 2 குழுவினரும் அடிக்கடி சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டும் மோதிக்கொண்டனர். குரங்கு ஸ்ரீராம் இறந்த பிறகு, நண்பரின் மரணத்துக்கு விரைவில் பழி தீர்க்கப்படும் எனவும் பதிவிட்டு வந்துள்ளனர்.
மேலும் இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி, பட்டாக்கத்தி, அரிவாள் வைத்து நடந்து வருவது போலவும் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர். அதிலும் உச்சமாக அவர்களுடன் இளம்பெண் ஒருவர் கையில் கட்டை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நடந்து வருவது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக பிரகா பிரதர்ஸ் என்ற பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான வீடியோக்கள் இருந்தன.
இதையடுத்து போலீசார் வீடியோக்கள் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். மேலும் இதுபோன்று வீடியோ வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ரவுடிகளின் கொட்டம் சற்று குறைந்தது. ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவது குறைந்திருந்தது.
இந்த நிலையில் நேற்று இளம்பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து போலீசார் அந்த வீடியோ எந்த சமூக வலைதளத்தில் இருந்து வந்தது என விசாரித்த போது அது பிரண்ட்ஸ் கால் மீ தமன்னா என்ற பெயரில் இருந்ததை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து அவர் யார் என்பதை கண்டறிய விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் விருதுநகரை சேர்ந்த வினோதினி என்ற தமன்னா(வயது23) என்பதும், கோவை காளப்பட்டியில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.
வினோதினி நர்சிங் படித்து முடித்துள்ளார். இவர் கோவை காளப்பட்டியில் தனது ஆண் நண்பரான சூர்யா என்ற சூர்ய பிரகாசுடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார். அதில் வந்த பணத்தை கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
மேலும் வசதி படைத்த இளைஞர்களிடம் நைசாக பேசி, அவர்களை தனது இடத்திற்கு வரவழைத்து, தனது ஆண் நண்பர்கள் மூலம் அவர்களை மிரட்டி பணமும் பறித்து வந்துள்ளார். அதேபோல இதுபோன்ற வீடியோக்களையும் வெளியிட்டு, 2 குழுக்களுக்கு இடையே பகையை உருவாக்கவும் முயற்சி செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட வினோதினி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் தனிப்படையினர் இன்று திருப்பூர் விரைந்துள்ளனர். திருப்பூரில் முகாமிட்டு அவர் எங்கு உள்ளார் என்பது குறித்து அந்த மாவட்ட போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்