search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North Indian Youngster"

    • கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • 150 கிராம் எடை உள்ள கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த பொங்குபாளையம் ஊராட்சி, பரமசிவம் பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் பெருமாநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது கஞ்சா சாக்லெட் விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த இன்டேல் குமார் (வயது 26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, 150 கிராம் எடை உள்ள 10 பாக்கெட் கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
    • வழக்கில் தொடர்புடைய 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    பல்லடம் :

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் மண்டல் என்பவரை கடந்த 20-ந் தேதி ஒரு கும்பல் கடத்தி அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர். இதில் முக்கிய குற்றவாளியான சென்னையைச் சேர்ந்த சுசிதரன் என்பவரது மகன் டாட்டூ தினேஷ் (வயது 28) என்பவரை போலீசார் சின்னக்கரை அருகே வைத்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • காரில் வந்த மர்ம நபர்கள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர்.
    • ஏடிஎம் கார்டு, பணம் ரூ. 5 ஆயிரம் மற்றும் வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.

    பல்லடம் :

    மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பஜூலு மண்டல் என்பவரது மகன் ஷாஜி மண்டல்(35) இவர் தற்போது பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரான் காலனியில் வசித்துக் கொண்டு, தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வட மாநிலப் பெண் ஒருவர் வேலையில்லாமல் கஷ்டப்படுவதாகவும் வேலை இருந்தால் சொல்லுமாறும், தற்போது மிகவும் சிரமமாக இருப்பதால் பண உதவி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் அவருக்கு உதவி செய்வதற்காக அந்தப் பெண் வரச் சொன்ன சின்னக்கரை பஸ் நிறுத்தம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரை திருப்பூர் கொண்டு சென்று அங்கு உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து, அவரை அடித்து மிரட்டி ரூ.10லட்சம் பணம் கேட்டுள்ளனர். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறி ஷாஜி மண்டல் அழுதுள்ளார். மீண்டும் அவரை தாக்கிய கடத்தல்காரர்கள், அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டு, பணம் ரூ. 5 ஆயிரம், மற்றும் வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துக்கொ ண்டனர். பின்னர் திருப்பூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஷாஜி மண்டலின் ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ரூ. 56 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். பின்னர் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கி விட்டு, சீக்கிரமாக பணத்தை ரெடி செய், இது குறித்து புகார் செய்ய போலீசுக்கு போனால் குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து தன்னை கடத்தி பணம் பறித்த பெண் உள்ளிட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் அவரிடம் பேசிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவரது மனைவி சுகுலா சர்தார்(35) என்பவரை பிடித்து விசாரணை செய்த போது, அவரும் இன்னும் 4 நபர்களும் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில் பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டு, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • பல்லடம் கல்லம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விசைத்தறி குடோனில் வேலை பார்த்து வருகிறார்.
    • 3 நபர்கள் 2 செல்போன்கள், ரூ.3500, பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்து விட்டு மின்னலென மறைந்து விட்டனர்.

    பல்லடம் :

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயதீப் மகன் ராகுல்தீப்(வயது 24). இவர் பல்லடம் கல்லம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விசைத்தறி குடோனில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் சுபாஷ் சந்த்(23). இவர் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை, லட்சுமி நகரில் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டதால் சுபாஷ் சந்தை சந்திப்பதற்காக சின்னக்கரை லட்சுமி நகருக்கு ராகுல் தீப் சென்றார். இரவு நேரம் ஆகிவிட்டதால், சுபாஷ் சந்த் தனது மோட்டார் சைக்கிளில் ராகுல் தீப்பை ஏற்றிக்கொண்டு பல்லடம் கல்லம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கரைப்புதூரை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் தொட்டி அப்புச்சி கோவில் ரோட்டில் செல்லும்போது. இவர்களது மோட்டார் சைக்கிளை வழிமறித்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் இவர்களை மிரட்டி இவர்கள் வைத்திருந்த 2 செல்போன்கள், ரூ.3500, பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்து விட்டு மின்னலென மறைந்து விட்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து இருவரும் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வழிப்பறி செய்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×