search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட மாநில வாலிபர்களிடம் செல்போன்- பணம் பறிப்பு
    X

    கோப்புபடம்.

    வட மாநில வாலிபர்களிடம் செல்போன்- பணம் பறிப்பு

    • பல்லடம் கல்லம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விசைத்தறி குடோனில் வேலை பார்த்து வருகிறார்.
    • 3 நபர்கள் 2 செல்போன்கள், ரூ.3500, பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்து விட்டு மின்னலென மறைந்து விட்டனர்.

    பல்லடம் :

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயதீப் மகன் ராகுல்தீப்(வயது 24). இவர் பல்லடம் கல்லம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விசைத்தறி குடோனில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் சுபாஷ் சந்த்(23). இவர் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை, லட்சுமி நகரில் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டதால் சுபாஷ் சந்தை சந்திப்பதற்காக சின்னக்கரை லட்சுமி நகருக்கு ராகுல் தீப் சென்றார். இரவு நேரம் ஆகிவிட்டதால், சுபாஷ் சந்த் தனது மோட்டார் சைக்கிளில் ராகுல் தீப்பை ஏற்றிக்கொண்டு பல்லடம் கல்லம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கரைப்புதூரை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் தொட்டி அப்புச்சி கோவில் ரோட்டில் செல்லும்போது. இவர்களது மோட்டார் சைக்கிளை வழிமறித்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் இவர்களை மிரட்டி இவர்கள் வைத்திருந்த 2 செல்போன்கள், ரூ.3500, பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்து விட்டு மின்னலென மறைந்து விட்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து இருவரும் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வழிப்பறி செய்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×