search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smuggling of Palm Trees"

    • ஓடைக்கரையின் 2 பக்கமும் அதிகளவில் பனைமரங்கள், மற்றும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.
    • காவல் துறையில் புகார் அளிக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர்-சேலம் சாலையின் ஓரமாக சுமார் 2. கிலோ மீட்டர் தூரம் பெரியநெசலூர் வரை ஓடை நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த ஓடைக்கரையின் 2 பக்கமும் அதிகளவில் பனைமரங்கள், மற்றும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இந்நிலையில். மர்ம நபர்கள் ஜே.சி.பி., எந்திரம் மூலம் பனை மரங்களை வெட்டிலாரியில் ஏற்றும் பணி நடந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் திட்டக்குடி போலீஸ் டி.எஸ்.பி. காவ்யாவிற்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் டிஎஸ்பி, காவ்யா, வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், வேப்பூர் துணை தாசில்தார் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் மற்றும் வேப்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர் . இதை அறிந்த மரம் வெட்டிக்கொண்டு இருந்தவர்கள் ஜே.சி.பி. டிரைவர் உள்ளிட்டோர் தப்பி ஓடினார்கள்.

    இது குறித்து திட்டக்குடி டி.எஸ்.பி., காவ்யா அங்கு விசாரணை செய்ததில் அரசு அனுமதியின்றி, சுமார் 61 பனைமரங்கள், 6 சீமை கருவேல மரங்கள், 1 ஈச்ச மரம் ஆகியவற்றை வெட்டி கடத்தி சென்றது தெரிய வந்தது அதனை தொடர்ந்து டி.எஸ்பி. காவ்யா பனை மரங்கள் வெட்டப்பட்ட இடங்களை அளவீடு செய்து, காவல் துறையில் புகார் அளிக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இது குறித்து சிறுநெசலூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து உள்ளனர். மரங்களை வெட்டிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×