search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "two arrested"

    • விருத்தாசலத்தில் பணம் வைத்து சூதாடி இருவர் கைது செ்ய்யப்பட்டார்.
    • போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய தினேஷ் மற்றும் குமார் ஆகிய இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தா சலத்தில் உள்ள ஆயியார்மடம் மணிமுத்தாறு ஆற்றின் அருகே 4 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருப்பதாக விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற விருத்தாசலம் போலீசார் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த பழமலைநாதர் பகுதியை சேர்ந்த ராஜ் (26), சதீஷ் (31) ஆகிய இருவரை கைது செய்தனர், மேலும் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய தினேஷ் மற்றும் குமார் ஆகிய இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பொள்ளாச்சியில் வியாபாரியிடம் நகை-பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி திலகர் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் .இவர் பொள்ளாச்சி அடுத்துள்ள கெடிமேடு பகுதியில் தர்பூசணி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் பொள்ளாச்சி ரெயில்வே காலனி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் செல்வராஜை தாக்கிவிட்டு அவரிடமிருந்த ரூ.620 பணம் கையில் போட்டிருந்த 5 கிராம் மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    நகை, பணத்தை பறிகொடுத்து விட்டு வீட்டுக்கு சென்ற செல்வராஜ் தனது மகன் கண்ணனிடம் நடந்த சம்பவத்தை கூற கண்ணன் தனது நண்பர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்துக் கொண்டு ரெயில்வே காலனி பகுதிக்கு சென்றார். ஆனால் அங்கு வழிப்பறி கொள்ளையர்கள் இல்லை. இதையடுத்து நேதாஜி ரோடு மார்க்கெட் பகுதிக்கு சென்றபோது அங்கு 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். செல்வராஜ் அவர்களை அடையாளம் காட்டவே பொதுமக்கள் அவர்கள் 3 பேரையும் துரத்திப் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது 2 பேர் மட்டும் சிக்கி கொண்டனர். அவர்களை பொள்ளாச்சி மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் பொள்ளாச்சி செரிப் காலனியை சேர்ந்த முகமது ஷேக் பரீத் (23), கண்ணப்பன் நகரை சேர்ந்த சுலைமான் ( 27 )என்பது தெரியவந்தது . அவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவர் பொள்ளாச்சி அழகாபுரி வீதியை சேர்ந்த ரபிக் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


    இண்டூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு புறம்பாக மதுவிற்ற 2 பேரை கைது செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், இண்டூர் பகுதியில் அரசுக்கு புறம்பாக மதுவிற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    இதேபோன்று அதியமான் கோட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    பென்னாகரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மரத்தில் இருந்து கள் இறக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தர்மபுரி:

    பென்னாகரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பென்னாகரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது பென்னாகரத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் மரத்தில் இருந்து கள் இறக்கி கொண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார் லட்சுமணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 லிட்டர் கள்ளு பறிமுதல் செய்யப்பட்டது. 

    இதைபோன்று பென்னாகரம் அடுத்துள்ள பூனைகுண்டு காட்டு கொல்லை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரை கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து 3 லிட்டர் கள்ளு பறிமுதல் செய்யப்பட்டது.
    திண்டுக்கல் அருகே மான் வேட்டையாடிய கும்பலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கன்னிவாடி:

    திண்டுக்கல் அருகே கன்னிவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார மலை கிராமங்களில் வனத்துறையினர் வேட்டை தடுப்புக்காக ரோந்து சென்று வருகின்றனர். பாரஸ்டர் சாமிநாதன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது ஒரு கும்பல் மான் வேட்டையாடி சமைத்துக் கொண்டு இருந்தனர்.

    அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்தபோது ஒருவர் தப்பி ஓடி விட்டார். 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த பாலாஜி (வயது 38), லால்குடியைச் சேர்ந்த சரவணன் என தெரிய வந்தது.

    அவர்களை கைது செய்து கன்னிவாடி ரேஞ்சர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். மேலும் தப்பி ஓடிய நபர் ஆடலூரைச் சேர்ந்த ஆனந்த் என்பதும் தற்போது திருச்சியில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. அவரை தேடி வருகின்றனர்.

    வனத்துறையினர் சரவணன் மற்றும பாலாஜியிடம் மான் வேட்டையாடி பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் பொருட்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. வேறு ஏதும் கும்பலுக்கு தொடர்பு இருக்கிறதா? எனவும் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    ரேஞ்சர் தெய்வசர்மா தலைமையில் பாரஸ்டர் தண்டபாணி, வனக்காப்பாளர்கள் பீட்டர், சங்கர், வேல்முருகன் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடித்த வழக்கில் மத்திய பிரதேசத்தைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #SalemChennaiTrainRobbery #ChennaiTrainRobbery #RBIMoney
    சென்னை:

    சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.323 கோடி பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து ரெயில் மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்ட ரெயில் மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைந்தது. பின்னர் பணம் இருந்த பெட்டி மட்டும் சேத்துப்பட்டு பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பெட்டியை திறந்து பார்த்தபோது, மேற்கூரையில் துவாரமிட்டு ரூ.5 கோடியே 78 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்தது தெரிந்தது. இந்த கொள்ளை தொடர்பாக சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்க வாய்ப்பு இல்லை என்றும், சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அல்லது எழும்பூர் ரெயில்நிலையத்தில் தான் கொள்ளையடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்தது.

    ஓடும் ரெயிலில் ஏறி கொள்ளையடித்தால் கைரேகை பல இடங்களில் பதிவாகி இருக்கும். ஆனால் ரெயில் பெட்டியில் ஒரு சில பகுதிகளில் தான் கைரேகை இருந்தது. இதுதவிர ஓடும் பெட்டியில் ஏறினாலோ, கீழே இறங்கினாலோ கால் தடம் மற்றும் கைரேகைகள் பல இடங்களில் நிச்சயம் பதிந்து இருக்கும். ஆனால் கால் தடம், கை ரேகை பல இடங்களில் இல்லை.

    ஒரு சில கைரேகை மட்டுமே உள்ளதால் வங்கி பணம் ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்கவில்லை என்றும், ரெயில் நின்று இருக்கும் போது தான் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால் கொள்ளையர்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை.



    இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் துப்பு கிடைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அளித்த தகவலின் அடிப்படையில், இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் 350 கி.மீட்டர் தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களாக நாசா அனுப்பியது. மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக நாசாவுக்கு சிபிசிஐடி வைத்த கோரிக்கையை ஏற்று நாசா படங்களை அனுப்பியது. நாசா படங்களின் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களின் அழைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  

    இந்த நிலையில்,  ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை கொள்ளையடித்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன் பார்த்தி ஆகியோரை  சிபிசிஐடி போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.  

    சின்ன சேலத்திற்கும், விருதாசலத்திற்கும் இடையே ரயில் பெட்டி மேற்கூரையை துளையிட்டு கொள்ளையடித்ததாக கைதானவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.  கொள்ளையடித்த பழைய ரூபாய் நோட்டுகளை லுங்கியில் சுற்றிக்கொண்டு 2 கொள்ளையர்கள் தப்பியுள்ளனர். ரயில் விருதாசலம் வந்தபோது பணக்கட்டுகளை மற்ற கூட்டாளிகளிடம் தந்துள்ளனர்.  ரயில் நிலையத்தில் இறங்கி காத்திருந்த மேலும் ஐவருடன் மத்திய பிரதேசம் தப்பி சென்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். #SalemChennaiTrainRobbery #ChennaiTrainRobbery #RBIMoney
    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை கொலை செய்யப்போவதாக வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பிய 2 பேரை உத்தரகாண்ட் போலீசார் கைது செய்தனர். #NirmalaSitharaman
    பிதோராகார்:

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் சேவை தினமாக கொண்டாடப் பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகார் மாவட்டம் தார்சுலா நகரில் ராணுவத்தினர் ஏற்பாடு செய்த மருத்துவ முகாமை மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கிவைத்தார்.

    முன்னதாக, நிர்மலா சீதாராமன் அந்த நகருக்கு வருகைதர இருப்பதை அறிந்த ஒருவர் தனது வாட்ஸ்-அப் குரூப்பில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் சர்ச்சைக்குரிய ஒரு தகவலை அனுப்பினார். அதில், ‘நான் நிர்மலா சீதாராமனை துப்பாக்கியால் சுடப்போகிறேன். நாளையே அவரது கடைசி நாள்’ என்று கூறியிருந்தார்.



    அதற்கு மற்றொருவரும் பதில் அளித்து, இதுதொடர்பாக 2 பேரும் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். இதை கண்டுபிடித்த உளவுத்துறையினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து எச்சரித்தனர். போலீசார் அந்த 2 பேரையும் கண்டுபிடித்து நேற்று காலை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அந்த வாட்ஸ்-அப் குரூப்பின் நிர்வாகி (அட்மின்) பற்றியும் விசாரணை நடக்கிறது. கைதான 2 பேருக்கும் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா?, அவர்களிடம் துப்பாக்கி உள்பட ஆயுதங்கள் இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் குடிபோதையில் இவ்வாறு தகவல்களை பரிமாறிக் கொண்டது தெரியவந்தது. ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராம்சந்திரா ராஜ்குரு தெரிவித்தார். 
    அண்ணாநகரில் வாடகைக்கு வீடு எடுத்து ஹுக்கா போதை மையம் நடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் போதையில் இருந்த கல்லூரி மாணவர்களை எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
    அம்பத்தூர்:

    அண்ணாநகர், சாந்தி காலனி, 4-வது அவன்யூவில் உள்ள ஒரு வீட்டுக்கு, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் சந்தேகத்திற்கிடமாக அடிக்கடி வந்து சென்றனர்.

    இதுபற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உதவி கமி‌ஷனர் குணசேகரன் மற்றும் போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு பைப் மூலம் உறிஞ்சும் ‘ஹுக்கா’ போதை மையம் நடத்தி வந்தது தெரிந்தது. மேலும் ஏராளமான கல்லூரி மாணவர்களும் அங்கு போதையில் இருந்தனர்.

    இதையடுத்து போதை மையம் நடத்திய உசிலம்பட்டியை சேர்ந்த ஒருவர், ராயப்பேட்டை அசோக் குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கடந்த 2 மாதமாக அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து போதை மையம் நடத்தி வந்தது தெரிந்தது.

    வீட்டில் இருந்த போதைக்கு பயன்படுத்திய பொருட்கள், புகையிலை, பைப்புகள், மண் குடுவைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் போதையில் இருந்த கல்லூரி மாணவர்களை போலீசார் எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    ஆம்பூர் அருகே பிளஸ்-1 மாணவன் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே பிளஸ்-1 மாணவன் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பட்டுவாம்பட்டி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவன் மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த மாணவனின் உறவினர் பெண்ணும் அதே பள்ளியில் படிக்கிறார். 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர்.

    நேற்று பள்ளி வளாகத்தில் மாணவியுடன் பிளஸ்-1 மாணவன் பேசி கொண்டிருந்தார். அப்போது, அதே பள்ளியில் படிக்கும் பட்டுவாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒருசில மாணவர்கள் பிளஸ்-1 மாணவனையும், மாணவியையும் காதலிப்பதாக சேர்த்து வைத்து ஆபாசமாக பேசியுள்ளனர்.

    பிளஸ்-1 மாணவன், வம்பு செய்த அந்த மாணவர்களை கண்டித்தார். ஆத்திரமடைந்த மாணவர்கள் பிளஸ்-1 மாணவனையும், மாணவியையும் மிகவும் மோசமாக பேசியுள்ளனர். இதையடுத்து, பிளஸ்-1 மாணவன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்துக் கொண்டு தகராறு செய்த மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.

    பள்ளி வளாகத்தில் நடந்த மாணவர்களின் மோதலை ஆசிரியர்கள் தடுத்து சமரசம் செய்தனர். இந்த விவகாரம் மாலையில் வகுப்பு முடிந்து வீடு திரும்பிய பிறகு பூதாகரமாக வெடித்தது.

    பள்ளிக்கு வெளியே மீண்டும் இருத்தரப்பு மாணவர்களும் பயங்கரமாக மோதி கொண்டனர். பின்னர், வீட்டிற்கு செல்லும் வழியில் பிளஸ்-1 மாணவனை, வம்புக்கு இழுத்த மாணவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிலர் மடக்கி பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    ‘எங்கள் மகனை தாக்க உனக்கு எங்கிருந்து வந்தது தைரியம்’ என்று கூறி தாக்கினர். தாக்கப்பட்ட பிளஸ்-1 மாணவன் நடந்ததை கூறியும் அவர்கள் ஏற்கவில்லை.

    மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தை அங்கிருந்த ஒரு வாலிபர் செல்போனில் வீடியோவாக எடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவ விட்டார். தற்போது, இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தாக்குதலில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனின் பெற்றோர், ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து முனிராஜ் (48) மற்றும் சிங்காரம் (57) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள தாக்குதலுக்கு காரணமான மாணவன் மற்றும் அவனது பெற்றோரை தேடி வருகின்றனர்.



    சித்தூர் மாவட்டம் பாக்ராபேட்டை அருகே 5 செம்மரங்களுடன் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளையும் பறிமுதல் செய்தனர். #RedSandersSmuggling
    ஸ்ரீகாளஹஸ்தி:

    சித்தூர் மாவட்ட வனத்துறை அதிகாரி நாகார்ஜுனாரெட்டி உத்தரவின்பேரில் பாக்ராபேட்டை வனத்துறையினர் சியாமளா வனப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். தும்பகோனா என்ற இடத்தின் அருகே சென்றபோது தமிழகத்தை சேர்ந்த 5 பேர் செம்மர கட்டைகளை வெட்டிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடினர். அதில் 2 பேர் மட்டும் பிடிபட்டனர். மற்ற 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    பிடிபட்டவர்களிடமிருந்து 5 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் செம்மரங்கள் வெட்டும்போது அங்கு தங்கி சமைத்து சாப்பிடுவதற்காக 10 நாட்களுக்கு தேவையான சமையல் பொருட்களை வைத்திருந்தனர். அவற்றையும், அவர்கள் வைத்திருந்த பைகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவற்றை பாக்ராபேட்டை வன அலுவலகத்தில் அவர்கள் ஒப்படைத்தனர். மேலும் தப்பிச் சென்ற 3 பேரையும் விரைவில் பிடிப்பதாகவும் தெரிவித்தனர். #RedSandersSmuggling

    ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மு.க.அழகிரியின் மகள் வீட்டில் அத்துமீறி நுழைந்த 2 பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகள் கயல்விழி வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு நள்ளிரவு 2 பேர் அத்துமீறி நுழைய முயன்றனர். இதை கண்டதும் அங்கிருந்த காவலாளி அவர்களை தடுத்தார். இருப்பினும் அவர்கள் 2 பேரும் வீட்டிற்குள் நுழைந்தனர். இதுகுறித்து உடனடியாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், காஞ்சீபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 37), போரூரை சேர்ந்த சங்கர் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றும் 2 பேரும் எதற்காக மு.க.அழகிரியின் மகள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி கோவில் சிலை மோசடியில் உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பழனி:

    பழனி கோவில் மூலவர் சன்னதியில் நவபாஷாண சிலை சேதம் அடந்ததாக கூறி கடந்த 2004-ம் ஆண்டு 200 கிலோ எடையில் புதிய ஐம்பொன் சிலை செய்யப்பட்டது. இந்த சிலை செய்ததில் தங்கம் சேர்க்காமல் மோசடி செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வரவே ஸ்தபதி முத்தையா, அப்போதைய இணை ஆணையர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவ்வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணையை தொடங்கினார்.

    கடந்த வாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. கருணாகரன் தலைமையிலான போலீசார் சுகிசிவம் உள்ளிட்ட சில குருக்களிடம் 2-ம் கட்ட விசாரணை நடத்தினர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொன் மாணிக்கவேல், கூடுதல் எஸ்.பி. ராஜாராம், டி.எஸ்.பி. கருணாகரன் கொண்ட குழுவினர் 3-ம் கட்ட விசாரணையை தொடங்கினர்.

    இவர்களுடன் சென்னை ஐ.ஐ.டி. உலோகவியல்துறை பேராசிரியர் முருகையா குழுவினரும் ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் இருந்த உற்சவர் சிலைகளை ஆய்வு செய்து அதில் உள்ள உலோகங்களின் அளவுகளை மதிப்பீடு செய்தனர்.

    கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்த ஆய்வில் மலைக்கோவில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள ஐம்பொன் சிலை, சின்னக்குமாரசாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, நவவீரர்கள், கன்னிமார்கள் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடராஜர், முத்துக்குமாரசுவாமி, வாகனங்கள் வைப்பறையில் உள்ள உற்சவர் சிலைகளை ஆய்வு செய்தனர்.

    2 நாட்களாக நடைபெற்ற விசாரணையில் கடந்த 2004-ம் ஆண்டு பழனி கோவிலில் உதவி ஆணையராக பணிபுரிந்த ஆயக்குடியைச் சேர்ந்த புகழேந்தி, அப்போதைய நகை மதிப்பீட்டாளரான தேவேந்திரன் ஆகியோரும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வரவே அவர்களை கைது செய்தனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், ஐம்பொன் சிலை செய்யப்பட்ட போது பழனி கோவிலில் புகழேந்தி உதவி ஆணையராகவும், தேவேந்திரன் நகை மதிப்பீட்டாளராகவும் இருந்துள்ளனர். புகழேந்தி அதன் பிறகு திருத்தணி முருகன் கோவிலில் இணை ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    தேவேந்திரன் சென்னை வளசரவாக்கத்தில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அவர்கள் இருவரிடமும் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டதில் சிலை மோசடி நடந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.

    இதனையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உள்ளோம். இது தொடர்பாக மேலும் சிலரிடமும் விசாரணை நடத்த உள்ளோம் என்று தெரிவித்தனர்.



    ×