search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இண்டூர் பகுதியில் மதுவிற்ற 2 பேர் கைது
    X

    இண்டூர் பகுதியில் மதுவிற்ற 2 பேர் கைது

    இண்டூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு புறம்பாக மதுவிற்ற 2 பேரை கைது செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், இண்டூர் பகுதியில் அரசுக்கு புறம்பாக மதுவிற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    இதேபோன்று அதியமான் கோட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×