search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொள்ளாச்சி"

    மற்றொரு வாலிபருடன் உல்லாசமாக இருந்ததால் ஆத்திரம்

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த வர் 26 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் தனது கணவரை பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வரு கிறார். இளம்பெண்ணுக்கு கேரள மாநிலம் கோழிக்கோ ட்டை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் இளம்பெண் அவரது மகளுடன் வாடகை வீட்டில் கள்ளக்காதலனுடன் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதலன் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலன் வேலை விஷயமாக வெளியூருக்கு சென்று இருந்தார். அப்போது இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் இரவு முழுவதும் ஜாலியாக இருந்தார்.

    மறுநாள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய காதலனுக்கு அக்கம் பக்கத்தினர் மூலம் இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரிய வந்தது.

    இதில் ஆத்திரம் அடைந்த அவர் இளம்பெண்ணை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காதலன், இளம்பெண் கழுத்தில் அணிந்து இருந்த தாலி கயிற்றால் இறுக்கி அவரை கொலை செய்ய முயன்றார். அப்போது அவரிடம் இருந்து தப்பிய இளம்பெண் இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டார்
    • பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பரம்பிக்குளம்-ஆழியார் வடிநில கோட்டப்பகுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின்கீழ் புதிய ஆயக்கட்டு பாசனப்ப ரப்பு கிளை கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.

    இதன்ஒருபகுதியாக ஆனைமலை வட்டாரத்தில் தென்சங்கம்பாளையம், சோமந்துரை, பெத்த நாயக்கனூர், அங்க லக்குறிச்சி, ஜல்லிப்பட்டி, கரியஞ்செட்டிபாளையம், ஆத்துப்பொள்ளாச்சி ஆகிய இடங்களில் ரூ.21.33 லட்சம் மதிப்பிலும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் மக்கினாம்பட்டி, ஊஞ்ச வேலம்பட்டி, ஜமீன் கோட்டம்பட்டி, சோள பாளையம், கோலார்பட்டி, கூலநாயக்கன்பட்டி, கஞ்சம்பட்டி, தென்குமார பாளையம், எஸ்.மலை யாண்டிபட்டிணம், பாலவூர், நாட்டுக்கல்பாளையம், சிங்காநல்லூர், ஆம்பாரம்பாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.11.89 லட்சம் மதிப்பிலும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் அய்யம்பாளையம், போடிபாளையம், மண்ணூர், திம்மங்குத்து, நல்லுத்துக்குளி ஆகிய பகுதிகளில் ரூ.4.83 லட்சம் மதிப்பிலும், சுல்தான் பேட்டை வட்டாரத்தில் செஞ்ரிசேரிப்புதூர், கம்மாளப்பட்டி, தாளக்கரை ஆகிய பகுதிகளில் ரூ.5.41 லட்சம் மதிப்பிலும் என ஒட்டுமொத்தமாக ரூ.43.46 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆயக்கட்டு பாசனப்பரப்பு கிளைக்கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் நேற்று பொள்ளாச்சி பகுதிக்கு வந்திருந்தார். அப்போது அவர் அங்கு நடக்கும் புதிய ஆயக்கட்டு பாசனப்பரப்பு கிளைக்கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன் பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

    மாவட்ட கலெக்டருடன் ஆய்வின்போது வடடார வளர்ச்சி அதிகாரிகள் பாலசுப்பிரமணியன், லதா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கொலை செய்து விட்டு தப்பியோடிய வாலிபரை தேடி வந்தனர்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

    பொள்ளாச்சி,

    கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கோட்டாம்பட்டி மாகாளி யம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 32). கூலித் தொழிலாளி.

    இவருக்கு கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    இதன் காரணமாக ரஞ்சித்குமார் கடந்த சில வருடங்களாக அந்த பகுதி யில் தனியாக வசித்து வந்தார்.

    இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த கோபாலகி ருஷ்ணன் (38). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவி ல்லை. இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ரஞ்சித்கு மாருக்கு தேவையான உதவிகளை அவர் செய்து வந்தார்.

    வார விடுமுறை நாட்களில் இவர்கள் 2 பேரும் ரஞ்சித்குமாரின் வீட்டில் வைத்து ஒன்றாக மது குடிப்பதும், ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றுவதும் வழக்கம்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் ரஞ்சித்குமார் மது வாங்கி கொண்டு, கோபால்கிருஷ்ணன் வீட்டிற்கு சென்றார். அங்கு 2 பேரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தினர்.

    அப்போது ரஞ்சித்குமார், கோபாலகிருஷ்ணனின் தாய் பற்றி தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஒருவ ரையொருவர் சரமாரி யாக தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த கோபாலகிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியில் வந்தார்.

    தனது தாயை திட்டியதால் ஆத்திரத்தில் இருந்த கோபாலகிருஷ்ணன், வீட்டின் முன்பு கிடந்த கல்லை எடுத்து கொண்டு உள்ளே சென்று, ரஞ்சித்குமாரை தாக்கினார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரஞ்சித்குமார் ரத்த வெள்ள த்தில் மயங்கி கீழே விழு ந்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத கோபால கிருஷ்ணன் கல்லால் ரஞ்சித்குமாரின் முகத்திலும் சரமாரியாக தாக்கினார்.இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரஞ்சித்குமார் இறந்து விட்டதால் அதிர்ச்சியான கோபாலகிருஷ்ணன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    பின்னர் தனது உறவினர் ஒருவரை போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்ப வங்களை தெரிவி த்தார். அவர் உடனடியாக கோட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ரஞ்சித்கு மாரின் உடலை பார்வை யிட்டு, விசாரணை மேற்கொ ண்டனர். மேலும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனையில் அவர் அடித்து கொல்ல ப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கொலை செய்து விட்டு தப்பியோடிய கோபாலகிருஷ்ணனை தேடி வந்தனர்.இந்த நிலையில் கோபால கிருஷ்ணன், அந்த பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் வரவே விரைந்து சென்று போலீசார் அவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது தனது தாயை பற்றி தவறாக பேசியதால் அடித்து கொன்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகி றார்கள்.மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

    • ஐஸ்வர்யாவின் தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தங்கை இறந்ததால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது23). இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் ஐஸ்வர்யாவின் தங்கை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கை இறந்ததில் இருந்து ஐஸ்வர்யா மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார்.

    மேலும் அவர் இறந்த துக்கம் தாங்காமல் வேதனைப்பட்டார். சம்பவத்தன்று ஐஸ்வர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

    • கோவையில் டாப்சிலிப் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
    • விடு முறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப், கவியருவி, சின்னகல்லார், பரம்பிகுளம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன.

    எனவே கோவை மட்டு மின்றி வெளிமாவட்ட ங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனை மலை புலிகள் காப்பக சுற்றுலா தலங்களில் ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்ப சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். விடு முறை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் குறிப்பாக வால்பாறை செல்லும் சுற்றுலா பயணி கள் பலரும், போக்கு வரத்து சாலைக்கு வெகுஅருகில் உள்ள கவியருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகின்ற னர்.

    இங்கு மழை காலத்தி ன்போது, அருவியில் தண்ணீர் வரத்து அதிகளவில் இருக்கும். அப்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.

    கவியருவியில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. எனவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் அங்கு போதிய மழை இல்லை. வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    எனவே கவியருவியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் இறுதிவரை நீர்வீழ்ச்சியின் ஓரத்தில் நூல் போல வந்து கொண்டு இருந்த தண்ணீர் வரத்து, கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் முற்றிலுமா க நின்றுபோ னது.

    எனவே கவியருவிக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டது.

    அங்கு வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கவியருவிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 

    • உக்கடம்-ஆத்துப்பாலம் 2-ம் கட்ட மேம்பால பணிகள் விரைவில் தொடங்கும்
    • உக்கடம்-கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கோவை, மே.22-

    கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரள மாநிலம் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது.

    மேம்பாலம்

    இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.

    முதல் கட்டமாக, உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    உக்கடம்-கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மேலும், உக்கடம் பஸ் நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

    அதே போல் உக்கடம் பஸ் நிலையம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளும் 90 சதவீதம் நிறைவடைந்து ள்ளன.

    2-ம் கட்ட மேம்பாலம் பணிகள்

    இதனிடையே, ரூ.265.44 கோடியில் உக்கடம்-ஆத்துப்பாலம் 2-ம் கட்ட மேம்பாலம் நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணி நீட்டிப்பின் மூலம் ஆத்துப்பாலத்தினை கடந்து பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இறங்கும் வகையிலும், உக்கடம் சந்திப்பில் திருச்சி சாலைக்கு செல்லும் வகையில் இறங்குதளமும் அமைக்கப்பட உள்ளது.

    இந்த மேம்பால நீட்டிப்பு மூலம் 2.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது. உக்க டத்தில் ரூ.233 கோடியில் 1.46 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல்கட்ட மேம்பாலம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது.

    ஆனால் 2-ம் கட்ட மேம்பால பணிகள் நிலம் கையெகப்படுத்தும் பணி காரணமாக பாதிக்கப்ப ட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் பில்லர் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் அதனை அடுத்து வரும் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் நிலம் கையெகப்படுத்தும் பணிகள் கிடப்பில் உள்ளது. இதன் காரணமாக மேம்பால பணிகள் கடந்த சில மாத காலமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    விரைவில் தொடக்கம்

    இதுகுறித்து அரசுதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில், உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால த்தில் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் 2 இடங்களில் ஏறு தளமும், 2 இடங்களில் இறங்குதளமும் 5.50 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்படுகிறது. 2-ம் கட்ட மேம்பால பணிகளுக்காக நொய்யல் ஆற்றில் பில்லர் அமைக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. 2-ம் கட்ட மேம்பால பணிகள் தொடர்பாக பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் நிலம் கையெகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்றார்.

    • இளம்பெண் மில்லில் வேலை பார்த்த திருமணமான வாலிபரை காதலித்தார்.
    • காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வர் 24 வயது இளம்பெண்.

    இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மலுமச்ச ம்பட்டியில் உள்ள மில்லில் வேலைக்கு சென்றார். அப்போது இளம்பெ ண்ணுக்கு அதே மில்லில் வேலை பார்த்த திருமண மான வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. இளம்பெண் அடிக்கடி அந்த வாலிபருடன் பேசி பழகி வந்தார்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெ ண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் திருமணமான வாலிபருடன் பழகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் வேலைக்கு செல்வதயைும் நிறுத்தி விட்டனர். இள ம்பெண்ணி ன் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மணமகனை தேடி வந்தனர். சம்பவ த்தன்று இளம்பெண்ணின் வீட்டிற்கு மணமகனின் வீட்டார் பெண் பார்க்க வருவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்து வந்தனர்.

    அப்போது வீட்டில் இருந்த இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இளம்பெ ண்ணை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    எனவே அவர்கள் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • நாகரத்தினம் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
    • போலீசார் இந்திரராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    பொள்ளாச்சி அருகே நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் நாகரத்தினம் (35). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நாகரத்தினம் காலையில் வேலைக்கு சென்றார். இதனையடுத்து இவரது மனைவி வீட்டைப் பூட்டி விட்டு சாவியை குளியலறையில் வைத்துவிட்டு நுங்கு விற்பனைக்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் பேரூர் கோவிலுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்த நகைகளை சரிபார்த்தனர். அப்போது அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நகைகளை திருடியது கஞ்சபட்டி செட்டியார் காலனியை சேர்ந்த இந்திரராஜ் (33) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 30-க்கும் மேற்பட்ட காடர் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறார்கள்.
    • வீடுகளுக்கு மின்சாரம், டிஜிட்டல் கல்வி ஆகியவை வழங்கப்படு கின்றன.

     பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உலாந்தி வனச்சர கத்தில் பரம்பிக்குளம் செல்லும் வழியில் எருமைபாறை வனக்கிராமம் உள்ளது. ஆனைமலை குன்று காடுகளை பூர்வீகமாக கொண்ட 30-க்கும் மேற்பட்ட காடர் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறார்கள்.

    தேன் சேகரிப்பு, கிழங்கு தோண்டுதல், மிளகு, மூலிகை சேகரிப்பு மற்றும் சிறு வன மகசூல் ஆகிய வற்றை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

    இந்தநிலையில் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள பழங்குடியின கிராமங்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரி டாப்சிலிப்பில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தி ன் மாவட்ட செயலாளர் பரமசிவம் கூறியதாவது:-

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு அருகே கேரள மாநிலத்தின் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள், நடைபாதைகள், வீடுகளுக்கு மின்சாரம், டிஜிட்டல் கல்வி ஆகியவை வழங்கப்படு கின்றன. ஆனால் இங்குள்ள பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர அரசு மறுக்கிறது. குறிப்பாக எருமை பாறை பழங்குடியின கிராமத்துக்கு மின் இணைப்பு வழங்க மின் மாற்றி அமைக்கப்பட்டும், இன்று வரை மின் இணைப்பு வழங்கவில்லை.

    கோழிகமுத்தி, கூமாட்டி கிராமங்களுக்கு நிலத்தடி யில் புதை வட கம்பி அமைத்து மின் இணைப்பு வழங்க வேண்டும். மேலும் சாலை வசதிகளை மேம்படு த்தி தர வேண்டும். பழங்குடி யினர் மேம்பாட்டுக்கு என வன த்துறை சோதனைச்சா வடி களில் வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்ப டுகிறது.

    உலாந்தி வனச்சரகத்தில் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். வனத்துறையில் பணிபுரியும் பழங்குடியின ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு அளித்த இலவச பொருட்களான இலவச டி.வி., மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றுக்கு மலர் வளையம் வைத்து உலாந்தி வனச்சரகர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி

    திருப்பூர் தண்ணீர் பந்தலை சேர்ந்த 29 வயது வாலிபர். இவர் அந்த பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    வாலிபர் அனைமலையில் உள்ள தனது தாய் மாமா வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். அப்போது வாலிபர் தனது தாய் மாமன் மகளான பிளஸ்-1 படிக்கும் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    நாளுக்கு நாள் வாலிபரின் தொல்லை அதிகமாகவே மாணவி இது குறித்து தனது தாயிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பிளஸ்-1 மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 29 வயது வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    • சாலையின் நடுவே வாலிபர் ஒருவர் மொபட்டில் குடிபோதையில் நின்றிருந்தார்.
    • போலீசார் புகாரின் பேரில் பஞ்சலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை

    ேகாவை அங்காளகுறிச்சி என்.ஜி.கே.நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). அரசு பஸ் டிரைவர். இவர் சம்பவத்தன்று பஸ்சை ஆர்.எம்.புதூரில் இருந்து பொள்ளாச்சிக்கு ஓட்டி சென்றார்.

    அப்போது பஸ் கோட்டூர் பஞ்சாயத்து அலுவலம் வீதி அருகே சென்றபோது சாலையின் நடுவே வாலிபர் ஒருவர் மொபட்டில் குடிபோதையில் நின்றிருந்தார். அதனை பார்த்த பஸ் டிரைவர் ஜெகநாதன் அந்த வாலிபரிடம் ஓரமாக நில்லுங்கள். சாலையில் வாகனங்கள் அதிகமாக செல்கிறது என அறிவுரை கூறினார்.

    இதனால் அந்த வாலிபர் ஜெகநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த வாலிபர் சாைலயில் இருந்த கல்லை எடுத்து பஸ் மீது வீசினார். இதில் பஸ்சின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் உடனே கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் கோட்டூரை சேர்ந்த பஞ்சலிங்கம் (38) என்பதும், கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அரசு பஸ் டிரைவர் ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில் பஞ்சலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் நடவு செய்ய இலவச மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ள வனத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
    • விவசாயிகள் மரக்கன்று தேவைப்பட்டால் நிலத்தின் சிட்டா, உரிமையாளரின் ஆதார் நகல், ஒரு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    பொள்ளாச்சி:

    வனத்துறை சார்பில் தேக்கு, ஈட்டி, சவுக்கு, செம்மரம், நாவல் மற்றும் பல்வேறு வகையான நாற்றுக்கள் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டுள்ளன.

    இந்த நாற்றுக்களை விவசாயிகள், தன்னார்வலர்கள் மற்றும் வீடுகளில் வளர்க்க விரும்புபவர்கள் வனத்துறையினரிடம் சென்று விண்ணப்பித்தால் இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

    வரும் ஆகஸ்ட் மாத இறுதி முதல் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. விவசாயிகள் மரக்கன்று தேவைப்பட்டால் நிலத்தின் சிட்டா, உரிமையாளரின் ஆதார் நகல், ஒரு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    அதேபோல், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றில் நாற்றுகள் நடவு செய்ய விரும்பினால் அந்த இடத்தின் சிட்டா, கல்வி நிறுவனங்களின் லெட்டர் பேடில் கோரிக்கை கடிதம், உரிமையாளர் புகைப்படம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    தன்னார்வலர்கள் என்றால் பொது இடங்களில் நடவு செய்ய வேண்டுமென்றால் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகள் ஊராட்சி தலைவர்கள் அல்லது பேரூராட்சி தலைவர்களின் கடிதம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு கோவை வனவியல் விரிவாக்க கோட்டம் 9791661116 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    ×