search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "runing"

    • இளம்பெண் மில்லில் வேலை பார்த்த திருமணமான வாலிபரை காதலித்தார்.
    • காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வர் 24 வயது இளம்பெண்.

    இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மலுமச்ச ம்பட்டியில் உள்ள மில்லில் வேலைக்கு சென்றார். அப்போது இளம்பெ ண்ணுக்கு அதே மில்லில் வேலை பார்த்த திருமண மான வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. இளம்பெண் அடிக்கடி அந்த வாலிபருடன் பேசி பழகி வந்தார்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெ ண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் திருமணமான வாலிபருடன் பழகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் வேலைக்கு செல்வதயைும் நிறுத்தி விட்டனர். இள ம்பெண்ணி ன் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மணமகனை தேடி வந்தனர். சம்பவ த்தன்று இளம்பெண்ணின் வீட்டிற்கு மணமகனின் வீட்டார் பெண் பார்க்க வருவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்து வந்தனர்.

    அப்போது வீட்டில் இருந்த இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இளம்பெ ண்ணை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    எனவே அவர்கள் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ×