search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student suicide attempt"

    • உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • தற்கொலை முயற்சி குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கே.புதுக்கோட்டை மொட்டணம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நடுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    அதேபள்ளியில் படித்த சக்திவேல் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சக்திவேல் பிளஸ்-2 முடித்துவிட்டு தற்போது கவரிங் கடையில் வேலைபார்த்து வருகிறார். வாரவிடுமுறை நாட்களில் இவர்கள் இருவரும் வெளியே செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது அவர்களது புகைப்படங்களை சக்திவேல் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

    இதைபார்த்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் தனது மகளை கண்டித்துள்ளனர். மேலும் இனிமேல் சக்திவேலுடன் பழகக்கூடாது என்றும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி பிரேக் ஆயிலை குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவனை ஆசிரியர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • மாணவனின் தற்கொலை முயற்சி குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை நீலாம்பூர் அருகே உள்ள குளத்தூரை சேர்ந்தவர் 12 வயது சிறுவன். இவர் அந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்ததும் நண்பர்களுடன் வளாகத்தில் விளையாடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது மாணவன் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் ஜடையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி ஆசிரியையிடம் கூறினார். ஆசிரியை மாணவனை அழைத்து கண்டித்தார். பின்னர் இது குறித்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனால் பயந்த மாணவன் பள்ளியில் உள்ள 2-வது மாடிக்கு சென்றார். அங்கு இருந்து கீழே குதித்தார். இதனை பார்த்து சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவனை ஆசிரியர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு மாணவனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விரக்தியடைந்த மாணவர் திடீரென 80 அடி உயரம் கொண்ட கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
    • மாணவருக்கு இடுப்பு மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. எலும்புகளும் உடைந்தன.

    கோவை:

    கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவர்.

    இவர் கோவை வேலந்தாவளம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் மாதிரி தேர்வு நடந்தது. அப்போது மாணவர் தேர்வு எழுதும் போது காப்பியடித்ததாக தெரிகிறது.

    இதனை தேர்வு மையத்தில் பணியில் இருந்த 2 பேராசிரியர்கள் பார்த்து விட்டனர். உடனே அவர்கள் மாணவரை தேர்வு மையத்தில் இருந்து வெளியே அனுப்பினர்.

    மேலும் தேர்வில் காப்பியடித்தற்காக மாணவரிடம் உனது பெற்றோரை அழைத்து கொண்டு கல்லூரிக்கு வர வேண்டும் என எச்சரித்தனர். ஆனால் மாணவர் பெற்றோரை அழைத்து வரவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாணவர் வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தார். அப்போது பேராசிரியர்கள் அவரிடம் மீண்டும் நீ உனது பெற்றோரை அழைத்து கொண்டு வா என தெரிவித்தனர்.

    இதனால் விரக்தியடைந்த மாணவர் திடீரென 80 அடி உயரம் கொண்ட கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. எலும்புகளும் உடைந்தன.

    வலியால் மாணவர் அலறி துடித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த கல்லூரி நிர்வாகத்தினர் மாணவரை மீட்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே கல்லூரி மாடியில் இருந்து மாணவர் குதித்த தகவல் அங்கு படிக்கும் சக கல்லூரி மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவியது. இதையடுத்து 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவர் கீழே குதித்ததற்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த தகவல் அறிந்ததும் கே.ஜி.சாவடி போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து கே.ஜி.சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 14 வயது மாணவர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • மாணவர் அறிவியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து இருந்தார்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 18-ந் தேதி பள்ளியில் 2-வது திருப்புதல் தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவில் மாணவர் அறிவியல் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து இருந்தார். இதனை தனது பெற்றோர்கள் கண்டிப்பார்கள் என அவர் நினைத்தார். இதனால் பயந்த மாணவர் வீட்டிற்கு திரும்பினார். பின்னர் வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்ற அவர் அங்கு இருந்த எறும்பு பொடியை கரைத்து குடித்தார். வெளியே வந்த அவர் வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்து அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக தனது மகனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு மாணவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக பள்ளியில் ஆசிரியருக்கும், மாணவிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
    • சொந்த பிரச்சினைகளால் அவர் தற்கொலைக்கு முயன்று உள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி இறந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கலவரமாக மாறியது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேலத்தில் பிளஸ்-2 மாணவி ஒருவர் இன்று பள்ளிகூட வகுப்பு மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம் மாவட்டம் மேச்சேரியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மேச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

    6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவியின் தந்தை இறந்துவிட்ட நிலையில் அவரது பெரியப்பா படிக்க வைத்து வருகிறார். அவர் தினமும் மாணவியை பள்ளியில் விட்டு வருவது வழக்கம்.

    அதன்படி இன்று காலையில் அவரது பெரியப்பா மாணவியை பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு வந்தார். பள்ளியில் இறை வணக்கத்துக்கு செல்லாமல் அமர்ந்திருந்த மாணவி திடீரென பள்ளிக்கூடத்தின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். 2 கால்களும் முறிந்தன.

    இதை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். சக மாணவிகள் கதறி அழுதனர்.

    உடனடியாக மாணவியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இது பற்றிய தகவல் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து மாணவியிடம் தைரியமாக இருக்கும்படி ஆறுதல் கூறினார். மாணவிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் செய்து கொடுக்கும்படி டாக்டர்களிடம் அறிவுறுத்தினார்.

    மேலும் டி.ஆர்.ஓ. மேனகா, மருத்துவமனை டீன் டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி, சூப்பிரண்டு டாக்டர் தனபால், துணை போலீஸ் கமிஷனர் சவுமியா உள்ளிட்டோர் நேரில் சென்று மாணவிக்கு ஆறுதல் கூறினார்கள். மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக பள்ளியில் ஆசிரியருக்கும், மாணவிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சொந்த பிரச்சினைகளால் அவர் தற்கொலைக்கு முயன்று உள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதலிக்க சொல்லி வாலிபர் மிரட்டல் விடுத்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை கக்கன்புதூரைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி கவிதா (வயது 39). இவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் தற்போது நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

    எனது 2-வது மகள் நாகர்கோவிலில் உள்ள பள்ளிக்கூடத்தில் 12-ம் வகுப்பு படித்தபோது கக்கன்புதூரைச் சேர்ந்த வசந்தராஜன் (21) என்ற வாலிபர் எனது மகளை பின் தொடர்ந்து வந்து காதலிப்பதாக கூறி உள்ளார். எனது மகளையும் காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார்.

    இதனால் நான் அந்த வாலிபரையும், எனது மகளையும் கண்டித்தேன். பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்கு சென்ற பிறகும் எனது மகளை அவர் பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி வந்தார். திருமணம் செய்வதாகவும் கூறினார்.

    மேலும் தன்னை திருமணம் செய்யாவிட்டால் உனது குடும்பத்தோடு உன்னை வாழ விட மாட்டேன் என்றும் எனது மகளை மிரட்டி வந்தார்.

    இந்தநிலையில் கடந்த வாரம் வசந்தராஜனும், அவரது நண்பர் ஒருவரும் எனது வீட்டுக்கு வந்து எனது கணவரிடம் மகளை திருமணம் செய்து தரும்படி கேட்டனர். அப்படி திருமணம் செய்து கொடுக்காவிட்டால் எனது மகளின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு விடுவதாக அவர் மிரட்டினார். இதனால் கடந்த 8-ந் தேதி எனது மகள் வீட்டு கழிவறையில் வைத்து வி‌ஷம் குடித்து விட்டார். பிறகு அவர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

    அதன்பிறகும் வசந்தராஜனும், அவரது நண்பரும் தொடர்ந்து எனது மகளிடம் தகராறு செய்து வருகிறார்கள். எனவே வசந்தராஜன் மற்றும் அவரது நண்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதுபற்றி இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து வசந்தராஜன் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.

    ×