என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் அருகே காதலை கண்டித்ததால் மாணவி தற்கொலை முயற்சி
- உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- தற்கொலை முயற்சி குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கே.புதுக்கோட்டை மொட்டணம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நடுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
அதேபள்ளியில் படித்த சக்திவேல் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சக்திவேல் பிளஸ்-2 முடித்துவிட்டு தற்போது கவரிங் கடையில் வேலைபார்த்து வருகிறார். வாரவிடுமுறை நாட்களில் இவர்கள் இருவரும் வெளியே செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது அவர்களது புகைப்படங்களை சக்திவேல் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.
இதைபார்த்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் தனது மகளை கண்டித்துள்ளனர். மேலும் இனிமேல் சக்திவேலுடன் பழகக்கூடாது என்றும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி பிரேக் ஆயிலை குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்