search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drug injection"

    • இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு போதை ஊசிகள், போதை மாத்திரைகள் கேட்டது தெரிந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சேலத்தில் யார் மூலம் போதை பொருட்கள் வாங்கப்பட்டது, எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் நேற்று இரவு எஸ்பிளனேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சிறுமி, இளம் பெண் 3 வாலிபர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதையடுத்து போலீசார் சிறுமி மற்றும் இளம் பெண்ணை எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அனுப்பூரைச் சேர்ந்த சரண்யா (வயது 19) எனத் தெரிந்தது. எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சரித்திர குற்றவாளியான சின்னா என்பவர் சேலத்தில் உள்ள சரண்யாவை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு போதை ஊசிகள், போதை மாத்திரைகள் கேட்டது தெரிந்தது.

    மேலும் விசாரணையில் சரண்யாவை அழைத்து வர சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சின்னா காதலியான 16 வயது சிறுமியை அனுப்பி வைத்தது தெரிந்தது. இது தொடர்பாக அரண்மனைக்காரன் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்த போதுதான் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

    சரண்யா செல்போனை சோதனை செய்தபோது கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள் குறித்த புகைப்படங்கள் ஆவணங்கள், பண பரிமாற்றம் போன்ற தகவல் சிக்கியது.

    இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சேலத்தில் யார் மூலம் போதை பொருட்கள் வாங்கப்பட்டது, எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரூ.4.67 லட்சம் ஊராட்சி நிதியை முறைகேடு செய்த தாகவும், அந்த நிதியை திரும்ப செலுத்த வேண்டும் என உள்ளாட்சிகள் தினத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
    • கிராம சபை கூட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் போதை ஊசி பயன்பாடு குறித்தும் நடவடிக்கை எடுக்க வலியுறத்தப்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியம் சுருளிபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலக கூட்டர ங்கில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நாகமணிவெங்கடேசன் தலைமை வகித்தார்.

    துணைத்தலைவர் ஜெயந்திமாயாண்டி முன்னி லை வகித்தார். எழுத்தர் பிச்சைமணி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் பங்கேற்ற முத்துபாண்டி என்பவர் பேசும்போது, ரூ.4.67 லட்சம் ஊராட்சி நிதியை முறைகேடு செய்த தாகவும், அந்த நிதியை திரும்ப செலுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் வலியுறுத்தி உள்ளார்.

    இந்த நிதியை யார் செலுத்துவது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி வெங்கடேசன் நானே அந்த பணத்தை திருப்பி செலுத்தி விடுகிறேன் என்றார். இதனையடுத்து கூட்டம் தொடர்ந்து நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் போதை ஊசி பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் போதை ஊசி பயன்படுத்துவோர் அதிகரித்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீ சார் அதிரடி சோதனை நடத்தி சுமார் 6 பேரை கைது செய்தனர்.

    ஆனால் அதன்பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்ைல. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை ஊசி விற்பனை செய்யும் கும்பல் மதுரை, திருச்சி மாவட்ட ங்களில் இருந்து புரோக்க ர்கள் மூலம் இதனை சப்ளை செய்து வருகின்றனர். எனவே நேற்று நடந்த கிராம சபை கூட்டத்திலும் பல்வேறு ஊராட்சிகளில் போதை ஊசி பயன்பாடு குறித்து மக்கள் கவலை தெரிவித்தனர்.

    கிராமப்புறங்களில் போதை ஊசி பயன்படுத்து வோர் மற்றும் அதனை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடும் நட வடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்பனை செய்வதாக செங்குளம் காலனி கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் வந்தது.
    • தகவல் அறிந்த பாலக்கரை போலீசார், சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் செங்குளம் காலனி பால்வாடி அருகே இளைஞர்களுக்கு போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்பனை செய்வதாக செங்குளம் காலனி கிராம நிர்வாக அதிகாரி மைமூன் பீவிக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து அவர் போலீசில் புகார் செய்தார்.

    தகவல் அறிந்த பாலக்கரை போலீசார், சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போதுஅங்கு போதை மாத்திரை மற்றும் ஊசி விற்பனை செய்து கொண்டிருந்த, ஸ்ரீரங்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சதீஷ்குமார் (வயது 20) என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 29 போதை மாத்திரைகள், போதை ஊசி மருந்து, ஊசி பறிமுதல் செய்தனர்.





    • ஸ்ரீ நாதா கஞ்சா மற்றும் போதை ஊசி விற்பனை செய்பவர்களை பிடிக்க உத்தரவிட்டார்.
    • ஒருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் உட்கோட்ட பகுதிகளில் கஞ்சா, போதை ஊசி புழக்கம் அதிகமாக இருந்து வருவதால், கல்லூரி பள்ளி மாணவர்கள் அதிகமாக பயன்படுத்துவதாக தொடர்பு புகார் வந்தது. இதை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா கஞ்சா மற்றும் போதை ஊசி விற்பனை செய்பவர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி ஏஎஸ்பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் திண்டிவனம் தனிப்படை போலீசார் நேற்று திண்டிவனம் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் திண்டிவனம் பெலா குப்பம் ரோடு வசந்தபுரம் பகுதியில் ஏஎஸ்பி தனிப்படை போலீசார் சோதனை நடத்தினார்.

    அப்போது வசந்தபுரம் பகுதியை சேர்ந்த சதாம்(31) என்பவர் அவரது வீட்டில் போதை ஊசி பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவர் போதை ஊசி தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 7 குளுக்கோஸ் பாட்டில், 160 போதை மாத்திரை, 10 ஊசியுடன் கூடிய சிரிஞ்ச் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சதாமை காவல் நிலையம் அழைத்துச் சென்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா விசாரணை நடத்தினர். விசாரணையில் சதாம் அளித்த தகவலின் பேரில் திண்டிவனம் பங்களா தெருவை சேர்ந்த சூர்யா(22), கிடங்கல் 2, எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ஷாம் (19), திண்டிவனம் செஞ்சி மெயின் ரோடு மதர் சாய் தெருவை சேர்ந்த சிவா (26) ஆகியோருக்கு போதை ஊசி தொடர்ந்து சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போதை ஊசி தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் போதை ஊசிக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை சதாம் என்பவருக்கு விற்பனை செய்த மேலும் ஒருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதில் போதை ஊசி தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போவதால் மேலும் இதில் பலர் கைதாக வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போதை ஊசி பயன்படுத்து வோரின் விற்பனை செய்போரின் கைது நடவடிக்கை தொடரும் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதே போல் திண்டிவனம் காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே 50 கிராம் கஞ்சா வைத்திருந்த செஞ்சி சாலையை சேர்ந்த கௌதம்(23) மற்றும் திண்டிவனம் என்ஜிஓ காலனி பகுதியை யுவராஜ்(22), என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் ரோசணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வட ஆலப்பாக்கம் ஏரிக்கரை அருகே 60 கிராம் கஞ்சா, 10 லிட்டர் சாராயம் விற்ற நத்தமேடு பகுதியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி (22), மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கனூர் குளக்கரை அருகே கஞ்சா விற்ற மருதமலை(24), என்பவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

    கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1000-க்கு போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்து வந்த 4 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    பெங்களூர் மற்றும் வெளியூர்களில் இருந்து போதை ஊசி மருந்துகள் கோவைக்கு கொண்டு வரப்பட்டு கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி கடந்த ஏப்ரல் 23-ந் தேதி பெங்களூரில் இருந்து போதை ஊசி மருந்து அனுப்பும் அப்துல் ரகுமான்(24), மகேந்திரன்(27), அஜய்(24) ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    கும்பலின் முக்கிய புள்ளியான பெங்களூரை சேர்ந்த ஜாய் இமானுவேல்(28) என்பவரை தேடி வந்தனர். நேற்று அவரையும், அவரது கூட்டாளிகளான கோவை உக்கடத்தை சேர்ந்த முகமது சிஹாப் (22), ஜூல்பிகர் அலி(24), முகமது அனாஸ்(24) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த கும்பல் பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளை திருடி, அதை குளுக்கோசில் கலந்து கோவை கொண்டு வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்றது தெரிய வந்தது. ஒரு ஊசியை ரூ.100-க்கு வாங்கி மாணவர்களிடம் ரூ.300-ல் இருந்து ரூ.1000 வரை விற்றுள்ளனர்.

    இவர்கள் யார்-யாருக்கெல்லாம் போதை ஊசிகளை விற்பனை செய்தார்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.
    சென்னையில் கற்பழிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு, போதை ஊசி போட்டது பற்றி போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை:

    சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுமி, 17 காமக்கொடூரன்களால் கற்பழித்து சீரழிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில், இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது.

    சிறுமிக்கு பாலியல் கொடுமை நடந்த, குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பு முன்பு, பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்புக்குள் வசிப்பவர்களை தவிர வெளியாட்கள் யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. காவலாளிகளே சிறுமியை நாசமாக்கியதால் அங்கு வசிப்பவர்களுக்கு காவலாளிகள் மீதுள்ள நம்பிக்கை போய்விட்டது. இதனால் அங்கு வசிப்பவர்களே தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக காவல்பணியில் ஈடுபடுகிறார்கள். அயனாவரம் பகுதியில் வசிக்கும் ஏராளமானோர் குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து பார்த்துவிட்டு செல்கிறார்கள்.

    இந்த வழக்கு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்த வழக்கை மிகவும் கவனமாக விசாரித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த தகவல் அடிப்படையில் தான் 17 பேரையும் கைது செய்துள்ளோம். தற்போதைய நிலவரப்படி இந்த வழக்கில் 17 பேர் தான் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் சிறுமியை பெரும்பாலும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும், பள்ளிக்கு செல்லாத நேரத்திலும், தங்கள் இச்சைக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். பெரும்பாலும் கழிவறையில் வைத்தே பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.

    “நீல நிறத்தில் உள்ள போதை ஊசியை தனக்கு கத்தி முனையில் மிரட்டி போட்டுவிடுவார்கள் என்றும், போதை ஊசியைப் போட்ட உடன் மயக்க நிலை வந்துவிடும்” என்றும் சிறுமி விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், அந்த போதை ஊசியின் பெயர் என்ன? என்பது பற்றி சிறுமியால் சொல்லமுடியவில்லை. இதுபற்றி கைதான 17 பேரிடமும் விசாரித்துவிட்டோம். அவர்கள் போதை ஊசி பயன்படுத்தவில்லை என்று மறுத்துவிட்டனர். இருந்தாலும் இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். கைது செய்யப்பட்டவர்களை தேவைப்பட்டால் மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம். விரைவில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

    நேற்று இந்த வழக்கு தொடர்பாக, கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இந்த வழக்கு தொடர்பான முக்கியமான தடயங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரும், புழல் மத்திய சிறையில், தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அடைக்கப்பட்டுள்ள அறை மிகவும் பெரிய அறையாகும்.

    அவர்கள் அடைக்கப்பட்டுள்ள பகுதிக்கு மற்ற கைதிகள் செல்ல சிறை காவலர்கள் அனுமதிக்கவில்லை. மற்ற கைதிகள் இவர்களை தாக்கக்கூடும் என்பதற்காக இந்த முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    17 பேரும், மிகவும் பதற்றமாகவும், சோர்ந்த முகத்தோடும் காணப்பட்டனர். நேற்று அவர்கள் சரிவர சாப்பிடவில்லை. சாப்பிடும் நேரத்தில் கூட, அவர்களுடன் சிறை காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.  #ChennaiGirlHarassment #POCSOAct
    ×