திருச்சியில் போதை ஊசி விற்ற வாலிபர் கைது

போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்பனை செய்வதாக செங்குளம் காலனி கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் வந்தது. தகவல் அறிந்த பாலக்கரை போலீசார், சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்
திருச்சியில் போதை ஊசி விற்ற வாலிபர் கைது
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம் செங்குளம் காலனி பால்வாடி அருகே இளைஞர்களுக்கு போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்பனை செய்வதாக செங்குளம் காலனி கிராம நிர்வாக அதிகாரி மைமூன் பீவிக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து அவர் போலீசில் புகார் செய்தார்.

தகவல் அறிந்த பாலக்கரை போலீசார், சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போதுஅங்கு போதை மாத்திரை மற்றும் ஊசி விற்பனை செய்து கொண்டிருந்த, ஸ்ரீரங்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சதீஷ்குமார் (வயது 20) என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 29 போதை மாத்திரைகள், போதை ஊசி மருந்து, ஊசி பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com