search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old women"

    • கடந்த 2020-ம் ஆண்டு இட்டமொழி ரோட்டில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மூதாட்டி தங்கம்மாள் முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வந்துள்ளது.
    • இதற்கிடையே பல மாதங்களாக உதவித்தொகையை எடுக்காத தால் அந்த பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் காமராஜ்நகரை சேர்த்தவர் கூலித் தொழிலாளி பேச்சிமூத்து மனைவி தங்கம்மாள் (வயது95). கடந்த 3 வருடங்களுக்கு முன்பு முதியோர் உதவி தொகை கேட்டு சாத்தான்குளம் சமூகப் பாதுகாப்பு தாசில்தாரிடம் தங்கம்மாள் மனு கொடுத்திருந்தார்.

    அதன்பேரில் கடந்த 2020-ம் ஆண்டு இவரின் வங்கி கணக்கில் இட்டமொழி ரோட்டில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அவரது முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் வங்கி அதிகாரிகளோ மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகளோ தங்கமாளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதற்கிடையே பல மாதங்களாக உதவித்தொகையை எடுக்காத தால் அந்த பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இது குறித்து மூதாட்டி தங்கம்மாள் கூறும்போது, எனக்கு முதியோர் தொகை வந்துள்ளதா என பல முறை வங்கியிலும், தாலுகா அலுவலகத்திலும் கேட்டு வந்தேன். ஆனால் அதற்கு வங்கி அதிகாரிகளும், வருவாய்த்துறைனரும் சரியான பதிலை கூறவில்லை.

    இந்நிலையில் உறவினர் ஒருவர் மூலம் வங்கி கணக்கு புத்தகத்தை வங்கியில் உள்ள எந்திரத்தில் பதிவு செய்து பார்த்தபோது எனக்கு கடந்த ஏப்ரல் மாதம் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு அந்த பணத்தை எடுக்காததால், சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் மொத்தம் ரூ. 36 ஆயிரம் திரும்ப எடுத்து கொண்டது தெரியவந்தது. எனவே எனக்கு மீண்டும் முதியோர் உதவித் தொகை வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பி உள்ளேன். அதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

    • வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சண்முகத்தை இரும்பு கம்பியால் பலமாக தாக்கியும், நல்லம்மாளை கழுத்தை கத்தியால் அறுத்தும் கொலை செய்தனர்.
    • மர்ம கும்பலை பிடிக்க கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையம் குச்சிக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி நல்லம்மாள் என்கிற சின்னப்பிள்ளை.

    கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சண்முகத்தை இரும்பு கம்பியால் பலமாக தாக்கியும், நல்லம்மாளை கழுத்தை கத்தியால் அறுத்தும் கொலை செய்தனர். மேலும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக வீட்டுக்குள் மிளகாய் பொடிகளை தூவி விட்டு சென்றனர்.

    மர்ம நபர்கள் தாக்கியதில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முகத்தை நேற்று காலை அவரது வீட்டிற்கு வந்த உறவினர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுதொடர்பாக பரமத்திவேலூர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் வந்தனர்.

    பின்னர் சண்முகத்தை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த நல்லம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டிற்குள் பல்வேறு பகுதிகளில் கைரேகை பதிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை பிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா உத்தரவின் பேரில் கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தனிப்படையினர் சம்பவம் நடந்த சண்முகத்தின் வீடு உள்ள பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மற்றும் சம்பவ நடைபெற்ற நேரத்தில் அப்பகுதி உள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான எண்களை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தொடர்ந்து பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பு நீடித்து வருகிறது.

    • மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் மூதாட்டியை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
    • 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மூதாட்டிக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    சென்னை தி.நகர் நடேசன் பூங்கா அருகே மூதாட்டி ஒருவர் ஆதரவின்றி தவித்தார். அவரால் நடக்க முடியவில்லை. கையில் சிறிய கைத்தடியை அவர் வைத்திருந்தார். இது பற்றி அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் மூதாட்டியை மீட்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து போலீஸ் ஏட்டு தேசிங்கு அங்கு விரைந்து சென்றார். அவர் மூதாட்டிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து உதவி செய்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மூதாட்டிக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    அவரது ஆக்சிஜன் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டும் சரியான அளவில் இருந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூதாட்டியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல தேவை இல்லை என்று தெரிவித்தனர். இதனால் மூதாட்டியை போலீசார் காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தனர். இதன்படி வடபழனியில் உள்ள காப்பகத்தில் மூதாட்டி சேர்க்கப்பட்டார். போலீசாரின் இந்த சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.

    • இத்தனை வயது ஆனாலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்தார்.
    • உறவினர்கள், கிராமமக்கள் ஒன்று திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    நாகலாந்து:

    இன்றளவில் 90 வயதை தாண்டினாலே அபூர்வமாக பார்க்கப்படுகிறது. ஆனால் நாகலாந்தில் 121 வயது வரை வாழ்ந்து மறைந்து இருக்கிறார் ஒரு பெண். அவரது பெயர் புபிரே புகா. வயது முதிர்வு காரணமாக இவர் நேற்று மரணம் அடைந்தார். இத்தனை வயது ஆனாலும் இவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்தார். கண்கள் நன்றாக தெரிந்தது. காதுகளும் நன்றாக கேட்டது. இது வரை இவர் ஆஸ்பத்திரி பக்கமே சென்றது இல்லை என கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.

    புபிரே புகா மரணம் அடைந்த செய்தி அறிந்ததும் உறவினர்கள், கிராமமக்கள் ஒன்று திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர் இத்தனை வயது வரை வாழ்ந்ததை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கடந்த மாதம் நடந்த நாகாலாந்து சட்டசபை தேர்தலில் இவர் தபால் ஓட்டு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மானூர் அருகே உள்ள துப்பனாபுரத்தை சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மனைவி செல்லத்தாய் (வயது101)
    • இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து போது எதிர்பாராதவிதமாக அங்கு எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியில் இருந்த தீ ஆடையில் பற்றியது.

    நெல்லை:

    மானூர் அருகே உள்ள துப்பனாபுரத்தை சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மனைவி செல்லத்தாய் (வயது101).

    இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து போது எதிர்பாராதவிதமாக அங்கு எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியில் இருந்த தீ ஆடையில் பற்றியது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு 10 பவுன் நகைகள், ரூ. 80 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
    • நள்ளிரவு அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் லோகம்மாளின் கம்மலை பிடிங்கி சென்றனர்.

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருேக உள்ள குமரெட்டியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன்.

    இவரது மனைவி மாரியம்மாள் (வயது45). இவர் எப்போதும்வென்றான் அரசு பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இன்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ. 80 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதேபோல் பக்கத்து வீட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையா (74) என்பவர் வீட்டை பூட்டிவிட்டு கடந்த மாதம் மகனை பார்க்க சென்றார். அவரது வீட்டின் பூட்டும் இன்று உடைக்கப்பட்டு கிடந்தது.

    ஆனால் அவரது வீட்டில் நகை பணம் இல்லாததால் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டது.

    இது தொடர்பாக பசுவந்தனை போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்நிலையில் தெற்கு தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி லோகம்மாள் (60) என்பவர் காற்றுக்காக வீட்டின் வளாகத்தில் நேற்று இரவு படுத்து தூங்கினார். நள்ளிரவு அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரது கம்மலை பிடிங்கி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

    போலீசார் விசாரணையில் இதே கும்பல் தான் மற்ற 2 வீடுகளிலும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.   

    • கடையநல்லூரில் மரணமடைந்த மூதாட்டியின் கண்கள் தானம் செய்யப்பட்டது.
    • உடல் நலக்குறைவால் நேற்று காலை மரணம் அடைந்தார்.

    கடையநல்லூர்:

    கடைய நல்லூர் கிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டில் டீக்கடை நடத்தி வரும் கணேசனின் சகோதரி சண்முகத்தாய் (வயது 70 ).

    இவர் உடல்நலக்குறைவால் நேற்று காலை மரணமடைந்தார். அவரது கண்களை கடையநல்லூர் அரிமா சங்க நிர்வாகிகள் டாக்டர் சஞ்சீவி,சுப்பாராயலு, மற்றும் அரிமா உறுப்பினர்களின் முயற்சியால் தானமாக பெற்று நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுவரை கடையநல்லூர் அரிமா சங்கத்தின் சார்பில் 23 ஜோடி கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளது என அரிமா சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கொடிபங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட வேலாங்குடி கிராமத்தில்தான் சந்தனம்மாள் வாழ்ந்து வந்தார்.

    தொண்டி:

    இன்றைய உலகில் இளம் வயதிலேயே பலரும் நோய்வாய்பட்டு மருந்து, மாத்திரைகளுக்கு அடிமையாகி உள்ளனர். ஆனால் நூற்றாண்டு கடந்து நலமுடன் மூதாட்டி வாழ்ந்து தனது 132-வது வயதில் மரணத்தை சந்தித்துள்ளார்.

    இவர் நோய்வாய்பட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை என்கின்றனர் அவரது வம்சாவழியினர். 132 வயதில் மரணத்தை சந்தித்த மூதாட்டியின் பெயர் சந்தனம்மாள்.

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கொடிபங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட வேலாங்குடி கிராமத்தில்தான் சந்தனம்மாள் வாழ்ந்து வந்தார்.

    கடந்த 18.5.1889-ம் ஆண்டு பிறந்த சந்தனம்மாளின் கணவர் பெயர் ஆரோக்கியம் என்ற வேளாணி.

    இந்த தம்பதிகளுக்கு 10 குழந்தைகள்.அதில் தற்போது பிரான்சிஸ், சேசுராஜ், அருளானந்த் ஆகிய 3 மகன்களும், தேவநேசம், பாத்திமாமேரி, பாக்கியம்மேரி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். 1982-ம் ஆண்டு கணவர் ஆரோக்கியம் என்ற வேளாணி இறந்து விட்ட நிலையில் மகள் பாக்கியம் மேரியுடன் சந்தனம்மாள் வசித்து வந்தார்.

    இவருக்கு 25 பேரன், பேத்திகள் உள்ளனர். அவர்கள் மூலம் 50 கொள்ளுபேரன், பேத்திகளையும் சந்தனம்மாள் பார்த்துள்ளார். மொத்தத்தில் 4 தலைமுறைகளை சந்தித்த சந்தனம்மாளுக்கு கடந்த சில ஆண்டுகளாக வயோதிகம் காரணமாக பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது.

    ஆனாலும் அவர் எந்த ஆஸ்பத்திரிக்கும் சென்றதில்லை. மீன் குழம்பை விரும்பி சாப்பிடும் சந்தனம்மாளுக்கு கடந்த தீபாவளிக்கு பின்னர் சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் தனது 132-வது வயதில் நேற்று இறந்தார்.

    இதனை கேள்விபட்டதும் சுற்றுவட்டார மக்கள் திரண்டு வந்து சந்தனம்மாளுக்கு அஞ்சலி செலுத்தினர். 

    போரூர் அருகே வீட்டுக்குள் புகுந்த பக்கத்து வீட்டு பெண் மிளகாய் பொடி தூவி மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் குறித்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    போரூரை அடுத்த காரம்பாக்கம் சமயபுரம், 5-வது தெருவை சேர்ந்தவர் பொம்மியம்மாள் நேற்று முன்தினம் இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பொம்மியம்மாள் மீது மிளகாய் பொடியை தூவி அவர் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டார்.

    விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டது பக்கத்து வீட்டில் வசிக்கும் தனலட்சுமி என்பது தெரிந்தது. வீட்டு வேலைகள் செய்து வரும் அவர் குடும்ப வறுமையில் நகை பறிப்பில் ஈடுபட்டதாக கூறி உள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இடுப்பு எலும்பு முறிவு காரணமா சிகிச்சை பெரும் பெண் பணம் கட்டியும் முறையான சிகிச்சை கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளார்.
    சென்னை:

    சாமானியர்களுக்கு உயர் சிகிச்சை என்பது எட்டாக்கனி என்பது தெரிந்ததே.

    சாதாரண மக்களும் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் பெற வேண்டும் என்பதற்காக அரசு ஆஸ்பத்திரிகளிலும் பணம் கட்டி வைத்தியம் பார்க்கும் முறை அமுல்படுத்தப்பட்டது. இதற்காக தனி வார்டுகளே அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பணம் கட்டியும் முறையான சிகிச்சை கிடைக்காதது அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி (60). வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழை பெண். கடந்த மாதம் 16-ந்தேதி இரவு பாத்ரூம் சென்றபோது தடுமாறி விழுந்ததில் இடுப்பில் பலத்த அடிபட்டது.

    மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு சென்றபோது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 17-ந்தேதி அரசு ஆஸ்பத்திரியில் பணம் கட்டி பார்க்கும் வார்டில் சேர்ந்தார். அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதியும் இருக்கிறது.

    இடுப்பில் ‘பிளேட்’ பொருத்த வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்காக அரசு காப்பீட்டு திட்டத்தில் இருந்து ரூ.66 ஆயிரம் பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பிளேட் வரவில்லை என்று ஒரு மாதமாக சிகிச்சை நடக்கவில்லை. இப்போது தினமும் அறை வாடகையை கட்டிக் கொண்டு ஒரு மாதமாக மீனாட்சி தவித்து வருகிறார்.

    தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றால் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவற்றை சில நாட்களில் கட்டுப்படுத்தி ஆபரேசனையும் செய்து இருப்பார்கள். அங்கு சென்றால் அதிகமாக செலவாகும் என்பதால் தான் மீனாட்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து இருக்கிறார்.

    ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கும் காலதாமதம் வெளியே ஆகும் செலவை விட கூடுதலாகி விடும் என்று மீனாட்சி குடும்பத்தினர் ஆதங்கப்படுகிறார்கள். #tamilnews
    மன்னார்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கண்டிதம் பேட்டை கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவரது மனைவி சரோஜா (வயது 65). இவர்களது 2 மகன்களும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.

    முருகையன் இறந்து விட்டதால் சரோஜா மட்டும் கீழத்தெருவில் தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. சரோஜா வால் விவசாயத்தை பார்க்க முடியாது என்பதால் வேலைக்கு தொழிலாளிகளை வைத்து விவசாய பணிகளை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் சரோஜா வயலில் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்த 2 பேர் நேற்று மாலை அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தன்னிடம் வேலை பார்த்த வர்கள் என்று சரோஜாவும் அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று காபி போட்டு கொடுத்துள்ளார்.

    அவர்கள் 2 பேரும் சரோஜாவிடம் பேசி கொண்டிருந்த நேரத்தில் திடீரென கட்டையால் சரோஜாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து 10 பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    சரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து அவரை மீட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    சிவகிரி அருகே வாய்க்காலில் அடித்து வரப்பட்ட மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிவகிரி:

    சிவகிரி அருகே உள்ள கந்தசாமி பாளையத்தில் கீழ் பவானி வாய்க்காலில் உள்ளது. தற்போது கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் விடப்பட்டு உள்ளது.

    இதனால் வாய்க்காலில் அதிக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் கந்தசாமிபாளையம் ஓலக்கரை பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி பிணம் அடித்துவரப்பட்ட ஓரமாக ஒதுங்கி கிடந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சிவிகிரி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

    அங்கு இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாய்க்காலில் அடித்து வரப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? வாய்க்காலில் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×