என் மலர்
செய்திகள்

சிவகிரி அருகே வாய்க்காலில் அடித்து வரப்பட்ட மூதாட்டி பிணம்- போலீசார் விசாரணை
சிவகிரி அருகே வாய்க்காலில் அடித்து வரப்பட்ட மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள கந்தசாமி பாளையத்தில் கீழ் பவானி வாய்க்காலில் உள்ளது. தற்போது கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் விடப்பட்டு உள்ளது.
இதனால் வாய்க்காலில் அதிக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கந்தசாமிபாளையம் ஓலக்கரை பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி பிணம் அடித்துவரப்பட்ட ஓரமாக ஒதுங்கி கிடந்தது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சிவிகிரி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.
அங்கு இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாய்க்காலில் அடித்து வரப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? வாய்க்காலில் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
சிவகிரி அருகே உள்ள கந்தசாமி பாளையத்தில் கீழ் பவானி வாய்க்காலில் உள்ளது. தற்போது கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் விடப்பட்டு உள்ளது.
இதனால் வாய்க்காலில் அதிக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கந்தசாமிபாளையம் ஓலக்கரை பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி பிணம் அடித்துவரப்பட்ட ஓரமாக ஒதுங்கி கிடந்தது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சிவிகிரி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.
அங்கு இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாய்க்காலில் அடித்து வரப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? வாய்க்காலில் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story






