search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிளகாய் பொடி தூவி மூதாட்டியிடம் நகை பறித்த பக்கத்து வீட்டு பெண் கைது
    X

    மிளகாய் பொடி தூவி மூதாட்டியிடம் நகை பறித்த பக்கத்து வீட்டு பெண் கைது

    போரூர் அருகே வீட்டுக்குள் புகுந்த பக்கத்து வீட்டு பெண் மிளகாய் பொடி தூவி மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் குறித்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    போரூரை அடுத்த காரம்பாக்கம் சமயபுரம், 5-வது தெருவை சேர்ந்தவர் பொம்மியம்மாள் நேற்று முன்தினம் இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பொம்மியம்மாள் மீது மிளகாய் பொடியை தூவி அவர் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டார்.

    விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டது பக்கத்து வீட்டில் வசிக்கும் தனலட்சுமி என்பது தெரிந்தது. வீட்டு வேலைகள் செய்து வரும் அவர் குடும்ப வறுமையில் நகை பறிப்பில் ஈடுபட்டதாக கூறி உள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×