search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manoor"

    • மானூர் அருகே உள்ள மறக்குடி ரஸ்தா கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு மகேஸ்வரி (வயது 34) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
    • இன்று காலை 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதற்காக அவர்களை குளிப்பாட்ட மகேஸ்வரி ஹீட்டர் மூலமாக வாளியில் வெந்நீர் வைத்துள்ளார். அந்த வெந்நீர் சூடாகி விட்டதா என்பதை பார்ப்பதற்காக ஹீட்டரை அணைக்காமல் நீரில் கையை விட்டு பார்த்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    மானூர் அருகே உள்ள மறக்குடி ரஸ்தா கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு மகேஸ்வரி (வயது 34) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதற்காக அவர்களை குளிப்பாட்ட மகேஸ்வரி ஹீட்டர் மூலமாக வாளியில் வெந்நீர் வைத்துள்ளார். அந்த வெந்நீர் சூடாகி விட்டதா என்பதை பார்ப்பதற்காக ஹீட்டரை அணைக்காமல் நீரில் கையை விட்டு பார்த்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக மகேஸ்வரி உடலில் மின்சாரம் பாய்ந்து அவர் சரிந்து விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்துவிட்டனர்.

    இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூட்டத்தில் மானூரில் அரசு கலை கல்லூரி கொண்டு வந்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • ஊராட்சி செயல்பாடுகளில் ஒத்துழைப்பு இல்லாத ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஊராட்சிகளில் உள்ள வரி செலுத்தாத காற்றாலைகள் உடனே வரிகளை செலுத்திட நடவடிக்கை எடுத்திடவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    மானூர் யூனியனுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் மானூர் ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். செயலாளர் பீர்முகைதீன் வரவேற்றார். பொருளாளர் வெள்ளப்பாண்டி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மானூரில் அரசு கலை கல்லூரி கொண்டு வந்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    ஊராட்சி செயல்பாடுகளில் ஊராட்சி துணைத்தலைவர் கையெப்பமிடும் அதிகாரம் ரத்து செய்து விடவும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதலாக நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தப்பட்டது.

    ஊராட்சி செயல்பாடுகளில் ஒத்துழைப்பு இல்லாத ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஊராட்சிகளில் உள்ள வரி செலுத்தாத காற்றாலைகள் உடனே வரிகளை செலுத்திட நடவடிக்கை எடுத்திடவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் லோக சங்கர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டமைப்பு துணைத்தலைவர்கள் ஆஷா தேவி, சுப்பிரமணியன், இணைச்செயலாளர் சுப்புலட்சுமி, துணைச் செயலர்கள், சேர்மகனி, பராசக்தி, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • மானூர் அருகே உள்ள துப்பனாபுரத்தை சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மனைவி செல்லத்தாய் (வயது101)
    • இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து போது எதிர்பாராதவிதமாக அங்கு எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியில் இருந்த தீ ஆடையில் பற்றியது.

    நெல்லை:

    மானூர் அருகே உள்ள துப்பனாபுரத்தை சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மனைவி செல்லத்தாய் (வயது101).

    இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து போது எதிர்பாராதவிதமாக அங்கு எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியில் இருந்த தீ ஆடையில் பற்றியது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயியான முத்து 35-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.
    • தினமும் இரவு வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் ஆடுகளை அடைத்து வைப்பது வழக்கம்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள மானூர் வடக்கு ெதருவை சேர்ந்தவர் முத்து (வயது 34). விவசாயி. இவர் 35க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    தினமும் இரவு வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் ஆடுகளை அடைத்து வைப்பது வழக்கம். அதேபோல் நேற்று இரவு ஆடுகளை அடைத்து வைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றார்.

    நள்ளிரவு ஆடுகள் சத்தமிடுவதை கண்டு தொழுவத்தில் பார்த்த போது கும்பலாக வந்த நாய்கள் ஆடுகளை கடித்து கொண்டு இருந்தது. அப்போது அதனை விரட்டினார்.

    இதில் சம்பவ இடத்திலேயே 17 ஆடுகள் இறந்து கிடந்தது. மேலும் 15 ஆடுகள் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயத்துடன் அபாய நிலையில் இருந்தது. அங்கு வந்த நாய்கள் 4 ஆட்டுக்குட்டிகளையும் தூக்கி சென்றது.

    இதுதொடர்பாக முத்து மானூர் போலீசில் புகார் செய்தார். கால்நடை மருத்துவர் தினேஷ் காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

    இதுதொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, மானூர் பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாதுகாப்பு பணிக்காக நாய்களை வளர்த்து வருகிறார்கள். அந்த நாய்கள் அவ்வப்போது ஆடுகளை கடித்து வருவதோடு பொதுமக்களையும் பயமுறுத்தி வருகிறது.

    கடந்த வாரம் இதேபோல் ஒரு தோட்டத்தில் புகுந்த நாய்கள் 40 கோழிகளை கடித்து கொன்றது. தற்போது தொழுவத்தில் புகுந்து 17 ஆடுகளை கொன்றுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என விவசாயி முத்து கோரிக்கை விடுத்தார்.

    • தமிழகம் முழுவதும் 20 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணெலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
    • நெல்லை மாவட்டத்தில் மானூர் தாலுகாவில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது அறிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் 20 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணெலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    நெல்லை மாவட்டத்தில் மானூர் தாலுகாவில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று மானூர் அருகே உள்ள மேலப்பிள்ளையார்குளத்தில் தற்காலிகமாக ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கல்லூரி திறப்பு விழா காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட சுற்றுச்சூழல் அணி தி.மு.க. அமைப்பாளர் அமிதாப், கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கர், கல்லூரி முதல்வர் வனஜா, மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மானூரில் புதிதாக அமைய உள்ள இந்த அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிக்கு மதவக்குறிச்சி ஊராட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு ரூ.11.33 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

    அதுவரையிலும் தற்காலி–கமாக மேலப்பிள்ளையார்குளம் பள்ளி வளாகத்தில் கல்லூரி செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி. இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட படிப்புகள் தொடங்கப்படுகிறது.

    இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கல்லூரியில் 288 மாணவ-மாணவிகள் படிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரிக்கு அடுத்த படியாக நெல்லை மாவட்டம் மானூரில் 2-வதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்கப்படுகிறது.

    ×