search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Federation meeting"

    • அதன்படி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருப்பூரில் உள்ள டீமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
    • டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் மற்றும் கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அபரிதமாக உயர்த்தப்பட்ட மின்சார நிலைக்கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். பீக் ஹவர்ஸ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் கடந்த 16-ந் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    அந்த போராட்டத்துக்கு பிறகும் முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், இதைத்தொடர்ந்து அடுத்தகட்டமாக அடுத்த மாதம் 6-ந் தேதி ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சந்தித்து தொழில் நிலைமை குறித்து முறையிடுவது, டிசம்பர் மாதம் 4-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்துவது, டிசம்பர் மாதம் 18-ந் தேதி முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்த போராட்டம் மேற்கொள்வது என்று அறிவித்தனர்.

    அதன்படி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருப்பூரில் உள்ள டீமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் டீமா தலைவர் முத்துரத்தினம், நிட்மா இணை தலைவர் கோபிநாத் பழனியப்பன், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் மற்றும் கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடுத்த மாதம் 6-ந் தேதி, அந்தந்த மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களை அழைத்து அவர்களிடம் சிறு, குறு, நடுத்தர தொழிலை பாதுகாக்க சட்டமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும், தமிழக முதல்-அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    • கூட்டத்தில் மானூரில் அரசு கலை கல்லூரி கொண்டு வந்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • ஊராட்சி செயல்பாடுகளில் ஒத்துழைப்பு இல்லாத ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஊராட்சிகளில் உள்ள வரி செலுத்தாத காற்றாலைகள் உடனே வரிகளை செலுத்திட நடவடிக்கை எடுத்திடவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    மானூர் யூனியனுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் மானூர் ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். செயலாளர் பீர்முகைதீன் வரவேற்றார். பொருளாளர் வெள்ளப்பாண்டி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மானூரில் அரசு கலை கல்லூரி கொண்டு வந்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    ஊராட்சி செயல்பாடுகளில் ஊராட்சி துணைத்தலைவர் கையெப்பமிடும் அதிகாரம் ரத்து செய்து விடவும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதலாக நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தப்பட்டது.

    ஊராட்சி செயல்பாடுகளில் ஒத்துழைப்பு இல்லாத ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஊராட்சிகளில் உள்ள வரி செலுத்தாத காற்றாலைகள் உடனே வரிகளை செலுத்திட நடவடிக்கை எடுத்திடவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் லோக சங்கர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டமைப்பு துணைத்தலைவர்கள் ஆஷா தேவி, சுப்பிரமணியன், இணைச்செயலாளர் சுப்புலட்சுமி, துணைச் செயலர்கள், சேர்மகனி, பராசக்தி, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    ×