என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் நகை பறிப்பு
- இவர் இன்று காலை இறைச்சி வாங்க கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
- இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் அளித்தார்.
கும்பகோணம் :
கும்பகோணம் ஆரோக்கியா சாமி நகரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர் ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர். இவருடைய மனைவி சந்திரா (வயது 68). இவர் இன்று காலை இறைச்சி வாங்க கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் .
அப்போது கும்பகோணம் ஸ்ரீதர் காலனியில் சென்று கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் 2பேர் சந்திரா கழுத்தில் கிடந்த 10 பவுன் சங்கிலியை அறுத்து சென்றனர்.
இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story