search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "invite"

    • நாமக்கல் நகராட்சி பகுதிகளில் சொத்துவரி சீராய்வுப் பணிகள் முடிவுற்றுள்ளன.
    • தற்போது புதிய சொத்துவரி விதிப்புகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி ஆணையாளா் கி.மு, சுதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் நகராட்சி பகுதிகளில் சொத்துவரி சீராய்வுப் பணிகள் முடிவுற்றுள்ளன. தற்போது புதிய சொத்துவரி விதிப்புகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புதிதாக சொத்து வரி விதிக்க வேண்டிய இனங்களுக்கான விண்ணப்பங்களை நகராட்சியில் அலுவலக வேலை நாட்களில் பெற்று உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து புதிதாக வரி விதிப்பு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறினார். #Saarc #Pakistan #Modi
    இஸ்லாமாபாத்:

    சார்க் மாநாட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும். அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறினார்.



    கடைசியாக 2014-ம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் மோடி பங்கேற்றார். 2016-ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாநாடு நடைபெற இருந்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலையை விளக்கியது. வங்காளதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் பங்கேற்க மறுத்துவிட்டதால் சார்க் மாநாடு நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Saarc #Pakistan #Modi 
    வாடிகனில் உள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் வடகொரியா வருமாறு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #NorthKorea #KimJongUn #PopeFrancis #SouthKorea #MoonJaeIn #Vatican
    பியாங்யாங்:

    2000-ம் ஆண்டு அப்போதைய அதிபரான கிம் ஜாங் இல் அப்போதைய போப் ஆண்டவரான இரண்டாம் ஜான் பாலுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். அவரது அழைப்பை ஏற்று வடகொரியா வந்தார் இரண்டாம் ஜான் பால். இதுவே வரலாற்றில் வடகொரியாவுக்கு போப் ஆண்டவர் வந்த முதலும் கடைசியுமான நிகழ்வு ஆகும்.

    இந்நிலையில், தற்போதைய போப் ஆண்டவருக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை அடுத்த வாரம் வாடிகன் செல்ல இருக்கும் தென்கொரிய அதிபர் மூன் ஜே போப் ஆண்டவரிடம் தெரிவிப்பார் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வாடிகனுக்கும் வடகொரியாவுக்குமான புதிய உறவை ஏற்படுத்துவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. #NorthKorea #KimJongUn #PopeFrancis #SouthKorea #MoonJaeIn #Vatican
    ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவித்தன. #RSS #FutureBharat #RahulGandhi
    புதுடெல்லி:

    டெல்லி விஞ்ஞான் பவனில், ஆர்.எஸ்.எஸ். சார்பில், ‘பாரதத்தின் எதிர்காலம்: ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்வை’ என்ற தலைப்பில் அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசுவதுடன், முக்கிய பிரமுகர்களுடன் உரையாடுகிறார்.

    இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் அருண் குமார் நேற்று தெரிவித்தார். அவரிடம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைக்கப்படுவாரா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “பல்வேறு அரசியல் கட்சிகள், சித்தாந்தங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்படுவார்கள்” என்று கூறினார். ராகுல் காந்தி மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஜூன் மாதம், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #RSS #FutureBharat #RahulGandhi
    2019-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். #PMModi #RepublicDay #Trump
    புதுடெல்லி:

    ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26-ம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி பதவியேற்றவுடன், அமெரிக்காவுடனான நல்லுறவை மேம்படுத்தி வருகிறார். அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவை குடியரசு தின சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவித்தார்.



    அதேபோல், 2019-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவு பெற்று, தேர்தல் வரும் சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மோடியின் இந்த அழைப்பு தொடர்பாக இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என ட்ரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PMModi #RepublicDay #Trump
    பாகிஸ்தானில் ஆகஸ்ட் 11-ம் தேதி இம்ரான் கான் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த மாதம் 25-ம் தேதி நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முதன்முறையாக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இருப்பினும் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கைவசம் இல்லாததால், சுயேட்சை மற்றும் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பதவியேற்பு விழாவில் இந்திய பிரதமர் மோடி உட்பட பல்வேறு வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

    மோடிக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.



    இந்நிலையில், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு ஊடகங்களில் பேசிய தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஃபவத் சவுத்ரி, முன்னர் இம்ரான் கானின் நண்பர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், நவ்ஜோத் சித், மற்றும் இந்தி நடிகர் அமீர் கான் ஆகியோருக்கும், இந்தியா, சீனா உட்பட சார்க் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது.

    இதையடுத்து தற்போது அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளதாவும், வெளிநாட்டு தலைவர்களை விடுத்து, நண்பர்களை மட்டும் அழைத்து, தனது பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த இம்ரான் கான் விரும்புவதாவும் ஃபவத் சவுத்ரி தெரிவித்துள்ளார். #Pakistan #ImranKhan
    தி.மு.க. சார்பில், மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநில கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். #MKStalin
    சென்னை:

    தி.மு.க. சார்பில், மாநில சுயாட்சியை வலியுறுத்தும் மாநாடு தமிழ்நாட்டில் ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநில கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

    நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் இப்போதே தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டன. பா.ஜனதா தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து தேர்தல் வியூகம் வகுத்து வருகிறார். காங்கிரஸ் கட்சி அந்தந்த மாநிலங்களில் நிலவும் தற்போதைய சூழலை தங்களுக்கு சாதகமாக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளது.

    இதற்கிடையே, பா.ஜனதா, காங்கிரசுக்கு மாற்றாக 3-வது அணி உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ஆகியோர் ஈடுபட்டு உள்ளனர். இதனைத்தொடர்ந்து சந்திரசேகரராவ், சமீபத்தில் சென்னை வந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது மாநில கட்சிகளின் அதிகாரத்தை நிலைநிறுத்துவது பற்றி அவர்கள் பேசிக்கொண்டதாக தெரிகிறது.

    இந்தநிலையில் மாநில சுயாட்சியை வலியுறுத்துவது தொடர்பான மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த தி.மு.க. திட்டமிட்டு உள்ளது. அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதி அந்த மாநாடு நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். நேரிலும் கடிதம் வழங்கப்பட உள்ளது.

    ஏற்கனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மாநாட்டில் பங்கேற்குமாறு ராகுல்காந்தியை திருமாவளவன் நேரில் அழைத்த நிலையில், மு.க.ஸ்டாலினும் ராகுல்காந்திக்கு தனியாக அழைப்பு விடுத்திருப்பது தமிழக அரசியலில் பல யூகங்களுக்கு வழி வகுக்கிறது. 
    இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை சீன அதிபர் ஜின்பிங் ஏற்றுக்கொண்டதாக வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார். #SCOSummit #XiJinping #Modi
    கிங்தாவோ:

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனாவில் உள்ள கிங்தாவோ நகருக்கு சென்ற பிரதமர் மோடி மாநாட்டின் இடையே, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது பற்றியும், சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் அப்போது அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

    மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது, கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் வூகன் நகரில் சாதாரண முறையில் சந்தித்து பேசியது போல், மீண்டும் சந்தித்து பேசுவதற்காக அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருமாறு ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஜின்பிங் ஏற்றுக்கொண்டார்.

    இந்த தகவலை பின்னர் நிருபர்களிடம் தெரிவித்த வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, இரு தலைவர்களும் இந்தியாவில் எந்த தேதியில் சந்தித்து பேசுவது என்பது பற்றி தற்போது முடிவு செய்யப்படவில்லை என்று கூறினார். #SCOSummit #XiJinping #Modi 
    ஜூன் 22-ந் தேதி பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ள ஓய்வு பெறும் நீதிபதி செல்லமேஸ்வரரை பார் அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்து அழைப்பு விடுத்தபோது அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். #Justice #Chelameswar
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி ஜே.செல்லமேஸ்வர், ஜூன் 22-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அதனால், கோடை விடுமுறைக்கு முந்தைய கடைசி வேலைநாளான மே 18-ந் தேதி, அவருக்கு பிரிவு உபசார விழா நடத்த சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் முன்வந்துள்ளது.

    இதுதொடர்பாக, கடந்த வாரம், நீதிபதி செல்லமேஸ்வரை பார் அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்து அழைப்பு விடுத்தபோது, அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். பார் அசோசியேஷன் செயற்குழு உறுப்பினர்கள், நேற்று நீதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்து அவரது மனதை மாற்ற முயன்றனர். ஆயினும், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வர இயலாது என்று கூறி விட்டார்.

    இத்தகவல்களை சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் தலைவர் விகாஸ் சிங் கூறினார். நீதிபதி செல்லமேஸ்வர், தொடர்ந்து 3-வது புதன்கிழமையாக நேற்று சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லவில்லை. வழக்குகள் ஒதுக்கீடு தொடர்பாக, தலைமை நீதிபதிக்கு எதிராக பேட்டி அளித்தவர் நீதிபதி செல்லமேஸ்வர் என்பது குறிப்பிடத்தக்கது.  #Justice #Chelameswar 
    ×