search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பங்கள்"

    • குமரியில் உதவி மையம், இ-சேவை மையங்களில் திரண்ட பொதுமக்கள்
    • வருமான வரி, கள ஆய்வு உள்ளிட்ட காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    நாகர்கோவில் :

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் பெற குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கள ஆய்வு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இதில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. தகுதியான விண்ணப்பங்கள் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில் தகுதியான பயனாளிகளுக்கு கடந்த 15-ந்தேதி முதல் செல்போனில் குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. குறுஞ்செய்திகள் வந்தவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் சுமார் 75 சதவீதம் பேருக்கு குறுஞ்செய்திகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான பணம் கிடைக்காதவர்கள் மீண்டும் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் குறுஞ்செய்திகள் வராத நிலையிலும் பெண்கள் ஏராளமானோர் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் 5 ஊழியர்கள் இந்த பணிக்கு நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை, கணினி உதவியுடன் ஆன்லைனில் பார்த்து பொதுமக்களிடம் தெரிவித்தனர். வருமான வரி, கள ஆய்வு உள்ளிட்ட காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இதேபோல் தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் தாலுகா அலுவலங்களிலும் உதவி மையங்கள் இன்று முதல் செயல்பட தொடங்கியது. நாகர்கோவில் ஆர்.டி.ஓ. அலுவலகம், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் உதவி மையங்கள் இன்று முதல் திறந்து செயல்பட்டது. அதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் அந்த பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பொதுமக்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து அந்த குறைபாடுகளை எப்படி களைவது என்பது குறித்து அறிவுரைகளை வழங்கி அனுப்பினார்கள்.

    இந்த சூழலில் உதவி மையங்களில் இண்டர்நெட் சேவை திடீரென தடைபட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்திருந்த பொதுமக்களின் விவரங்களை கேட்டு, அதனை ஒரு நோட்டில் ஊழியர்கள் பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு டோக்கன் கொடுத்து அமர வைக்கப்பட்டனர்.

    இதற்கிடையில் மறு விண்ணப்பத்திற்காக ஏராளமோனார் இ-சேவை மையங்களுக்கு சென்றனர். ஆனால் அங்கு மறு விண்ணப்பத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மறு விண்ணப்பத்துடன் வந்த பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதேபோல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வந்த பணத்தை எடுப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்றதால் அங்கும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • 18 வயது நிரம்பியவர்கள் இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
    • வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் முதல் நடைபெற இருக்கிறது.

    திருப்பூர்:

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2024 பட்டியல் வருகிற அக்டோபர் மாதம் 17-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. 1-1-2024 அன்று 18 வயது நிரம்பியவர்கள் இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சுருக்க முறை திருத்த பட்டியல் வெளியான பிறகு வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் முதல் நடைபெற இருக்கிறது.

    இதற்காக திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பெயர் சேர்ப்பு, மாற்றம், திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் படிவங்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவுக்கு வந்துள்ளது. பெயர் சேர்த்தலுக்கான படிவம்-6 விண்ணப்பங்கள் 1 லட்சம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பெயர் நீக்கத்துக்கான படிவம்-7, முகவரி மாற்றம், சட்டமன்ற தொகுதி மாற்றம், திருத்தப்பணிகளுக்கான படிவம்-8 என மொத்தம் 3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில் இருந்து பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.

    • முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு பணம் வழங்க திட்டம்
    • குமரி மாவட்டத்தில்கள ஆய்வு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் 784 ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்பட்டது. 4 லட்சத்து 19 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் விண்ணப்ப படிவுகளை பூர்த்தி செய்து வழங்கி உள்ளார்கள். ஒரு லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்திசெய்து வழங்கவில்லை.

    பூர்த்தி செய்து வழங்கப்பட்ட 4 லட்சத்து 19 ஆயிரம் விண்ணப்ப படிவங்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஒரு சில விண்ணப்ப படிவங்களில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த விண்ணப்ப படிவங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 70,000 விண்ணப்பங்களும் 2-வது கட்டமாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் என 2 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்களை கள ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. அதிகாரிகள் நேரடியாக வீட்டிற்கு சென்று கள ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

    தற்பொழுது கள ஆய்வு பணி நிறைவடைந்து உள்ளது. கள ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் விண்ணப்ப படிவத்தில் தெரிவித்துள்ள தகவல்கள் அனைத்தும் உண்மைதானா என்பது குறித்த விவரங்களை கேட்டு அறிந்தனர்.

    இதன் அடிப்படையில் தற்போது 20,000 விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ஒரு லட்சத்து 90 ஆயிரம் விண்ணப்ப படிவங்களையும் மீண்டும் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே சென்னையில் 2 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் முதற்கட்டமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த விண்ணப்ப படிவங்களை மின் ஆளுமை மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அதில் 12,000 விண்ணப்ப படிவங்களுக்கு வங்கிக்கணக்கில் சில குறைபாடுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 12,000 விண்ணப்ப படிவங்களையும் சம்மந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பி உடனடியாக அந்த வங்கி கணக்கில் உள்ள குறைபாடு களை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதன் அடிப்படையில் தபால் நிலையத்தில் 12 ஆயிரம் பேருக்கு வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. கலைஞர் உரிமை திட்டத்திற்கான பணம் ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சி வருகிற 15-ந்தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் திருவட்டார் அல்லது கல்குளம் தாலுகாக்களில் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அன்று பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும் என்று தெரிகிறது. முதல் கட்டமாக குமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு கலைஞர் உரிமை திட்டத்திற்கான பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஒரு வார காலத்திற்குள் தகுதியான அனைவருக்கும் கலைஞர் உரிமை திட்டத்திற்கான பணம் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஊழியர்கள் பணம் வாங்குவதாக குற்றச்சாட்டு
    • குமரியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் வீடுகளில் ஆய்வு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படி வங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. 5 லட்சத்து 77 ஆயிரத்து 127 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப் பட்டு இருந்தது. முதல் கட்டமாக 400 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது.

    முதல் கட்ட முகாமில் 2,03,268 பேர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள். இதைத்தொடர்ந்து மீதமுள்ள 367 ரேஷன் கடைகளில் 2-வது கட்டமாக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. இதில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 752 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடந்தது. இதில் 22 ஆயிரத்து 631 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கி உள்ள னர். குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்தில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 659 பேர் பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். 1 லட்சத்து 57 ஆயிரத்து 487 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பிக் கவில்லை. பூர்த்தி செய்து வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களில் சில குளறுபடிகள் இருப்பது தெரி யவந்துள்ளது. இதையடுத்து அவற்றை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் விண்ணப்பங்களை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    70,000 விண்ணப்பங்கள் ஆய்வு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பெரும்பாலான விண்ணப் பங்களில் உள்ள குளறுபடி கள் சரி செய்யப்பட்டது. 10 சதவீத விண்ணப்ப படி வங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மேலும் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்களை கள ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்ப படி வங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ரேஷன் கடை களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்த விண்ணப்ப படிவங்களையும் நேரடியாக வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதற்கான ஆய்வு பணி தற்போது தொடங்கப் பட்டுள்ளது. வீடு வீடாக சென்று அதிகாரிகள் குழுவினர் கள ஆய்வு பணியை தொடங்கி உள்ள னர். ஒவ்வொரு ரேஷன் கடைகள் உட்பட்ட பகுதிகளிலும் 200-க்கும் மேற்பட்ட விண்ணப்ப படிவங்கள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கள ஆய்வு பணியை முடிப்பதற்கு இன்னும் தாமதமாகலாம் என்று தெரிகிறது.

    இதற்கிடையில் குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கள ஆய்வுக்கு வரும் ஊழியர்கள் விண்ணப்ப தாரர்களிடம் பணம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் விண்ணப்பித்த 50 சதவீத விண்ணப்பங்கள் கள ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ள நிலையில் மீதமுள்ள விண்ணப் பங்களை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த விண்ணப்ப படிவங்களை சென்னை யில் உள்ள மின் ஆளுமை மையத்தில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கள ஆய்வு மேற்கொண்டு வரும் விண்ணப்ப படிவங்களை அடுத்த கட்டமாக அனுப்பவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்னனர்.

    • அனைத்து துறை ஊழியர்களும் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற் கொண்டு வருகிறார்கள்.
    • விண்ணப்பபடிவங்கள் உள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து வழங்க பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்திற் கான விண்ணப்ப படி வங்கள் பொதுமக்க ளுக்கு வழங்கப்பட்டு அந்த விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட் டுள்ளது. மாவட்டம் முழுவதும் 4 லட்சத்து 19 ஆயிரம் பேர் விண்ணப் பங்களை பூர்த்தி செய்து வழங்கியுள்ளார்கள். இந்த விண்ணப்ப படிவங்களில் ஒரு சில விண்ணப்ப படிவங்களில் குறைபாடுகள் இருந்ததையடுத்து அந்த விண்ணப்ப படிவங்களை கள ஆய்வு செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

    ரேஷன் கடை ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், பொதுப்பணித் துறை, சுகாதாரத்துறை உட்பட அனைத்து துறை ஊழியர்களும் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற் கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கலெக்டர் ஸ்ரீதர் கலைஞர் உரிமை திட்ட விண்ணப்ப படி வங்கள் ஆய்வு தொடர்பாக நேரில் ஆய்வு மேற் கொண்டார். நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வயல் தெரு, இருளப்பபுரம் வட்டவிளை, வேதநகர், தாமஸ் நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.

    பூர்த்தி செய்து வழங்கப்பட்ட விண்ணப்பபடிவங்கள் உள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து வழங்க பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.

    • வருகிற 31-ந்தேதிக்குள் முடிக்க திட்டம்
    • சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் மின் ஆளுமை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படி வங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. 5 லட்சத்து 77 ஆயிரத்து 127 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு இருந்தது. முதல் கட்டமாக 400 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது.

    முதல் கட்ட முகாமில் 2,03,268 பேர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து மீதமுள்ள 367 ரேஷன் கடைகளில் 2-வது கட்டமாக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. இதில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 752 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கினார். இதைத்தொ டர்ந்து சிறப்பு முகாம்கள் கடந்த 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடந்தது.

    இதில் 22 ஆயிரத்து 631 பேர் விண்ணப்ப படி வங்களை வழங்கி உள்ளனர். குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்தில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 659 பேர் பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். 1 லட்சத்து 57 ஆயிரத்து 487 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. பூர்த்தி செய்து வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களில் சில குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து அவற்றை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் விண்ணப் பங்களை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட னர். அந்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

    ரேஷன் கார்டுதாரருடைய ஆண்டு வருமானம் மற்றும் விண்ணப்பங்களில் உள்ள குளறுபடிகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்பொழுது 40 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு சில விண்ணப்பதாரர்கள் தகுதி இல்லாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள விண்ணப்ப படிவங்களை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த பணிகளை வருகிற 31-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். கள ஆய்வு முடிக்கப்பட்ட விண்ணப்பங்களை சென்னையில் உள்ள மின் ஆளுமை மையத்திற்கு அனுப்பி வைக்கவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் மின் ஆளுமை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மின் ஆளுமை மையத்தில் பரிசீலனை செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கி உள்ளது.
    • விண்ணப்பத்தில் விடு பட்டுள்ள விவரங்களை கேட்டு அதை பதிவு செய்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதியில் இருந்து செயல்படுத்தப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 63 லட்சம் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி வழியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையாக உள்ளதா? என்பதை கண்டறியவும், விடுபட்ட விவரங்களை விண்ணப்பதாரர்களிடம் கேட்டு பெறவும் அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கி உள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள், மற்றும் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பதாரர்களிடம் விசாரித்து வருகின்றனர். வீடு சொந்த வீடா? வாடகை வீடா? என்ன வேலை பார்க்கிறார்கள். கார் இருக்கிறதா? மாத வருமானம் எவ்வளவு? மின்சார பயன்பாடு 2 மாதத்திற்கு எவ்வளவு பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதையும் பார்க்கிறார்கள்.

    விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களும், விசாரிக்கும்போது கிடைக்கும் விவரங்களும் சரிவர ஒத்துப்போகிறதா? என்பதையும் பார்க்கிறார்கள். விண்ணப்பத்தில் விடு பட்டுள்ள விவரங்களை கேட்டு அதை பதிவு செய்து கொள்கிறார்கள்.

    பெரும்பாலான வீடுகளில் மின்சார பயன்பாடு பற்றி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படாமல் உள்ளதால் மின்சார யூனிட் எவ்வளவு உபயோகப்படுத்தி உள்ளனர் என்பதையும் பார்த்து தெரிந்து கணக்கிட்டு கொள்கிறார்கள்.

    இதுபற்றி உயர் அதிகாரி கூறுகையில், தகுதியான நபர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்காகத்தான், வீடுவீடாக சரிபார்க்கும் பணி தொடங்கி உள்ளதாகவும், விண்ணப்பத்தில் சரிவர பூர்த்தி செய்யாத விவரங்களை கேட்டு பெற்று பதிவு செய்து வருகிறார்கள் என்றும் தெரி வித்தார். இந்த தரவுகள் அனைத்தும் முழுமையாக கிடைத்ததும் இதற்கென உருவாக்கப்பட்டு உள்ள சாப்ட்வேர் செயலி மூலம் ஒவ்வொரு விண்ணப்பமும் சரிபார்க்கப்படும். அதில் எந்ததெந்த விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் என்பது தானாகவே தெரிந்து விடும்.

    அந்த பட்டியல் இந்த மாத இறுதிக்குள் தயாராகி விடும். அதன்மூலம் யார்-யாருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்பது தெரிந்து விடும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • பேரூராட்சியில் புதிய நூலக கட்டிடம் கட்டுவது தொடர்பாக இடம் தேர்வு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
    • ஊராட்சி ஒன்றியம் மகளிர்க்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கிடும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் திருச்சினம்பூண்டி ஊராட்சியில் உள்ள செந்தமிழ் நகரில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும், பூதலூர் வட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் புதிய நூலக கட்டிடம் கட்டுவது தொடர்பாக இடம் தேர்வு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    புது ஊராட்சி ஒன்றியம் சிவசாமிபுரம் ஊராட்சியில் அரசு கல்லூரி கட்டுவது தொடர்பாக இடம் தேர்வு குறித்தும், பூதலூர் ஊராட்சி ஒன்றியம் கூடநாணல் ஊராட்சியில் மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருவதை குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

    திருவையாறு ஊராட்சி ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல், பூதலூர் வட்டாட்சி யர்பெர்சி யா, பேரூராட்சி செயல் அலுவலர்நெ டுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ராஜா, பொற்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்டங்களில் 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்ப டும் என அறிவித்தார்.
    • 2,77,236 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத்தி ட்டத்தின்கீழ், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் எனவும், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திடும் வகையில், மாவட்டங்களில் 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்ப டும் என அறிவித்தார். அதனடி ப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திட விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 அன்று தொடங்கி 4.08.2023 வரை நடைபெறவுள்ளது. இதில் 3,41,209 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணிகள் நடைபெ ற்று வருகிறது.

    முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்களில், முதல் 3 நாட்களில் 1,26,769 விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பெறப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் விண்ணப்ப ங்களை பதிவு செய்வதற்கு 1092 தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு முகாமிலும் பயனாளிகளின் விண்ணப்பங்களைச் சரிபார்க்கவும், பூர்த்தி செய்யப்படாத விண்ண ப்பங்களை பூர்த்தி செய்வத ற்கும் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டு ள்ளது.

    இரண்டாம் கட்ட முகாம் 5.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறவுள்ளது. இதில் 690 விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். இம்முகாமில், 2,77,236 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்.  அனைத்து முகா ம்களிலும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளான இருக்கைகள் வசதி, குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோ ருக்கான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.

    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
    • மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை

    தமிழக முதல்-அமைச்சர் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்தார்.

    மதுரை மாநகராட்சி உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் முதற்கட்டமாக கடந்த 24-ந்தேதி தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    அதன்படி மதுரை மாநகராட்சி மண்டலம் 1-க்கு உட்பட்ட பகுதிகளில் 35 இடங்களிலும், மண்டலம் 2-க்கு உட்பட்ட பகுதிகளில் 38 இடங்களிலும், மண்டலம் 3-க்கு உட்பட்ட பகுதிகளில் 182 இடங்களிலும், மண்டலம் 4-க்கு உட்பட்ட பகுதிகளில் 188 இடங்களிலும், மண்டலம் 5-க்கு உட்பட்ட பகுதிகளில் 69 இடங்களில் என மொத்தம் 512 இடங்களில் நடைபெற்று வருகிறது.

    மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 207 நியாய விலைக்கடைகள் கணக்கெடுக்கப்பட்டு மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 94 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    மதுரை மாநகராட்சி 5 மண்டலத்திற்கு உட்பட்ட 208 பள்ளி மற்றும் கல்லூரிகள், 83 சமுதாய கூடங்கள், 4 பூங்காக்கள், 72 அரசு துறை கட்டிடங்கள், 21 வழிபாட்டு தலங்கள், 116 திருமண மண்டபங்கள், 8 தனியார் குடியிருப்பு பகுதிகள் என மொத்தம் 512 பகுதிகளில் சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த முகாம் காலை 9.30 மணி முதல் மதியம் 1 வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெறும். பொதுமக்கள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களிலும் விண்ணப்பங் களை பெற்றுக்கொள்ளும் முகாம்கள் நடைபெறும்.

    எனவே மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.

    • 2-வது நாளாக இன்றும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகம்
    • நேற்று மாவட்டம் முழுவதும் 400 ரேஷன் கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடக்கிறது.

    முதல் கட்ட முகாம் நடைபெற உள்ள பகுதியில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்களை ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று வீடு வீடாக சென்று வழங்கினார்கள். நேற்று மாவட்டம் முழுவதும் 400 ரேஷன் கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கனை வழங்கினார்கள். முதல் நாளில் குமரி மாவட்டத்தில் 65 ஆயிரம் குடும்பத்தலைவிகளுக்கு விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இன்று 2-வது நாளாகவும் அகஸ்தீஸ்வரம், கல்குளம், தோவாளை தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்களை வழங்கி வருகிறார்கள். இந்த விண்ணப்ப படிவங்கள் நாளையும், நாளை மறுநாளும் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து 24-ந்தேதி சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த சிறப்பு முகாமில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

    விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யும் குடும்ப அட்டைதாரர்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மின் இணைப்பு கார்டு மற்றும் பேங்க் பாஸ்புக் ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும். இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 2-ம் கட்டமாக முகாம் நடைபெறும் பகுதியில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு அடுத்த கட்டமாக விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உரிமை தொகை பெறுவதற்காக விண்ணப்ப படிவங்கள் நேற்று முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
    • முதல் கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணிகள் நடந்தன.

    கிருஷ்ணகிரி, 

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

    இந்த திட்டம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த உரிமை தொகை பெறுவதற்காக விண்ணப்ப படிவங்கள் நேற்று முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1094 ரேஷன் கடைகளில் 5 லட்சத்து 64 ஆயிரத்து 624 ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளன. இதில் 404 ரேஷன் கார்டுகள் நீங்கலாக மற்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கலெக்டர் சரயு தெரிவித்திருந்தார்.

    அதன்படி நேற்று முதல் கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணிகள் நடந்தன. கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம் தலைமையில், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார்கள்.

    இது குறித்து சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் கூறுகையில், கலைஞர் உரிமை தொகை திட்டத்தை செயல்ப டுத்தும் தமிழக முதல் -அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள், நேரத்தில் வந்து விண்ணப்பத்தை வழங்க வேண்டும் என்றும், இந்த திட்டம் சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அப்போது அலுவலர் சண்முகம் உடன் இருந்தார்.

    ×