search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Justice Chelameswar"

    தலைமை நீதிபதி மீது புகார் கூறி அதிர்வலைகளை ஏற்படுத்திய சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு பெற்றார். #JusticeChelameswar #SC
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்தவர் செல்லமேஸ்வர்.

    கடந்த 2011-ம் ஆண்டு, அக்டோபர் 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவி ஏற்ற இவர், நேற்று பணி நிறைவு செய்து ஓய்வு பெற்றார்.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்ற நாளில் இருந்து, இவரிடம் பணியாற்றி வந்த தனிச்செயலாளர், நீதிபதி செல்லமேஸ்வர் பற்றி கூறுகையில், “அவர் ஒரு நல்ல மனிதர். நீதித்துறையின் கண்ணியத்தை நிலைநிறுத்தியவர்” என குறிப்பிட்டார்.



    நீதிபதி செல்லமேஸ்வர், இதுவரை இந்திய நீதித்துறை வரலாற்றில் இல்லாத வகையில் சக நீதிபதிகளுடன் கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி நிருபர்களை சந்தித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சரமாரியாக புகார் கூறி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவு கூரத்தக்கது. #JusticeChelameswar #SC
    ஜூன் மாதம் 22-ம் தேதி பணி ஓய்வு பெறும் உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரர், எதிர்வரும் கோடை விடுமுறையால் இன்று தனது இறுதி நாள் பணியை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் இணைந்து நிறைவு செய்தார். #JusticeChelameswar
    புதுடெல்லி:

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பதவிக்காலம் முடிவடைந்து செல்லும்போது, இறுதி பணி நாளில் தலைமை நீதிபதியுடன் இணைந்து பணியாற்றுவது மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது.

    அதன்படி ஓய்வு பெற உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரர் இன்று கடைசி பணிநாளில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் நீதிமன்ற வளாக எண் 1-ல் வழக்குகளை கையாண்டார். வழக்கமாகவே நீதிமன்ற எண் 1, எப்போதும் வழக்குகள் நிறைந்தே காணப்படும். எனினும் இன்று பெருந்திரளான வழக்கறிஞர்களும், ஊழியர்களும் அங்கு குவிந்தனர். செல்லமேஸ்வரர், தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு 11 வழக்குகளை இன்று விசாரித்தது.

    மூத்த வழக்கறிஞர் ராஜீவ் டுட்டா, வழக்கறிஞர்கள் புஷான் மற்றும் கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் நீதிபதி செல்லமேஸ்வரர் குறித்து பேசினர். அப்போது பேசிய வழக்கறிஞர் புஷான், ‘ஜனநாயகத்தை பாதுகாத்ததற்கு நன்றி’ என தெரிவித்தார்.

    மேலும், ‘உங்கள் முன்னிலையில் நிற்பதே பெருமையாக கருதுகிறேன். நமது நாடு மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாப்பில் உங்களுடைய பங்கினை இனி வரும் தலைமுறையினர் நினைவுகூர்வர்’என நெகிழ்ந்து பேசினார்.

    பணி நிறைவு பெறும் நீதிபதி செல்லமேஸ்வரரை வழியனுப்பும் விதமாக பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியை நீதிபதி செல்லமேஸ்வரர் நிராகரித்தார்.

    இதுகுறித்து கூறிய அவர், தனது சொந்த காரணங்களினாலேயே நிராகரிப்பதாகவும், இதற்கு முன்னரும் இதுபோன்ற பார்ட்டிகளில் பங்கேற்றதில்லை எனவும் தெரிவித்தபடி, பிரியாவிடை பெற்றார். #JusticeChelameswar #lastworkingday #DipakMisra
    ஜூன் 22-ந் தேதி பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ள ஓய்வு பெறும் நீதிபதி செல்லமேஸ்வரரை பார் அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்து அழைப்பு விடுத்தபோது அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். #Justice #Chelameswar
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி ஜே.செல்லமேஸ்வர், ஜூன் 22-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அதனால், கோடை விடுமுறைக்கு முந்தைய கடைசி வேலைநாளான மே 18-ந் தேதி, அவருக்கு பிரிவு உபசார விழா நடத்த சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் முன்வந்துள்ளது.

    இதுதொடர்பாக, கடந்த வாரம், நீதிபதி செல்லமேஸ்வரை பார் அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்து அழைப்பு விடுத்தபோது, அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். பார் அசோசியேஷன் செயற்குழு உறுப்பினர்கள், நேற்று நீதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்து அவரது மனதை மாற்ற முயன்றனர். ஆயினும், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வர இயலாது என்று கூறி விட்டார்.

    இத்தகவல்களை சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் தலைவர் விகாஸ் சிங் கூறினார். நீதிபதி செல்லமேஸ்வர், தொடர்ந்து 3-வது புதன்கிழமையாக நேற்று சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லவில்லை. வழக்குகள் ஒதுக்கீடு தொடர்பாக, தலைமை நீதிபதிக்கு எதிராக பேட்டி அளித்தவர் நீதிபதி செல்லமேஸ்வர் என்பது குறிப்பிடத்தக்கது.  #Justice #Chelameswar 
    ×