search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dipak Misra"

    ஆண் பெண் இடையிலான தவறான உறவு குற்றம் அல்ல என்றும், இதில் தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு 497 அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. #Adultery #Section497 #SupremeCourt
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்திய தண்டனை சட்டம் 597-வது பிரிவில் தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க வகை செய்கிறது. பெண்ணுக்கும் சமமான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தனர்.

    அப்போது ஆணுக்கு மட்டும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கும் 597-வது பிரிவு ரத்து செய்யப் படுவதாகவும் தகாத உறவு குற்றம் இல்லை என்றும் பரபரப்பு தீர்ப்பளித்தனர்.



    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:-

    கணவர் என்பவர் பெண்ணின் எஜமானர் அல்ல. ஆணுக்கு பெண் சமம். இதில் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விரோதம் ஆகும். ஆணுக்கு சமமாக பெண்களையும் நடத்த வேண்டும். இதில் பாகுபாடு காட்டுவது சட்ட விதிமீறல் ஆகும்.

    கணவன்-மனைவி இடையே விவாகரத்து நடக்க தகாத உறவு காரண மாகிறது. தகாத உறவு வி‌ஷயத்தில் அதில் யாரும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் அது குற்றம் இல்லை. தகாத உறவில் விவாகரத்து நடக்கலாம். யாரும் தற்கொலைக்கு தூண்டப்படக்கூடாது.

    திருமணமான பெண் கணவருடன் மட்டுமல்ல, வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தால் அது குற்றம் இல்லை. மேற்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் தகாத உறவு குற்றம் இல்லை. எனவே ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் 597-வது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அது ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார். #Adultery #Section497 #SupremeCourt

    ஜூன் மாதம் 22-ம் தேதி பணி ஓய்வு பெறும் உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரர், எதிர்வரும் கோடை விடுமுறையால் இன்று தனது இறுதி நாள் பணியை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் இணைந்து நிறைவு செய்தார். #JusticeChelameswar
    புதுடெல்லி:

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பதவிக்காலம் முடிவடைந்து செல்லும்போது, இறுதி பணி நாளில் தலைமை நீதிபதியுடன் இணைந்து பணியாற்றுவது மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது.

    அதன்படி ஓய்வு பெற உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரர் இன்று கடைசி பணிநாளில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் நீதிமன்ற வளாக எண் 1-ல் வழக்குகளை கையாண்டார். வழக்கமாகவே நீதிமன்ற எண் 1, எப்போதும் வழக்குகள் நிறைந்தே காணப்படும். எனினும் இன்று பெருந்திரளான வழக்கறிஞர்களும், ஊழியர்களும் அங்கு குவிந்தனர். செல்லமேஸ்வரர், தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு 11 வழக்குகளை இன்று விசாரித்தது.

    மூத்த வழக்கறிஞர் ராஜீவ் டுட்டா, வழக்கறிஞர்கள் புஷான் மற்றும் கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் நீதிபதி செல்லமேஸ்வரர் குறித்து பேசினர். அப்போது பேசிய வழக்கறிஞர் புஷான், ‘ஜனநாயகத்தை பாதுகாத்ததற்கு நன்றி’ என தெரிவித்தார்.

    மேலும், ‘உங்கள் முன்னிலையில் நிற்பதே பெருமையாக கருதுகிறேன். நமது நாடு மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாப்பில் உங்களுடைய பங்கினை இனி வரும் தலைமுறையினர் நினைவுகூர்வர்’என நெகிழ்ந்து பேசினார்.

    பணி நிறைவு பெறும் நீதிபதி செல்லமேஸ்வரரை வழியனுப்பும் விதமாக பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியை நீதிபதி செல்லமேஸ்வரர் நிராகரித்தார்.

    இதுகுறித்து கூறிய அவர், தனது சொந்த காரணங்களினாலேயே நிராகரிப்பதாகவும், இதற்கு முன்னரும் இதுபோன்ற பார்ட்டிகளில் பங்கேற்றதில்லை எனவும் தெரிவித்தபடி, பிரியாவிடை பெற்றார். #JusticeChelameswar #lastworkingday #DipakMisra
    நாடு முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான விசாரணை குழுவை 2 மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என அனைத்து ஐகோர்ட்டுகளுக்கும் சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரே மாவட்ட கோர்ட் வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது சில வழக்கறிஞர்கள் தன்னை தாக்கியதாக பெண் பயிற்சி வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இன்று விசாரித்தனர்.

    வழக்கு விசாரணையின் போது, 2013-ம் ஆண்டு இயற்றப்பட்ட நாட்டில் உள்ள அனைத்து ஐகோர்ட், மாவட்ட கோர்ட்டுகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான விசாரணைக்குழு இரண்டு மாதங்களில் அமைக்க வேண்டும் என அனைத்து ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    டெல்லி ஐகோர்ட் மற்றும் டெல்லியில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் ஒரே வாரத்தில் இந்த விசாரணை குழு அமைக்க வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

    பெண் வழக்கறிஞர் அளித்த புகாரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், பட்டியாலா ஹவுஸ் கோர்ட்டுக்கு வழக்கு விசாரணையை மாற்றினர். மேலும், பார் கவுன்சிலை சேர்ந்தவர்கள் இந்த வழக்கு விசாரணையில் தலையிட வேண்டாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    2013-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்படி பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் மற்றும் உடல்ரீதியிலான தொந்தரவுகளை தடுக்க பணியிடங்களில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்பதாகும். #SupremeCourt
    ×