search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pyongyang"

    வாடிகனில் உள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் வடகொரியா வருமாறு அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #NorthKorea #KimJongUn #PopeFrancis #SouthKorea #MoonJaeIn #Vatican
    பியாங்யாங்:

    2000-ம் ஆண்டு அப்போதைய அதிபரான கிம் ஜாங் இல் அப்போதைய போப் ஆண்டவரான இரண்டாம் ஜான் பாலுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். அவரது அழைப்பை ஏற்று வடகொரியா வந்தார் இரண்டாம் ஜான் பால். இதுவே வரலாற்றில் வடகொரியாவுக்கு போப் ஆண்டவர் வந்த முதலும் கடைசியுமான நிகழ்வு ஆகும்.

    இந்நிலையில், தற்போதைய போப் ஆண்டவருக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை அடுத்த வாரம் வாடிகன் செல்ல இருக்கும் தென்கொரிய அதிபர் மூன் ஜே போப் ஆண்டவரிடம் தெரிவிப்பார் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வாடிகனுக்கும் வடகொரியாவுக்குமான புதிய உறவை ஏற்படுத்துவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. #NorthKorea #KimJongUn #PopeFrancis #SouthKorea #MoonJaeIn #Vatican
    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையே இன்று சந்திப்பு நடைபெற்றதை அடுத்து, ட்ரம்ப் உடனான 2-வது கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #MikePompeo #KimJongUn #NorthKorea #US
    பியாங்யோங்:

    ஜப்பான், வடகொரியா, சீனா உள்ளிட்ட  தெற்காசிய நாடுகளில் அமெரிக்க வெளியுறத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    வடகொரியா-அமெரிக்கா இடையில் சமீபத்தில் சிங்கப்பூரில் செய்யப்பட்ட அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவது தொடர்பாக  வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை வலியுறுத்துவது அவரது பயணத்தின் அதிமுக்கிய நோக்கமாக உள்ளது.

    இதையடுத்து இன்று காலை வடகொரிய தலைநகர் பியாங்யோங்கில் அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ இடையேயான சந்திப்பு நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.



    இந்த சந்திப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை எனினும், இந்த சந்திப்பு இனிமையான ஒன்றாக அமைந்ததாக மைக் பாம்ப்பியோ தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்பின்போது போடப்பட்ட அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இருநாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்பதே தனது லட்சியம் என குறிப்பிட்டுள்ள மைக் பாம்ப்பியோ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது அடுத்த சந்திப்பு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். #MikePompeo #KimJongUn #NorthKorea #US
    அறிவிக்கப்படாத திடீர் பயணமாக இன்று வடகொரியா தலைநகர் பியாங்யாங் சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ அங்கு கைதான மூன்று அமெரிக்கர்களை விடுவித்து அழைத்து வந்தார். #Trump #MikePompeo #Pyongyang #3Americandetainees
    வாஷிங்டன்:  

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், அமெரிக்காவை சேர்ந்த மூன்று பேரை வடகொரியா அதிகாரிகள் கைது செய்து வைத்துள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ அறிவிக்கப்படாத திடீர் பயணமாக இன்று வடகொரியா தலைநகர் பியாங்யாங் சென்றார்.

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னை டிரம்ப் சந்தித்துப் பேசப்போகும் இடம் மற்றும் தேதி இந்த சந்திப்பின்போது உறுதிசெய்யப்பட்டது. மேலும், வடகொரியா கைது செய்துள்ள மூன்று அமெரிக்கர்களை விடுவிப்பது தொடர்பாகவும் மைக் பாம்ப்பியோ பேச்சுவார்த்தை நடத்தினார்.


    இதன் தொடர்ச்சியாக, அந்த மூன்று அமெரிக்கர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுடன் மைக் பாம்ப்பியோ வாஷிங்டன் நகருக்கு புறப்பட்ட தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

    இந்த தகவலால் தாம் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்ட டிரம்ப், இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் வாஷிங்டன் நகரில் உள்ள ஆண்டுரூஸ் விமானப்படை தளத்துக்கு வந்துசேரும் மைக் பாம்ப்பியோவை நேரில் சென்று வரவேற்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். #Trump #MikePompeo #Pyongyang #3Americandetainees
    ×