search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிகழ்ச்சி"

    • சுற்றுலாத்துறையும் தனியாருடன் இணைந்து பொதுமக்களை கவரும் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்கின்றனர்.
    • டிசம்பர் 3-வது வாரத்தில் நகரம் முழுவதும் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளை வரவேற்று பதாகைகள் வைக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆண்டு தோறும் பெருகி வருகிறது.

    புத்தாண்டு கொண்டாடுவதற்காகவே பல நாடுகளில் பல்வேறு நகரங்களை சுற்றுலா பயணிகள் தேர்வு செய்கின்றனர்.

    சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, துபாய், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நகரங்கள் உலகளவில் புத்தாண்டு கொண்டாடும் நகரமாக உள்ளது.

    இதேபோல இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அதிகளவில் கோவாவை மக்கள் தேர்வு செய்கின்றனர்.

    ஆனால் கடந்த சில ஆண்டாக புத்தாண்டு கொண்டாட்டங்களின் நகரமாக சுற்றுலா பயணிகளை புதுவை கவர்ந்துள்ளது.

    டிசம்பர் மாத இறுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவது பலமடங்கு அதிகரிக்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரண மாக பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிகின்றனர்.

    இந்த காலகட்டத்தில் புதுவை குளிரான கோடை வாசஸ்தலம் போல உள்ளது. இதுவும் சுற்றுலா பயணிகள் வருகையை ஈர்க்கிறது.

    டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே புதுவையில் உள்ள நட்சத்திர விடுதிகள், ரிசார்ட், ஓட்டல் களில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிக்கு திட்டமிட தொடங்குகின்றனர். டிசம்பர் 3-வது வாரத்தில் நகரம் முழுவதும் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளை வரவேற்று பதாகைகள் வைக்கப்படுகிறது.

    ஆன்லைன் மூலம் இந்த கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்பதிவும் தொடங்குகிறது. விடுதி அறைகளுக்கும் முன்பதிவு தீவிரமாக உள்ளது.

    புதுவை அரசின் சுற்றுலாத்துறையும் தனியாருடன் இணைந்து பொதுமக்களை கவரும் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்கின்றனர்.

    புதுவை கடற்கரை சாலையில் புத்தாண்டை வரவேற்கும் டிசம்பர் 31-ந் தேதி மாலை தொடங்கி முதல் இரவு 12 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இது மட்டுமின்றி அரசின் சீகல்ஸ், நோணாங்குப்பம் படகு குழாம், பழைய துறைமுக வளாகத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது. புதுவையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடற்கரை களிலும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த தயாராகி வருகிறது.

    புதுவையை சுற்றியுள்ள தமிழக பகுதிகளில் இருந்தும் புத்தாண்டு கொண்டாட் டத்துக்கு புதுவையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களின் நகரமாக புதுவை மாறியுள்ளது.

    • தொடக்க நாளான 26-ம் தேதி மாலை 5 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது.
    • தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி தினமான 30-ந் தேதி தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக திகழ்ந்தவர் தியாகராஜர் சுவாமிகள் . இவரை தியாக பிரம்மம் என அழைக்கிறார்கள்.

    இவருடைய சமாதி தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் இசை கலைஞர்கள் ஒன்று கூடி பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சி தியாகராஜர் ஆராதனை விழா என அழைக்கப்படுகிறது.

    அதன்படி தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆண்டு ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 26-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    இதை முன்னிட்டு திருவையாறு தியாகராஜர் ஆசிரமத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை விழா அடுத்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. தொடக்க நாளான 26-ம் தேதி மாலை 5 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது. விழாவில் சபையின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி, மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி தினமான 30-ந் தேதி தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை நடைபெறுகிறது. அப்போது உலகெங்கிலும் உள்ள சங்கீத வித்வான்கள், இசைக் கலைஞர்கள் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்துகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ரூ.86,200 மொய் பணம் வசூல்
    • திருக்கல்யாணத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

    வடவள்ளி,

    கோவை மேற்கு மலை தொடர்ச்சியில் மருதமலை முருகன் கோவில் உள்ளது. இது முருக பக்தர்களால் ஏழாவது படை வீடு என போற்றப்படுகிறது.

    இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தினமும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரு கின்றனர். மருதமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 14-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

    கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாளான இன்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடை பெற்றது. காலை 8.30.மணி அளவில் யாகசாலை கலசங்களில் உள்ள தீர்த்தங்களை கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    காலை 9 மணிமுதல் 10.30 மணி அளவில் வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது வள்ளி மஞ்சள் பட்டு, தெய்வானை சிவப்பு பட்டு அணிந்திருந்தனர். சுப்பிரமணிய சுவாமி வெண்பட்டு உடுத்தி மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    அதன்பிறகு பக்தர்களின் மொய்ப்பணம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு மொய் வைத்தனர். அந்த வகையில் ஒட்டுமொத்தமாக ரூ.86,200 மொய்ப்பணம் வசூலானது.

    தொடர்ந்து பாத காணிக்கை செலுத்துதல் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் தம்பதி சமேதராக பல்லக்கில் வீதி உலா வந்தனர்.

    மருதமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • மாவட்ட அளவிலான மாணவர்கள் குழுவிவை தேர்வு செய்யும் நிகழ்ச்சி தஞ்சையில் நடந்தது.
    • முடிவில் தமிழ்துறை தலைவர் வெற்றிவேல் நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தேசிய இளைஞர் திருவிழா டெல்லியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாணவர்கள் குழு கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். அதன் முன்னேற்பாடாக திருச்சிராப்பள்ளி பாரதி தாசன் பல்கலைக்கழகம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட அளவிலான மாணவர்கள் குழுவிவை தேர்வு செய்யும் நிகழ்ச்சி தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா, துணை முதல்வர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணி திட்ட குழும இயக்குநர் செந்தில்குமார், திருச்சிரா ப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் இலக்குமி பிரபா அம்மையார் ஆகியோர் மாணவர்களை தேர்வு செய்வதில் நெறியா ளர்களாக செயல்பட்டனர்.இதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    முன்னதாக தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலரும், தஞ்சாவூர் மாவட்ட தேசிய இளைஞர் திருவிழாவிற்கான சிறப்பு அலுவலருமான சந்தோஷ்குமார் அனை வரையும் வரவேற்றார்.

    முடிவில் தமிழ்துறை தலைவர் வெற்றிவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் கண்ணன் செய்திருந்தார்.

    அரியலூர் அரசு கலை கல்லூரியில் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி

    அரியலூர், 

    அரியலூர் அரசு கலை கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

    விடுதி மாணவ, மாணவியர்களுக்காக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், பரிமளம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்க்கை வழிகாட்டு முறை குறித்து பேசினர்.

    கல்லூரி முதல்வர் டோமினிக் அமல்ராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, உயர்கல்வி ஆலோசகர் பாஸ்கரன், தேசிய தொழில் சேவை மையத்தின் இளம் தொழிமுறையாளர் எபிநேசர்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உமாமகேஸ்வரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் நன்றி தெரிவித்தார். 

    • விஜயதசமி நாளில் திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்த்தனர்.
    • கோவை குருக்கள் ராம் குமார் கணபதி ஹோமம் வளர்த்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    விஜயதசமி அன்று எந்த ஒரு காரியத்தை துவக்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்பதன் காரணமாக, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம். அதன்படி விஜயதசமி நாளில் திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்த்தனர்.

    இதையடுத்து அவர்கள் தங்கள் வாழ்வில் ஏற்றமும், வளமும் பெற்று என்றும் சிறப்புடன் விளங்க பெற்றோர்கள், பள்ளித்தலைவர் மோகன் கே. கார்த்திக், தாளாளர் வினோதினி, பள்ளி முதல்வர் நிவேதிகா, இயக்குனர் ஐஸ்வர்யா நிகில் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி வரவேற்றனர்.

    திருப்பூர் வீரபாண்டி பிரிவு விருக்சா சர்வதேசப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு பள்ளி தாளாளர் ராஜலட்சுமி மற்றும் பள்ளி நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன் முன்னிலையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை குருக்கள் ராம் குமார் கணபதி ஹோமம் வளர்த்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் அமர்ந்து சரஸ்வதி ஸ்லோகம் கூறியும் அரிசியில் ஓம், அ, A ஆகியவற்றை எழுதியும் புதிதாக தங்கள் கல்வியை வித்யாரம்பம் மூலம் தொடங்கினர்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் பெருமாநல்லூரில் உள்ள கே. எம். சி. சீனியர் செகண்டரி பள்ளியில் விஜயதசமி தினத்தையொட்டி மாணவர் சேர்க்கை நடந்தது. நவராத்திரியையொட்டி கே.எம்.சி., பொதுப்பள்ளி வளாகத்தில் கொலு அமைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது . விஜயதசமி தினத்தையொட்டி பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கையில் புதிதாக சேர்ந்த மழலையர் மற்றும் மாணவ மாணவிகளை நவராத்திரி கொலுவுக்கு முன் பெற்றோர்களுடன் அமர வைத்து, தானியத்தில் அ, ஆ உள்ளிட்ட எழுத்துக்களை எழுத பழகும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பள்ளியில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து விளக்கமாக பள்ளி தாளாளர் மனோகரன் கூறினார். பள்ளித்தலைவர் கே. சி. சண்முகம் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் விழாவில் பள்ளி முதல்வர் சீனிவாசன் கற்றல் இனிது என்பது குறித்து பேசி, மாணவர்களை பாராட்டினார். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர். 

    திருப்பூர் கூலிப்பாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விஜயதசமி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பள்ளி பொருளாளர் ராதாராமசாமி, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன் மற்றும் பள்ளி முதல்வர் அனிதா மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். அவினாசி குருக்கள் காமாட்சி தாசர் சாமிகளால் வித்யாரம்பம் பூஜைகள் செய்யப்பட்டு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வரும் 24-ந்தேதி வரை நடைபெற்றது.
    • சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் அமைந்துள்ள கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் உடனுறை முல்லைவனநாதர் திருக்கோயிலில் நவராத்திரிவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வரும் 24-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதில் 23-ந்தேதி சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைள் நடைபெற்றது.

    நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமியை முன்னிட்டு மாலை சுவாமி சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சியும்.

    அதனை தொடர்ந்து தெப்ப திருவிழாவும் நடைபெற்றது.

    தெப்ப திருவிழா நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், கோயில் செயல் ,.அலுவலர் அசோக்குமார் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளர்கள், கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    • குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 15-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

    தென்தாமரைகுளம்:

    அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் அறநிலையத்துக்குட்பட்ட பாலசவுந்தரி பத்திரகாளி அம்மன் கோவில் நவராத்திரி விழாகடந்த 15-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. கடைசி நாளானநேற்று விஜயதசமியை முன்னிட்டு ஆலயத்தில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்ற பின்பு குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை விவேகானந்தா கல்லூரியின்முன்னாள் தமிழ் துறை தலைவர் மரிய ஜூலியட் ஏடு தொடங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஆசிரியை ரேணுகா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சுமார் 20 குழந்தைகள் கலந்து கொண்டனர். பின்பு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் அறங்காவலர்கள் கே.எஸ்.மணி, பேராசிரியர் கருணாகரன், ராஜசுந்தரபாண்டியன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சுற்றுவட்டார பகுதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில்:

    தெரிசனங்கோப்பு கவுசிகா பள்ளியில் சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அழகிய பாண்டியபுரம் ஜெயந்தீஸ்வர உடைய நயினார் கோவில் மேல்சாந்தி ஜெய்ஸ்ரீ மணிகண்ட ஆச்சார்யார் தலைமையில் குழந்தைகள் அனைவரும் நலம்பெற ஆகம விதிப்படி அதற்கான அனைத்து சடங்குகளும் நடத்தப்பட்டு, சிவ ஆகமரத்தினம் ஜெய்ஸ்ரீ நாராயண சுவாமி தலைமையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. ப்ரி.கே.ஜி.வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை, ஹிந்தி மற்றும் செஸ் வகுப்புக்களுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவுசிகா பள்ளியின் தாளாளர் செண்பகநாதன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • தங்களது குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பெற்றோர் கோவில்களுக்கு குழந்தையுடன் வந்தனர்
    • வித்யாரம்பம் செய்து குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், ரப்பர் உள்ளிட்ட 11 பொருட்கள் கொண்ட கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் அய்யப்பன் கோவில், ஈஸ்வரன் கோவில், குருவாயூரப்பன் கோவில், வாலிபாளையம் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் எழுந்து நீராடி சுவாமி தரிசனம் செய்து, தங்களது குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பெற்றோர் கோவில்களுக்கு குழந்தையுடன் வந்தனர்.

    குழந்தைகளுக்கு அர்ச்சகர்கள் தங்க வேலால் நாக்கில் எழுதி எழுத்தறிவித்தலை தொடங்கி வைத்தனர். அதுபோல் அரிசியிலும் குழந்தைகளின் கை விரல்களை பிடித்து எழுத வைத்தனர். அதன்பிறகு சிலேட்டுகளிலும் குழந்தைகள் எழுதினர். கோவில்களில் நடந்த நிகழ்ச்சியில், திரளான குழந்தைகள் பங்கேற்றனர். வித்யாரம்பம் செய்து குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், ரப்பர் உள்ளிட்ட 11 பொருட்கள் கொண்ட கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

    இதேபோல், திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை (அட்மிஷன்) நடந்தது. ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க, பெற்றோர்கள், ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.

    • திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமை தாங்கி வீரவணக்கம் செலுத்தினார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

    திருப்பூர்:

    இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது. காவல்துறை, ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்ட பிரிவுகளில் தேசத்தை பாதுகாக்கும் வகையில் வீரமரணம் அடைந்த 254 காவலர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் திருப்பூர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் காவலர் நினைவு தூண் அமைக்கப்பட்டது.

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமை தாங்கி வீரவணக்கம் செலுத்தினார். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், போலீஸ் துணை கமிஷனர்கள் அபிஷேக் குப்தா (வடக்கு), வனிதா (தெற்கு), ஆசைத்தம்பி (தலைமையிடம்), மநகர கூடுதல் துணை கமிஷனர்கள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு திருப்பூர் மாநகர ஆயுதப்படை காவலர்கள் வானத்தை நோக்கி மூன்று முறை 48 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர். வீரவணக்கம் அடைந்த காவலர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    பெரம்பலூரில் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் புதுபஸ் நிலைய வளாகத்தில் குழந்தை திருமணங்களே இல்லாத இந்தியா விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இந்தோ டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் முகமது உசேன் தலைமை வகித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட், கிருஷ்ணா தியேட்டர், மகளிர் கலைக்கல்லூரி, மருத்துவமனை, பள்ளி வளாகங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

    இந்தோ டிரஸ்ட் சார்பில் குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா என்ற தலைப்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் நகரம், கிராமங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 50 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் டிரஸ்ட் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட பிரச்சாரம் செய்தனர். முடிவில் மேலாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

    ×