search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "injury"

    • சோபா செட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    விழுப்புரம்:

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர்கள் ஜோய்ஆண்டனி (வயது 50), முரளி தாஸ் (48). இருவரும் நண்பர்கள். இவர்கள் திண்டிவனத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி சோபா செட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு ஜோய்ஆண்டனி பலத்த ரத்த காயங்களுடன் தனியார் தங்கும் விடுதி வெளியே நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த வழியாக சென்ற போலீசார் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது தொடர்பாக அவரது நண்பர் முரளி தாசை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இருவரும் மது அருந்தியபோது, ஏற்பட்ட தகராறில் ஜோஸ்ஆண்டனி பலத்த காயம் அடைந்தது தெரியவந்தது. இருவருமே மது போதையில் இருப்பதால், போலீசாரால் சரியான முறையில் விசாரணை நடத்தமுடியவில்லை. அவர்களின் போதை தெளிந்தபின்னர் விசாரணை நடத்த போலீ சார் திட்டமிட்டுள்ளனர். காயமடைந்த ஜோஸ்ஆண்டனியில் கழுத்தில் காயம் உள்ளதால் அவ ரால் பேசமுடியவில்லை. அவருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • காட்பாடி நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இந்த விபத்தில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாகினர். அதன் பற்றிய விவரம் வருமாறு:-

    தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள பழைய கரியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 55 ) விவசாயி.

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் சானூரப்பட்டி அருகே கரியப்பட்டி சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரில் வேலூர் மாவட்டம் காட்பாடி நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயபாலன் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயபாலன் இறந்தார்.

    தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த நடுக்காவேரியை சேர்ந்தவர் சந்திரசேகர் ( 43).

    இவர் நேற்று மாலை உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    வல்லம் - ஆலக்குடி சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

    அப்போது சாலையின் வளைவில் வைக்கப்பட்டிருந்த எதிரொளிப்பான் போர்டு மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இந்த விபத்தில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சந்திரசேகர் இறந்துவிட்டார்.

    வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த இரண்டு விபத்துக்கள் குறித்தும் செங்கிப்பட்டி மற்றும் வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த விபத்தில் லதா தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • காயம் அடைந்த வெங்கட்ரமணி சாலையிலேயே கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு அருகே நல்லெழுந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணி (வயது 57). இவரது மனைவி லதா (44). வெங்கட்ரமணி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் இன்று காலை வீட்டிலிருந்து காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருநள்ளாறு அடுத்த செல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் இருந்து கணவன், மனைவி தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் லதா தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வெங்கட்ரமணி படுங்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து விபத்து குறித்து திருநள்ளாறு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். ஆனால் விபத்து நடந்த இடத்திலிருந்து போலீஸ் நிலையம் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ளது. தகவல் தெரிவித்து அரை மணி நேரம் கழித்து போலீசாரும், 108 ஆம்புலன்சும் வந்ததால் விபத்தில் உயிரிழந்த லதா, காயம் அடைந்த வெங்கட்ரமணி சாலையிலேயே கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

    மேலும் காலதாமதமாக போலீசாரும், ஆம்புலன்சும் வந்தனர். ஆனால் ஆம்புலன்சில் உதவி செவிலியர் இல்லை. டிரைவர் மட்டுமே ஆம்புலன்சில் வந்து உயிருக்கு போராடிய வரை முதல் உதவி எதுவும் செய்யமுடியாமல் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் சென்றபோது வாகனம் மோதி பெண் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குடியிருப்பு பகுதியில் வேகமாக சென்றதாக கூறி அப்பகுதியினர் வாலிபர்களை சத்தம் போட்டுள்ளனர்.
    • மோதல் நீடித்து வந்த நிலையில் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கினர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள நாகம்மாள்பு ரத்தை சேர்ந்த சில வாலிபர்கள் சமீபத்தில் அங்குள்ள வேடவர் காலனியில் குறுகலான சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    முன்விரோதம்

    அப்போது அவர்கள் வேகமாக சென்றதாக கூறி அப்பகுதி குடியிருப்புவாசிகள் சத்தம் போட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் வேடவர் காலனி பகுதியில் நேற்று நடந்த சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாகம்மாள்புரத்தில் இருந்து சிலர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

    அப்போது அவர்களில் ராஜசெல்வம் என்பவரும் சென்றுள்ளார். அந்த நேரத்தில் அங்குள்ள கோவில் அருகே நின்ற சிலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த தரப்பினர் ராஜசெல்வத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

    வாலிபருக்கு வெட்டு

    இதனால் ஆத்திரம் அடைந்த ராஜசெல்வம், நாகம்மாள்புரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வர்களுடன் கம்புகள், கட்டைகளை எடுத்துக் கொண்டு வேடவர் காலனியில் புகுந்துள்ளார். பின்னர் அந்த கும்பால் கார், வீடுகளை அடித்து நொறுக்கினர். மேலும் சின்னத்துரை என்ப வருக்கு வெட்டு விழுந்தது.

    தகவல் அறிந்து மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போதும் 2 தரப்பினர் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்த நிலையில் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் வாசிவம் மீது கல் வீசப்பட்டதில் காயம் அடைந்தார். உடனே அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக துணை போலீஸ் கமிஷனர் அனிதா தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். லேசான தடியடி நடத்தி அங்கு கூடியிருந்தவர்களை கலைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேடவர் காலனியை சேர்ந்த 9 பேர் மற்றும் நாகம்மாள்புரத்தை சேர்ந்த 11 பேர் என இரு தரப்பையும் சேர்ந்த 20 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    • இன்று காலை வழக்கம்போல் அரசு பஸ் புறப்பட்டு சென்றது.
    • காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே இன்று காலை அரசு பஸ் கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இருந்து தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் திருவெறும்பூரில் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு பத்தாளபேட்டை, கடம்பகுடி, மேகளத்தூர், மாறனேரி ,ஊரத்தூர், ஆற்காடு வழியாக திருக்காட்டுபள்ளிக்கு செல்வது வழக்கம். இந்த பஸ்சில் நாராயணன் ஓட்டுனராகவும், ரெங்கராஜ் கண்டக்டராகவும் இருந்தனர்.

    இன்று காலையும் வழக்கம் போல் பஸ் புறப்பட்டு சென்றது. காலை நேரம் என்பதால் பஸ்சில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த பஸ் பூதலூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தின் அருகே சென்ற போது நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த சுபலட்சுமி (19). ஸ்ரீராம்,(17) வர்ஷினி (12)சுபஸ்ரீ (14)பிரணவ் (14)அபிஷேக்(14) கனிலா(51) சுரேஷ்(52) சமீரா பேகம் (50)மகேஸ்வரி (37) எடிசன்(15) ரம்மி (52) கடல் மணி (50) உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்காட்டுபள்ளி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 17 பேர் மாணவர்கள் ஆவார்.

    இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயம் அடைந்தவர்களை தஞ்சை ஆர்டி ஓ (பொறுப்பு) பழனிவேல் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    • காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • தகவல் அறிந்த நகராட்சி சுகாதார துறையினர் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்துச் சென்றனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்று வட்டாரத்தில் தெருநாய் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குமாரபாளையம் சின்னப்பநாயக்கன் பாளையத்தில் கும்பலாக சுற்றித்திரிந்த தெருநாய்கள் அவ்வழியாக வருவோர், செல்வோரை எல்லாம் கடித்து குதறியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த நகராட்சி சுகாதார துறையினர் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்துச் சென்றனர்.

    இது குறித்து சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், வெறிநாய் பொதுமக்களை கடித்தது குறித்து தகவல் கிடைத்தவுடன் அதற்குரிய வாகனம் மற்றும் ஆட்களை அனுப்பி வைத்து நாய்கள் பிடிக்கப்பட்டன. நகரில் உள்ள நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என்றார்.

    • ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி பள்ளி மாணவ, மாணவிகள் 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.
    • இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு–மங்கலம் அருகே உள்ள மீனாட்சிபுரம், வலையபட்டி ஆகிய அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவி–கள் 11 பேர் கள்ளிக்குடி கே.வெள்ளாகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வ–தற்காக இன்று காலை ஆட் டோவில் புறப்பட்டு சென்றனர்.

    அந்த ஆட்டோ கே.வெள் ளாகுளம் பகுதிக்கு வந்தபோது இருசக்கர வாகனம் முந்திச்செல்ல முயன்றது. இதில் நிலை தடுமாறி கட் டுப்பாட்டை இழந்த அந்த மோட்டார் சைக்கிள் ஆட் டோவில் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் இந்துஜா (10), பகதீஷ் ஸ்ரீ, சரண் (9), முத்தமிழ் அன்பு (10), பன் னீர்செல்வம் (12), கவிதா (12), ஆதிஸ்வரன் (12), கார்த்திகா (11), நாகலட் சுமி (12), சாதனா (11) ஆகிய 11 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு கை, கால் மற்றும் முகத்தில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.

    அவர்களை உடனடியாக அந்த பகுதியைச் சேர்ந்த–வர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத் தனர். மேலும் இந்த விபத் தில் காயம் அடைந்த ஆட்டோ டிரைவரான பொன்னையம்பட்டியை சேர்ந்த பெருமாள், இரு–சக்கர வாகனத்தில் வந்த பூபதி ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்துஜா, கவிதாஸ்ரீ, மகாலட்சுமி ஆகிய மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் காயம் அடைந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் கள் பதறி அடித்துக்கொண்டு திருமங்கலம், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது.

    • ஜாமீனில் சக்திவேல் தஞ்சாவூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
    • சண்டையை விலக்கி விட்டதுடன் அபிநயாவை அரிவாளால் வெட்டினார்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்துள்ள சோழபுரம் துலுக்கவெளி பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் சக்திவேல் (வயது 30).

    கடந்த 2022 ஜூன் மாதம் நடந்த குடும்பத் தகராறில் தனது தங்கை மற்றும் அவரது கணவரை வெட்டி கொலை செய்தார்.

    இதனால் சிறையில் அடைக்கப்பட்ட சக்தி வேலை பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    இந்த இரட்டை கொலை வழக்கு சம்பந்தமாக நிபந்தனை ஜாமினில் சக்திவேல் தஞ்சாவூர் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார்.

    இந்நிலையில் கடந்த 1ம் தேதி பரோலில் வந்தவர் நேற்று தேவனாம் சேரியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது மாமி யாருக்கும், மனைவி அபிநயாவுக்கும் (23) தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் சண்டையை விலக்கி விட்டதுடன் அபிநயாவை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அபிநயாவை ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

    • கால்களில் காயம் ஏற்பட்டு அது நடக்க முடியாமல் தவறி விழுந்தது.
    • மயிலை காப்பாற்றிய அந்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் வசிப்பவர் முத்துக்குமாரசாமி(வயது 51). இவர் ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி 5வது வார்டு உறுப்பினராக உள்ளார். நேற்று இவரது வீட்டில் தேசிய பறவையான ஆண் மயில் ஒன்று வந்து விழுந்தது. அதன் கால்களில் காயம் ஏற்பட்டு அது நடக்க முடியாமல் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த முத்துக்குமாரசாமி குடும்பத்தினர் மயிலுக்கு உணவு கொடுத்து தண்ணீர் கொடுத்து பராமரிப்பு செய்தனர்.

    பின்னர் இது குறித்து திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வன காவலர் வெங்கடேஸை அனுப்பி காயம்பட்ட அந்த மயிலை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார்.மேலும் மயிலை காப்பாற்றிய அந்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    தேசிய பறவையான மயிலை காப்பாற்றி உணவு கொடுத்து பராமரித்த முத்துக்குமாரசாமி குடும்பத்தாருக்கும், உடனடி நடவடிக்கை எடுத்து மயிலுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த வனத்துறைக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
    • அய்யாசாமி மற்றும் செல்வி ஆகி யோர் படுகாயம் அடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 67) விவசாயி, இவர் சம்ப வத்தன்று தனது மனைவி செல்வி (45) என்பவருடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பல்லகச்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வந்த போது எதிரே வந்த டிராக்டர் இவரது பொபட் மீது மோதியது. இதில் அய்யாசாமி மற்றும் செல்வி ஆகி யோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம், பக்கத்தி னர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அய்யாசாமி கொடுத்த புகாரின் பேரில் தியாக துருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • மீனவ பெண்கள் புதுச்சேரியில் மீன்களை மொத்தமாக வாங்கி வந்து கிராமப் பகுதியில் விற்பனை செய்வது வழக்கம்.
    • மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது

    விழுப்புரம்:

    புதுச்சேரி அடுத்த தமிழகப்பகுதியான கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையை யொட்டி புதுக்குப்பம் மீனவ கிராமம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரம் செய்யும் மீனவ பெண்கள் புதுச்சேரியில் மீன்களை மொத்தமாக வாங்கி வந்து கிராமப் பகுதியில் விற்பனை செய்வது வழக்கம். அதுபோல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீன்கள் அதிகம் விற் பனையாகும் என்பதால் புதுச்சேரிக்கு மீன் வாங்க அதிகாலை புதுக்குப்பம் மீனவ பெண்கள் லட்சுமி (45), கோவிந்தம்மாள் (50) நாயகம், கமலம், கெங்கை யம்மாள், பிரேமா ஆகிய 6 பேர் ஆட்டோவுக்காக கிழக்கு கடற்கரை சாலை யோரம் நின்று கொண்டி ருந்தனர்.

    அப்போது சென்னை யில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த 6 பெண்கள் மீது மோதியது. இதில் லட்சுமி மற்றும் கோவிந்தம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 4 பெண்கள் படு காயம் அடைந்தனர். அவர்கள் கனகசெட்டிக் குளத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கெங்கை யம்மாள் (வயது 45) பரிதாபமாக இறந்தார்.

    இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. காயமடைந்த மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்த விபத்தில் கார் கவிழ்ந்து நொறுங்கியது. காரை ஓட்டிவந்த சென்னையை சேர்ந்த டிரைவர் விக்னேஸ்வரன், மற்றும் காரில் பயணம் செய்த கவுதம், சேது, பிரசாந்த், திரிஷா,ஆகிய 5 பேர் புதுச்சேரி தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • களக்காடு அருகே உள்ள பெருமாள்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவர் தனது அண்ணன் கோயில்ராஜிக்கு புதியதாக லோடு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார்.
    • இதனால் இவருக்கும், அதே ஊரில் ஏற்கனவே லோடு ஆட்டோ வைத்துள்ள சம்பத்ராஜாவிற்கும் (32) தொழில் போட்டி ஏற்பட்டு, முன்விரோதம் ஏற்பட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள பெருமாள்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவர் தனது அண்ணன் கோயில்ராஜிக்கு புதியதாக லோடு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார். இதனால் இவருக்கும், அதே ஊரில் ஏற்கனவே லோடு ஆட்டோ வைத்துள்ள சம்பத்ராஜாவிற்கும் (32) தொழில் போட்டி ஏற்பட்டு, முன்விரோதம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று ஜெபராஜ் தனது வீட்டு பின்புறமுள்ள தோட்டத்தில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சம்பத்ராஜா, சேகர் மகன் டாலி, சவுந்தர்ராஜன் மகன் ஸ்டீபன் உள்பட 4 பேர் சேர்ந்து ஜெபராஜை கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவர் காயமடைந்தார். இதுபோல ஜெபராஜ், ஜெயசீலன், கோயில்ராஜ் ஆகியோர் சேர்ந்து சம்பத்ராஜாவை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி இரு தரப்பினரும் களக்காடு போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ் பெக்டர் வேலம்மாள் இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×