search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே தொழில் போட்டியால் மோதல்
    X

    களக்காடு அருகே தொழில் போட்டியால் மோதல்

    • களக்காடு அருகே உள்ள பெருமாள்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவர் தனது அண்ணன் கோயில்ராஜிக்கு புதியதாக லோடு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார்.
    • இதனால் இவருக்கும், அதே ஊரில் ஏற்கனவே லோடு ஆட்டோ வைத்துள்ள சம்பத்ராஜாவிற்கும் (32) தொழில் போட்டி ஏற்பட்டு, முன்விரோதம் ஏற்பட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள பெருமாள்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவர் தனது அண்ணன் கோயில்ராஜிக்கு புதியதாக லோடு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார். இதனால் இவருக்கும், அதே ஊரில் ஏற்கனவே லோடு ஆட்டோ வைத்துள்ள சம்பத்ராஜாவிற்கும் (32) தொழில் போட்டி ஏற்பட்டு, முன்விரோதம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று ஜெபராஜ் தனது வீட்டு பின்புறமுள்ள தோட்டத்தில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சம்பத்ராஜா, சேகர் மகன் டாலி, சவுந்தர்ராஜன் மகன் ஸ்டீபன் உள்பட 4 பேர் சேர்ந்து ஜெபராஜை கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவர் காயமடைந்தார். இதுபோல ஜெபராஜ், ஜெயசீலன், கோயில்ராஜ் ஆகியோர் சேர்ந்து சம்பத்ராஜாவை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி இரு தரப்பினரும் களக்காடு போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ் பெக்டர் வேலம்மாள் இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×