search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோவுக்கு காத்திருந்த கும்பலில் கார் புகுந்ததுபெண் மீன் வியாபாரிகள் 3 பேர் பலி: 8 பேர் படுகாயம்
    X

    விபத்து ஏற்படுத்திய கார் கவிழ்ந்து கிடந்த காட்சி.

    கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோவுக்கு காத்திருந்த கும்பலில் கார் புகுந்ததுபெண் மீன் வியாபாரிகள் 3 பேர் பலி: 8 பேர் படுகாயம்

    • மீனவ பெண்கள் புதுச்சேரியில் மீன்களை மொத்தமாக வாங்கி வந்து கிராமப் பகுதியில் விற்பனை செய்வது வழக்கம்.
    • மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது

    விழுப்புரம்:

    புதுச்சேரி அடுத்த தமிழகப்பகுதியான கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையை யொட்டி புதுக்குப்பம் மீனவ கிராமம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரம் செய்யும் மீனவ பெண்கள் புதுச்சேரியில் மீன்களை மொத்தமாக வாங்கி வந்து கிராமப் பகுதியில் விற்பனை செய்வது வழக்கம். அதுபோல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீன்கள் அதிகம் விற் பனையாகும் என்பதால் புதுச்சேரிக்கு மீன் வாங்க அதிகாலை புதுக்குப்பம் மீனவ பெண்கள் லட்சுமி (45), கோவிந்தம்மாள் (50) நாயகம், கமலம், கெங்கை யம்மாள், பிரேமா ஆகிய 6 பேர் ஆட்டோவுக்காக கிழக்கு கடற்கரை சாலை யோரம் நின்று கொண்டி ருந்தனர்.

    அப்போது சென்னை யில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த 6 பெண்கள் மீது மோதியது. இதில் லட்சுமி மற்றும் கோவிந்தம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 4 பெண்கள் படு காயம் அடைந்தனர். அவர்கள் கனகசெட்டிக் குளத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கெங்கை யம்மாள் (வயது 45) பரிதாபமாக இறந்தார்.

    இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. காயமடைந்த மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்த விபத்தில் கார் கவிழ்ந்து நொறுங்கியது. காரை ஓட்டிவந்த சென்னையை சேர்ந்த டிரைவர் விக்னேஸ்வரன், மற்றும் காரில் பயணம் செய்த கவுதம், சேது, பிரசாந்த், திரிஷா,ஆகிய 5 பேர் புதுச்சேரி தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×