search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்கால் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது வாகனம் மோதி பெண் பலி: கணவன் படுகாயம்
    X

    காரைக்கால் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது வாகனம் மோதி பெண் பலி: கணவன் படுகாயம்

    • இந்த விபத்தில் லதா தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • காயம் அடைந்த வெங்கட்ரமணி சாலையிலேயே கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு அருகே நல்லெழுந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணி (வயது 57). இவரது மனைவி லதா (44). வெங்கட்ரமணி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் இன்று காலை வீட்டிலிருந்து காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருநள்ளாறு அடுத்த செல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் இருந்து கணவன், மனைவி தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் லதா தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வெங்கட்ரமணி படுங்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து விபத்து குறித்து திருநள்ளாறு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். ஆனால் விபத்து நடந்த இடத்திலிருந்து போலீஸ் நிலையம் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ளது. தகவல் தெரிவித்து அரை மணி நேரம் கழித்து போலீசாரும், 108 ஆம்புலன்சும் வந்ததால் விபத்தில் உயிரிழந்த லதா, காயம் அடைந்த வெங்கட்ரமணி சாலையிலேயே கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

    மேலும் காலதாமதமாக போலீசாரும், ஆம்புலன்சும் வந்தனர். ஆனால் ஆம்புலன்சில் உதவி செவிலியர் இல்லை. டிரைவர் மட்டுமே ஆம்புலன்சில் வந்து உயிருக்கு போராடிய வரை முதல் உதவி எதுவும் செய்யமுடியாமல் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் சென்றபோது வாகனம் மோதி பெண் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×