என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Indira gandhi"
- முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கவி பாண்டியன், பரணி இசக்கி, மாவட்ட செயலாளர் மணி, துணைத்தலைவர் வண்ணை சுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் ரசூல் மைதீன், அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
- புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
புதுவை அரசு சார்பில் 100 அடி சாலையில் உள்ள அவரின் சிலைக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை நடந்தது. 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், ஆர்.இ.சேகர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இந்திராகாந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்திரா காந்தி 1966-ம் ஆண்டு மற்றும் 1977-ம் ஆண்டு இடைப்பட்ட காலத்திலும், பின்னர் 1980-ம் ஆண்டு மற்றும் 1984-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்திலும் பிரதமராக இருந்தார்.
இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அரசியல் தலைவர்கள் பலர் டுவிட்டரில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் 1977-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டார். அவர் பாரதிய லோக் தளம் கட்சியை சேர்ந்த ராஜ் நாராயணனால் தோற்கடிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் 1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் நடந்தது போல இப்போது வாரணாசி தொகுதியில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அங்குள்ள மக்கள் அனைவரையும் முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத்தும், பிரதமர் நரேந்திர மோடியும் ஏமாற்றி விட்டனர். கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியில் யோகி ஆதித்யநாத்தை மக்கள் நிராகரித்தனர்.
பிரதமர் மோடியின் வெற்றியைவிட அவரது தோல்வி வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும். 1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் நிகழ்ந்தது இப்போது வாரணாசிதொகுதியில் மீண்டும் நிகழுமா?
குஜராத்தின் வளர்ச்சியை போல கிழக்கு உத்தரபிரதேசத்தின் வறுமை, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்டவற்றை நீக்கவில்லை. மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதை விடுத்து வகுப்பு வாரியான வன்முறையையும், ஜாதி ரீதியான கலவரத்தையும் மத்திய, மாநில பா.ஜனதா அரசுகள் தூண்டி விடுகின்றன. இது மிகவும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
என்மீது கொண்ட கருத்து வேற்றுமையால் என் கட்சியை சேர்ந்த பாதுகாப்பு வீரரே என்னை சுட்டுக் கொன்று விட்டதாக போலீசார் அந்த சம்பவத்தை திசை திருப்பி விடுவார்கள்.
இல்லையென்றால், பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கை ஒரு காங்கிரஸ்காரரோ, மோடியை ஒரு பாஜக தொண்டரோ தாக்கினால் போலீசார் கைகட்டி வேடிக்கை பார்ப்பார்களா? என கெஜ்ரிவால் தனது பேட்டியின்போது கேள்வி எழுப்பினார்.
ஆமதாபாத்:
குஜராத் மாநிலம் அனந்த் பகுதியில் மத்திய மந்திரி மன்சூக்மந்தவியா நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவை மிக கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
இந்திராகாந்தி போன்று பிரியங்காவுக்கும் மூக்கு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் மிகவும் பெருமையாக சொல்லி கொள்கிறார்கள். இந்திராகாந்தி மாதிரி மூக்கு இருந்து விட்டால் போதுமா?
அந்த மூக்கை வைத்துக் கொண்டு எப்படி வெற்றி பெற முடியும். பாட்டி மாதிரி ஒரே மாதிரி மூக்கு இருந்து விட்டால் அரசியலில் ஒரு போதும் வெற்றி பெற்று விட முடியாது. இதை பிரியங்கா உணர்ந்து கொள்ள வேண்டும்.
சீனாவில் எல்லாரது முகமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அவர்கள் மூக்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அதற்காக வீடு தோறும் சீனா ஜனாதிபதி இருக்கிறார் என்று சொல்லி விட முடியுமா?
ஆகையால் ஒரே மாதிரி மூக்கு என்று சொல்லிக் கொண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விடலாம் என்று கனவு காணக்கூடாது. அரசியலில் மேன்மை பெற தனி தகுதி வேண்டும்.
இவ்வாறு மத்திய மந்திரி மன்சூக்மந்தவியா பேசினார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் பா.ஜனதா எம்.பி. ஹரிஸ்திவேதி பேசுகையில், “பிரியங்கா டெல்லியில் இருக்கும்போது ஜீன்ஸ் போட்டுக் கொள்கிறார். தேர்தல் பிரசாரத்துக்கு வந்தால் சேலை அணிகிறார். எதற்காக இந்த இரட்டை வேடம் போடுகிறார்” என்று கேட்டு இருந்தார். இந்த பேச்சும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #BJP #LokSabhaElections2019 #LSPolls
தீவிர அரசியலில் சமீபத்தில் இணைந்த பிரியங்கா, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், உத்தரபிரதேச கிழக்குப்பகுதிக்கு கட்சியின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மாநிலத்தில் அவர் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
இதில் முதற்கட்டமாக கங்கை நதியில் படகுமூலம் சென்று கரையோர மக்களின் ஆதரவை திரட்ட விரும்பிய அவர் இதற்காக 3 நாள் கங்கை நதி யாத்திரையை நேற்று தொடங்கினார். இதில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினமே அவர் லக்னோ சென்றடைந்தார். பின்னர் மாலையில் பிரயாக்ராஜ் நகருக்கு சென்றார்.
முன்னதாக திரிவேணி சங்கமத்தில் உள்ள அனுமன் கோவிலில் பிரியங்கா வழிபாடு செய்தார். மேலும் அங்குள்ள ஸ்வராஜ் இல்லத்துக்கு சென்ற அவர், தனது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்திக்கும், ஸ்வராஜ் இல்லத்துக்குமான தொடர்புகளை நினைவுகூர்ந்து தனது டுவிட்டர் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘சுவராஜ் பவன் முற்றத்தில் அமர்ந்திருக்கும் போது, எனது பாட்டி (இந்திரா காந்தி) பிறந்த அறையை பார்க்க முடிகிறது. இங்கு வைத்துதான் நான் தூங்குவதற்காக அவர் மடியில் என்னை படுக்க வைத்து கதைகளை கூறுவார். அவரது வார்த்தைகள் இன்னும் எனது காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ‘எதற்கும் அஞ்சக்கூடாது, எல்லாம் சரியாகிவிடும்’ என அவர் சொல்லித்தருவார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
பிரியங்காவின் கங்கை யாத்திரை நாளை (புதன்கிழமை) வாரணாசியில் நிறைவு பெறுகிறது. இந்த யாத்திரை மாநில காங்கிரசாருக்கு உற்சாகத்தை அளித்து இருக்கிறது. இதனால் கங்கை நதிக்கரையில் பிரியங்கா செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. #PriyankaGandhi #IndiraGandhi #Congress
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல்முறையாக இன்று ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் நடந்துவந்த வழக்கு விசாரணையில் முதல்முறையாக ஒருவருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு டெல்லியில் உள்ள பல்வேறு சீக்கிய அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்த 241 வழக்குகளும் முன்னர் முடித்து வைக்கப்பட்டன.
இவற்றில் 186 வழக்குகள் உரிய விசாரணை நடத்தாமலேயே முடித்து வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக கண்காணிப்பு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.
இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை இன்று ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் மேற்படி 186 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #antiSikhriotscase #Delhicourt #firstdeathsentence #deathsentence
இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள், கிளை அலுவலங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது உருவச் சிலைகள் மற்றும் உருவப்படங்களுக்கு மலர் மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது.
இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் இந்திரா காந்தியின் செயல்பாடுகளை பாராட்டியும், அவரது பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டும் பலர் அவரை நினைவு கூர்ந்துள்ளனர். #IndiraGandhi #SoniaGandhi #RahulGandhi
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் மற்றும் மாநில கமிட்டி அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்படுகிறது. #IndiraGandhi #RahulGandhi #SoniaGandhi #Congress
மத்தியில் ஆட்சி செய்யும் அரசு மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கையில்லாத எண்ணம் ஏற்பட்டால், பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற இரு அவைகளில் மக்களவையில் மட்டுமே இத்தகைய தீர்மானத்தை கொண்டு வர முடியும்.
பாராளுமன்றத்தில் 50 எம்.பி.க்களின் ஆதரவுடன் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர இயலும். அந்த தீர்மானம் மீது பாராளுமன்ற சட்ட விதி 198-வது பிரிவின் கீழ் விவாதம் நடந்து ஓட்டெடுப்பு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும்.
எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்பதும், ஏற்காததும் சபாநாயகரின் இறுதி முடிவுக்கு உட்பட்டதாகும். அதுபோல நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எப்போது, எப்படி ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற அனைத்தையும் சபாநாயகரே முடிவு செய்வார். ஒவ்வொரு கட்சி தலைவர்களும் விவாதத்தில் பேச நேரம் ஒதுக்கி கொடுப்பதும் சபாநாயகர்தான்.
அதன்படி இந்திய பாராளு மன்றவரலாற்றில் இதுவரை 27 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட்டுள்ளது. நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, மெரார்ஜி தேசாய், ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய், மோடி ஆகிய 8 பிரதமர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளனர்.
அவர் அரசு மீது 1966-ம் ஆண்டு முதல் 1975-ம்ஆண்டு வரை 9 ஆண்டுகளில் 12 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1981-ம் ஆண்டு முதல் 1982-ம் ஆண்டுக்குள் 3 தடவை நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டார்.
லால்பகதூர் சாஸ்திரி, நரசிம்மராவ் இருவரும் தலா 3 தடவை நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்தனர். அந்த 3 தடவையும் அவர்கள் வெற்றி பெற்றனர்.
1993-ம் ஆண்டு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து நரசிம்மராவ் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அந்த தீர்மானம் மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மிக, மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் நரசிம்மராவ் வெற்றி பெற்றார். அதாவது நரசிம்மராவுக்கு ஆதரவாக 265 வாக்குகளும் எதிராக 251 வாக்குகளும் கிடைத்தது. இதனால் 14 வாக்குகள் வித்தியாசத்தில் நரசிம்மராவ் வெற்றி பெற்றார்.
வாஜ்பாய், ராஜீவ்காந்தி இருவரும் தலா ஒரு தடவை நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்தனர். அதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. 1999-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் பெரும் பான்மையை நிரூபிக்க நடந்த ஓட்டெடுப்பில் வாஜ்பாய் தோல்வியை தழுவினார்.
1967 மற்றும் 1992-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் பிரதமர்களை எதிர்த்து வாஜ்பாய் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வாஜ்பாய் 2003-ம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள நேரிட்டது.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பில் தோல்வியை தழுவிய ஒரே பிரதமர் மெரார்ஜி தேசாய் ஆவார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. இதனால் அவர் ஓட்டெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
பாராளுமன்றத்தில் அதிக தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தவர் என்ற பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் ஜோதிர்மாய் பாசுக்கு உண்டு. அவர் பாராளுமன்றத்தில் 4 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். 4 தடவையும் இந்திராவுக்கு எதிராக அவர் தீர்மானம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர்களில் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும், விவாதத்தையும், ஓட்டெடுப்பையும் சந்திக்காத ஒரே பிரதமர் என்ற தனி சிறப்பு மன்மோகன்சிங்குக்கு உண்டு. 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த அவரை எதிர்த்து ஒரு தடவை கூட பா.ஜ.க.வினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Parliament #NoConfidenceMotion
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்