search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hanging"

    • மனவேதனையில் இருந்த அமிர்தவர்ஷினி வீட்டின் அறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆர்.எஸ். கொளத்துப்பாளையம் காலனியை சேர்ந்தவர் சசிக்குமார்.

    இவரது மகள் அமிர்தவர்ஷினி (23). இவர் ஐ.எம்.எஸ்.சி படித்து விட்டு யு.பி.எஸ்.சி தேர்வுக்கு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அமிர்த்வர்ஷி னி யு.பி.எஸ்.சி. அமலாக்க தேர்வு எழுதி வந்தார்.

    தேர்வு கடினமாக இருந்ததாக அமிர்தவர்ஷினி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதில் மனவேதனையில் இருந்த அமிர்தவர்ஷினி வீட்டின் அறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது பெற்றோர் கதவை உடைத்து அமிர்தவர்ஷினியை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு அமிர்தவர்ஷினி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம்
    • ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 28). இவர் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயம் ஆனது. இதனை அறிந்த பிரவீன் சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் ரவி (40). இவர் தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை செய்து வந்தார்.

    இவர் குடும்ப செலவுக்காக ரூ.5 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவரால் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு சிறுவிபத்தில் அவரது கையில் காயம் ஏற்பட்டு அவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று காலை அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டார். அப்போது வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜன்னல் வழியாக பார்த்த போது கவுசல்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
    • அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே கவுசல்யா இறந்து விட்டதாக தெரிவித்தார்

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த தஞ்சாங்கரை பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி கவுசல்யா (26). இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார்.

    கடந்த இரண்டு வருடமாக கவுசல்யா அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். முத்துசாமி அவ்வப்போது தனது மனைவி, மகனை பார்த்து வந்துள்ளார். கவுசல்யாவின் தாய் தனது மகள், மருமக னிடம் நீங்கள் கவுந்தப்பாடி யில் போய் குடியேருமாறு அறிவுறுத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று கவுசல்யாவின் தாய் மற்றும் அவரது அண்ணன் வெளியே சென்று விட்டனர். வீட்டில் கவுசல்யா மற்றும் அவரது 2 வயது மகன் மட்டும் இருந்தனர். வெளியே சென்ற அவரது தாய் மற்றும் அண்ணன் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் வெளியே கவுசல்யா மகன் மட்டும் விளையாடிக் கொண்டிருந்தான். வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. அவரது தாய் கதவைத் தட்டி உள்ளார்.

    ஆனால் பதில் வரவில்லை. உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது கவுசல்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு வெள்ளோ ட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக அவரை பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே கவுசல்யா இறந்து விட்டதாக தெரிவி த்தார்.

    இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது குடிக்கும் பழக்கமுள்ள இவர் அடிக்கடி குடும்பத்தினரிடம் குடித்து விட்டு இறந்து விடுவேன் என்று கூறி வந்தார்.
    • ஆறுமுகம் அங்குள்ள மது கடையில் மது குடிக்க சென்றார்.

    புதுச்சேரி:

    திண்டிவனம் அருகே கோவடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது52). கூலி தொழிலாளி. மது குடிக்கும் பழக்கமுள்ள இவர் அடிக்கடி குடும்பத்தினரிடம் குடித்து விட்டு இறந்து விடுவேன் என்று கூறி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகம் பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் உள்ள தனது சகோதரி சகுந்தலா வீட்டில் தங்கி இருந்து வந்தார்.

     ஆறுமுகம் அங்குள்ள மது கடையில் மது குடிக்க சென்றார். அப்போது குடி போதையில் அங்கிருந்த வர்களை அவர் திட்டினார்.

    பின்னர் வீட்டுக்கு வந்த ஆறுமுகம் தனது சகோதரியிடம் எனக்குள்ள பிரச்சினைகளை யாரும் கேட்கமாட்டீர்களா? என வாக்குவாதம் செய்தார். குடிபோதையில் ஆறுமுகம் இருந்ததால் காலையில் பேசிக்கொள்ளலாம் என்று அவரை சகுந்தலா சமாதானம் செய்து விட்டு தூங்க சென்றார்.  பார்த்த போது ஆறுமுகம் வீட்டின் மாடி அருகில் இருந்த மாமரத்தில் வேட்டியால் தூக்கு போட்டு பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து அவரது மகன் சண்முகவேல் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் சூரமங்கலம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நளினி என்ற மனைவி உள்ளார்.
    • அய்யாசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த நளினி இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நளினி (வயது 37) என்ற மனைவி உள்ளார். அய்யாசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவரை, நளினி கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் நளினிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தனது கணவரிடம் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் அய்யாச்சாமி, நளினியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அலட்சியாக இருந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த நளினி இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நளினியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    தஞ்ைச மாவட்டம் கொள்ளுகாது வட்டாட்சி கோட்டையை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சுந்தரராஜ். இவர் மதுரை திருமங்கலத்தில் உள்ள சிட்கோவில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை சரியில்லாததால் சுந்தரராஜ் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

    இது குறித்து அவரது அண்ணன் கோவிந்தராஜ், சுந்தரராஜின் நண்பர் மதன பிரகாஷிடம் தனது தம்பிக்கு வேறு ஒரு வேலை வாங்கித் தருமாறு கூறியிருந்தார். அதன்பேலில் சுந்தரராஜ் சேடப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்தார். அங்கு தங்கியிருந்த சுந்தரராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் தாதகாப்பட்டி வேலு நகர் பகுதியில் உள்ள ஒரு கார் கம்பெனியில், சுந்தர் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
    • சுந்தர் கம்பெனியில் உள்ள மேற்கூறையில் உள்ள கம்பியில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பொம்மி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 35). இவருக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு ரேவதி (31) என்ற பெண்ணுடன் திருமணமாகி, கிரிதர் (10) என்ற மகன் உள்ளான்.

    சேலம் தாதகாப்பட்டி வேலு நகர் பகுதியில் உள்ள ஒரு கார் கம்பெனியில், சுந்தர் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல் சுந்தர் வேலைக்கு வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில், மாற்று காவலாளி அந்தோணிசாமி வந்து பார்த்தபோது, சுந்தர் கம்பெனியில் உள்ள மேற்கூறையில் உள்ள கம்பியில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தோணசாமி, இதுகுறித்து உடனடியாக கம்பெனி ஊழியர்களுக்கும், அன்னதானப்பட்டி போலீ சாருக்கும் தகவல் தெரி வித்தார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீ சார், சுந்தரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், சுந்தரின் மனைவி ரேவதி கொடுத்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சமையல் அறையில் அய்யப்பன் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருந்தார்.
    • சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோடு மணல்மேடு பகுதி யைச் சேர்ந்தவர் அய்யப்பன் (38). அவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அய்யப்பன் கிடைக்கும் வேலைக்கு சென்று வந்து கொண்டி ருந்தார். அவரது மனைவி தறிப்பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் அய்யப்ப னுக்கு குடிப்பழ க்கம் இருந்துள்ளது. குடிப்ப ழக்கத்திற்கு அடிமையாகி சரிவர சாப்பிடாமல், சரியாக வேலைக்கு செல்லா மல் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி யுடன் தகராறில் ஈடுபட்டு ள்ளார். மேலும் தனக்கு தானே கை, கால்களை அறுத்து ரத்த காயத்தை ஏற்படுத்திக் கொண்டு ள்ளார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று இரவு தனக்கு வாழ பிடிக்கவில்லை எனவும், பேசாமல் செத்து விடலாம் என்றும் அய்யப்பன் கூறியுள்ளார். அப்போது அவருக்கு மனைவி மகன்கள் ஆறுதல் கூறியுள்ளனர். பின்னர் அனைவரும் சாப்பிட்டு தூங்க சென்று விட்டனர்.

    நேற்று அதிகாலை வேலைக்கு செல்ல வேண்டி சித்ரா எழுந்தபோது வீட்டில் உள்ள சமையல் அறையில் அய்யப்பன் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் ஆம்புலன்ஸ் மூலம் அய்யப்பனை சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அய்யப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அய்யப்பனின் உடலை பார்த்து அவரது மனைவி, மகன்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • ரோகிணி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கணவர் பிரகாஷ் நேற்று இரவு கண்டித்துள்ளார்.
    • வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தபோது, ரோகிணி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள மாங்குப்பை பழையூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ரோகினி (வயது 28). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது. 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் ரோகிணி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கணவர் பிரகாஷ் நேற்று இரவு கண்டித்துள்ளார்.

    இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரோகிணி, அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பிரகாஷ் போன் செய்தும் போனை ரோகிணி எடுக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் போன் செய்தும் ரோகிணி எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரகாஷ், அங்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. அதன் பிறகு வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தபோது, ரோகிணி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரகாஷ், கருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஒ விசாரணை நடத்தி வருகிறார்.

    • தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்தார்.
    • திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றர்.

    மதுரை

    திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள ஹார்விபட்டி காளவாசல் ரோட்டை சேர்ந்தவர் முத்துவேல்(38). திருமணமான இவருக்கு குழந்தை இல்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்துவேல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.

    • சென்னிமலை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் டெய்லர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த மணிமலைகரடு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து (32). இவரது மனைவி சங்கீதா. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்லமுத்து பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் செல்லமுத்து தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக செல்லமுத்து மன வேதனையில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு செல்லமுத்து திடீரென வீட்டை உள்புறமாக தாழிட்டு வீட்டில் அறையில் தூக்கு போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று செல்லமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செல்லமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் செல்லமுத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வேலகவுண்டன்பட்டி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன் பட்டி அருகே இளநகர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது 50) .பெயிண்டர். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.  

    இதில் மூத்த மகள் நளினியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாசக்கல்பட்டி இளங்கோநகர் பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். 2 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தைகள் இல்லை .இந்நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் நாளினி இருந்து உள்ளார். 

    கடந்த வாரம் ஞாயிற்றுக்கி–ழமை சுந்தரத்தின் உறவினர் பெருமாள் இறந்ததின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நளினியும், ரகுபதியும் சொந்த ஊரில் இருந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் சுந்தரத்தின் மனைவி வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டு போடப்பட்டு இருந்தது.  

    கதவை தட்டியும் திறக்காததால்  சந்தேகம் அடைந்த தாய், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு மகள் நளினி சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு கதறி அழுதார்.  அக்கம்பக்கத்தினரை அழைத்து நளினி உடலை மீட்டனர். 

     இதுகுறித்து சுந்தரம் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்து தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
    ×