search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
    X

    இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

    • ஜன்னல் வழியாக பார்த்த போது கவுசல்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
    • அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே கவுசல்யா இறந்து விட்டதாக தெரிவித்தார்

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த தஞ்சாங்கரை பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி கவுசல்யா (26). இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார்.

    கடந்த இரண்டு வருடமாக கவுசல்யா அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். முத்துசாமி அவ்வப்போது தனது மனைவி, மகனை பார்த்து வந்துள்ளார். கவுசல்யாவின் தாய் தனது மகள், மருமக னிடம் நீங்கள் கவுந்தப்பாடி யில் போய் குடியேருமாறு அறிவுறுத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று கவுசல்யாவின் தாய் மற்றும் அவரது அண்ணன் வெளியே சென்று விட்டனர். வீட்டில் கவுசல்யா மற்றும் அவரது 2 வயது மகன் மட்டும் இருந்தனர். வெளியே சென்ற அவரது தாய் மற்றும் அண்ணன் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் வெளியே கவுசல்யா மகன் மட்டும் விளையாடிக் கொண்டிருந்தான். வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. அவரது தாய் கதவைத் தட்டி உள்ளார்.

    ஆனால் பதில் வரவில்லை. உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது கவுசல்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு வெள்ளோ ட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக அவரை பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே கவுசல்யா இறந்து விட்டதாக தெரிவி த்தார்.

    இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×