search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
    X

    இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

    • மனவேதனையில் இருந்த அமிர்தவர்ஷினி வீட்டின் அறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆர்.எஸ். கொளத்துப்பாளையம் காலனியை சேர்ந்தவர் சசிக்குமார்.

    இவரது மகள் அமிர்தவர்ஷினி (23). இவர் ஐ.எம்.எஸ்.சி படித்து விட்டு யு.பி.எஸ்.சி தேர்வுக்கு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அமிர்த்வர்ஷி னி யு.பி.எஸ்.சி. அமலாக்க தேர்வு எழுதி வந்தார்.

    தேர்வு கடினமாக இருந்ததாக அமிர்தவர்ஷினி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதில் மனவேதனையில் இருந்த அமிர்தவர்ஷினி வீட்டின் அறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது பெற்றோர் கதவை உடைத்து அமிர்தவர்ஷினியை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு அமிர்தவர்ஷினி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×