என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mati"
- சேலம் தாதகாப்பட்டி வேலு நகர் பகுதியில் உள்ள ஒரு கார் கம்பெனியில், சுந்தர் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
- சுந்தர் கம்பெனியில் உள்ள மேற்கூறையில் உள்ள கம்பியில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பொம்மி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 35). இவருக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு ரேவதி (31) என்ற பெண்ணுடன் திருமணமாகி, கிரிதர் (10) என்ற மகன் உள்ளான்.
சேலம் தாதகாப்பட்டி வேலு நகர் பகுதியில் உள்ள ஒரு கார் கம்பெனியில், சுந்தர் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல் சுந்தர் வேலைக்கு வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில், மாற்று காவலாளி அந்தோணிசாமி வந்து பார்த்தபோது, சுந்தர் கம்பெனியில் உள்ள மேற்கூறையில் உள்ள கம்பியில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தோணசாமி, இதுகுறித்து உடனடியாக கம்பெனி ஊழியர்களுக்கும், அன்னதானப்பட்டி போலீ சாருக்கும் தகவல் தெரி வித்தார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீ சார், சுந்தரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சுந்தரின் மனைவி ரேவதி கொடுத்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்