search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "development projects"

    • தூத்துக்குடி மாநாகராட்சியின் சுகாதாரம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது.
    • மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில் பசுமையான வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதால் கடந்த மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை மூலம் தூத்துக்குடி மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளோம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பழைய துறைமுகம் வரை செல்லும் தமிழ் சாலையின் இருபுறமும் தேங்கியுள்ள மணல் திட்டுகள் மற்றும் கற்களை அகற்றும் பணியினை மாநகர கமிஷனர் தினேஷ்குமார் முன்னிலையில் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    முன்னதாக மாலையில் தூத்துக்குடி மாநாகராட்சியின் சுகாதாரம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது. இதில் கமிஷனர், தலைமை சுகாதார அதிகாரி, சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள்,தூய்மைக் காவலர்கள், கண்கானிப்பாளர்கள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் போல்பேட்டை பிரதான சாலையினை அகலப்படுத்தும் பணி நிறைவுற்றுள்ளது. அதனை அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு வரை நீட்டித்து முடிக்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறியிருந்தார். அதன்படி தற்பொழுது நடைபெற்று வருகின்ற சாலை அகலப்படுத்தும் பணியினை மேயர் ஜெகன் பெரிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், இந்த பணிகளினால் பெருமளவு போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். மாநகரின் 60 வார்டுகளிலும் முழுமையான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில் பசுமையான வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதால் கடந்த மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை மூலம் தூத்துக்குடி மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளோம். அனைத்து பகுதிகளிலும் தூய்மையை கடைப்பிடிக்கும் விதமாக எட்டையாபுரம் போல்பேட்டை 60-வது அடி சாலைப்பகுதியில் மாசு தூசி படியாத வகையில் கால்வாய் ஒட்டிய பகுதிகளில் குறிப்பிட்ட அளவிற்கு புதிதாக தார்சாலை மற்றும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு அமெரிக்கன் மருத்துவமனை 4 வழித்தட முகப்பு வரை பதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் முதன்மை மாநகராட்சியாக தூத்துக்குடியை கொண்டு வரும் வகையில் முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் அறிவுரையின்படி கடந்த காலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக கால்வாய் அமைக்கப்பட்டு சாலைகள் அமைக்கும் பணியை 60 சதவீதத்திற்கு மேல் நிறைவு பெற்றுள்ளது. 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் செய்யாத பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். எல்லா பகுதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ், கவுன்சிலர்கள் தெய்வேந்திரன்,முத்துவேல் முன்னாள் கவுன்சிலர் ரவிந்திரன், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன்,ஜாஸ்பர், வட்டச்செயலாளர் முனியசாமி, மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரைக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
    • ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமாரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆணையர் அலுவலகத்தில் சந்தித்து தனது தொகுதியில் உள்ள குறைகள் அடங்கிய கோரிக்கை மனுவை வழங்கி னார். பின்னர் ராஜன் செல் லப்பா எம்.எல்.ஏ கூறியதா வது:-

    திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை, பாதாள சாக்கடை பிரச்சினை, சாலை பிரச்சினை ஆகிய வற்றை வார்டு வாரியாக மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்திருக்கிறேன். பாதாள சாக்கடை திட்டத்தை விரைவு படுத்த வும் வலியுறுத்தி உள்ளேன்.இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநக ராட்சி ஆணையர் உறுதி அளித்தார்.

    மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ெரயில்வே கேட் அடைத்திருப்பதால் பொது மக்கள், மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள். எனவே திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு வைகை கரை திட்டம், சாலைகள் என பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி னார். ஆனால் தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நாளை தனது தந்தை பெயரில் கட்டப்பட்ட நூல கத்தை அவர் திறக்கிறார். நூலகம் என்ற அடிப்படையில் நாங்கள் அதனை வரவேற்கிறோம் முதலில் 80 கோடிக்கு நிதி நிலையின் போது ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து 114 கோடி என்ற அளவில் தெரிவிக்கப்பட்டு இப்போது 210 கோடி என அறி விக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு பதிலாக மதுரை மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி இருக்கலாம். மகளிர் உரிமைத்தொகை ஒன்றை அறிவித்துவிட்டு அதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வழங்க வேண்டும். இந்த கட்டுப்பாடு களை புகுத்தினால் அரசு கூறியது போல் ஒரு கோடி மகளிர்க்கு வழங்க இயலாது.

    மதுரை மாநகராட்சிக்கு நிதி பற்றாக்குறை இருந்தால் மத்திய, மாநில அரசுகளிடம் நிதியை கேட்டுப் பெற வேண்டும். நாங்கள் இருந்த காலத்திலும் மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை இருந்தது. பல்வேறு நிதிகளை திரட்டி நிர்வாக திறனுடன் நிர்வா கத்தை செயல் படுத்தினோம். தற்போது இருக்கும் மேயர் மீது குற்றம்சாட்டவில்லை நிதியை பெற முயல வேண்டுெமன கூறுகிறேன்.நாளை மதுரை வரும் மு.க. ஸ்டாலின் மதுரைக்கான வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாளை காலை 9.30 மணிக்கு தென்திருப்பேரை பேரூராட்சியில் 4 லட்சம் லிட்டர் குடிநீர் தொட்டிக்கு அடிக்கல் நாட்டுதல் நடக்கிறது.
    • தொடர்ந்து எல்.கே. மேல்நிலைப்பள்ளி அருகில் மின்மாற்றி இயக்குதல் மற்றும் 13 பேட்டரி கார்கள் ஆகியவற்றை கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    உடன்குடி:

    திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நாளை (வியாழக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

    அடிக்கல் நாட்டுவிழா

    அதன்படி நாளை காலை 9.30 மணிக்கு தென்திருப்பேரை பேரூராட்சியில் 4 லட்சம் லிட்டர் குடிநீர் தொட்டிக்கு அடிக்கல் நாட்டுதல், ஆறுமுகநேரி பேருராட்சியில் மடத்துவிளை மற்றும் ராஜமன்னார்புரத்தில் புதிய ரேஷன் கடைகள் திறப்பு, காலை 10.30-க்கு ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு எதிர்புறம் உள்ள குப்பை கிடங்கை பார்வையிடுதல், காலை 10.45-க்கு காயல்பட்டினம் நகராட்சி அரசு மருத்துவமனையில் ரூ.62 கோடி மதிப்பு விரிவாக்க பணிகள் மற்றும் புதியசாலை பணிகளை கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    தொடர்ந்து எல்.கே. மேல்நிலைப்பள்ளி அருகில் மின்மாற்றி இயக்குதல், புதிய பஸ் நிலையம் அருகில் 2350 எல்.இ.டி.விளக்கு அமைக்கும் பணி மற்றும் 13 பேட்டரி கார்கள் ஆகியவற்றை தொடங்கி வைக்கின்றனர். மாலை 4.30 மணிக்கு உடன்குடி ஒன்றியம் லட்சுமிபுரம் ஊராட்சி வேப்பங்காட்டில் மக்கள் களம் நிகழ்ச்சி மற்றும் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டுதல், மாலை 5.30-க்கு நயினார்பத்து, மாலை 6.30-க்கு சீர்காட்சி ஆகிய ஊர்களில் மக்கள் களம் நிகழ்ச்சி நடக்கிறது.

    நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    • மழை காலங்களில் தேங்கும் தண்ணீர், மழைநீர் வடிகாலின் வழியாக குளத்திற்கு வரும்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி புதியபஸ் நிலையம் அருகில் புதிய சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்து மேலூர் ரெயில் நிலைய பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது அதனை மேயர் நேரில் பார்வையிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வி.எம்.எஸ்.நகர் குட்டத்து மாடசாமி கோவில் அருகில் உள்ள குளம் மாநகராட்சி சார்பில் புனர மைக்கப்பட்டது. அதனை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    குளத்தை சுற்றிலும் மரங்கள் நடப்படும்

    அப்போது அவர் கூறுகையில், இந்த பகுதியில் மழை காலங்களில் தேங்கும் தண்ணீர், மழைநீர் வடிகாலின் வழியாக குளத்திற்கு வரும்படி வழி வகை செய்யப் பட்டுள்ளது. கடுமையான கோடை காலத்திலும் குளத்தில் நீர் இருப்பதை பார்ப்பதற்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் வருங் காலங்களில் குளத்தை சுற்றிலும் மரங்கள் நடப்படும் என்றார்.

    தொடர்ந்து தூத்துக்குடி புதியபஸ் நிலையம் அருகில் புதிய சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்து மேலூர் ெரயில் நிலைய பொது மக்களின் பயன் பாட்டிற்கு வந்துள்ளது. அதனை மேயர் நேரில் பார்வையிட்டார். அப்போது எட்டையாபுரம் சாலை, ஜெயராஜ் சாலைக்கு செல்லும் ரெயில்வே பயணிகளும், பொதுமக்களும் பயன்படுத்துவதற்கு வசதியாக ரெயில்வே பாலத்தின் அருகில் உள்ள பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அங்கு விரைவில் நெடுஞ் சாலைதுறை மூலமாக புதிய தார்ச்சாலைகள், மாநக ராட்சி சார்பில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால் அதனையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேயர் உத்தரவு

    அப்போது அந்த பாலத்தின் கீழ் உள்ள பாதையில் பொது போக்கு வரத்திகு இடையூராக இருந்த பொருட்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்ட மேயர் இரவு நேரத்திலும் சாலை யை பயன்படுத்துவதற்கு வசதியாக மின் விளக்குகளும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார்.

    ஆய்வின் போது மாநகர தி.மு.க. துணை செயலா ளரும், கவுன்சிலருமான கீதாமுருகேசன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மேயரின் நேர்முக உதவி யாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் நிர்வாகிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
    • பல்வேறு துறைகளுக்கு இடையே மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொ டர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட த்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம்,

    கல்வித்துறை, காவல்துறை, கூட்டு றவுத்துறை, பொது ப்பணித்துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, நெடு ஞ்சாலைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இடையே மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொட ர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.

    மேலும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்ட ப்பணிகளையும் துரி தப்படுத்தி விரைவில் முடித்திடுமாறு தொடர்புடைய அலுவ லர்களுக்கு கலெக்டர் அறி வுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கூடுதல் கலெக்டர்- திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) டாக்டர் நாரணவ்ரே மனிஷ் சங்கர்ராவ்,

    கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ், (வளர்ச்சி) செல்வராஜன், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாள ர்கள் (தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்) (ஈரோடு) மோகன், (பெருந்துறை) .உதயகுமார்,

    துணை இயக்குநர் (பொது சுகா தாரம்) டாக்டர் சோம சுந்தரம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சூர்யா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமரன், அனைத்துத்துறை உயர் அலுவலர்கள், மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செந்துறை ஒன்றியத்தில் ரூ.11.44 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கபட்டது
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.11.44 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார். அதன்படி, இலைக்கடம்பூர்- ஆர்.எஸ்.மாத்தூர் சாலையை ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்து, இந்த சாலையினை செயல்படுவது மூலம் செந்துறை, ஆர். எஸ்.மாத்தூர், படைவெட்டிக்குடிகாடு, சோழங்குடிக்காடு, சன்னாசிநல்லூர், பெரியாக்குறிச்சி, நத்தக்குழி, பொன்பரப்பி மற்றும் திட்டக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்கள் பயன்பெறுவார்கள் என்றார். தொடர்ந்து, முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.75.19 லட்சம் மதிப்பிட்டில் பொன்பரப்பி -சிறுகளத்தூர் சாலை ரூ.1.24 கோடி மதிப்பீட்டிலும், சிறுகளத்தூர் கொடுக்கூர் சாலை ரூ.71.43 லட்சம் மதிப்பிட்டிலும், சன்னாசிநல்லூர் -தளவாய் பள்ளி சாலை ரூ.1.92 கோடி மதிப்பிட்டிலும், மற்றும் அயன்தத்தனூர் - முல்லையூர் பள்ளி சாலை மேம்படுத்தல் உள்ளிட்ட பணிகளை அமைச்சர் தொடக்கி வைத்தார்.

    தொடர்ந்து, குழுமூரில் 15-வது நிதி குழு மானியம் (சுகாதார நிதி) திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பிட்டில் துணை சுகாதார மைய கட்டட கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் முருகண்ணன், வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், நபார்டு மற்றும் கிராம சாலைகளின் திருச்சி கோட்டப் பொறியாளர் பெ.வடிவேல், உதவிக் கோட்டப் பொறியாளர் அரியலூர் வி.பி.சரவணன், உதவி பொறியாளர் எஸ்.பிரியதர்ஷினி, வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் பஸ் நிலைய பகுதியில் ரூ.59 லட்சம் மதிப்பில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடத்தில் ரூ.2.20 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். பல்லடம் நகராட்சி தினசரி சந்தை பகுதியில் ரூ.1.61 கோடி மதிப்பில் புதிய கடைகள் கட்டும்பணி, மற்றும் பல்லடம் பஸ் நிலைய பகுதியில் ரூ.59 லட்சம் மதிப்பில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.

    திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், நகராட்சித் தலைவர் கவிதாமணி முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் விநாயகம் வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.மேலும் நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், திமுக., நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார், நகர் மன்ற உறுப்பினர்கள், திமுக., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் ரூ.3.88 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது
    • போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    செந்துறை,

    தமிழக அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதன்படி பொதுமக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகள் அரியலூர் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.

    இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி இலங்கைசேரி கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள இலங்கைசேரி கிராம சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தும், அதனைத்தொடர்ந்து கீழமாளிகை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.9.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கீழமாளிகை அங்கன்வாடி கட்டடத்தினையும் திறந்து வைத்தார்.

    மேலும் அங்கன்வாடிக்கு வருகைதந்த குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களை வரவேற்றார். நிகழ்ச்சியில், மத்துமடக்கி கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் வீராக்கன் முதல் பொன்பரப்பி வரை சாலை அமைக்கும் பணியினையும், அதனைத் தொடர்ந்து கழுமங்கலம் கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.6 லட்சம் மதிப்பீட்டில் கழுமங்கலம் சாலை அமைக்கும் பணியினையும் துவக்கி வைத்தார்.

    அதேபோல் முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், நடைபெறும் பணிகளை தரமான பொருட்களைக் கொண்டு முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் செந்துறை தாசில்தார் பாக்கியம் விக்டோரியா மற்றும் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் அரசு அலுவலகங்கள் கலந்துகொண்டனர்.

    • வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • தூய்மைப் பணியாளா் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகைக்கான காசோலை அமைச்சா் வழங்கினாா்.

    திருப்பூர் :

    தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் தலைமையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:- தாராபுரம் நகராட்சியின் பொது விவரங்கள், குடிநீா் விநியோகம், செயல்பாட்டில் உள்ள திட்டப் பணிகள், முடிவுற்ற திட்டப் பணிகள், முதல்வரின் காலை உணவுத் திட்டம், கலைஞா் நகா்புற மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், நகா்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், 15-வது மத்திய நிதிக்குழு மானியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் முழு கவனம் செலுத்தி உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.

    இதைத்தொடா்ந்து, தாட்கோ சாா்பில் ஒரு பயனாளிக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகைக்கான ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையையும், 26 பயனாளிகளுக்கு தமிழ்நாடு தூய்மைப்பணியாளா் நல வாரியத்தின் கீழ் அடையாள அட்டைகளையும் அமைச்சா் வழங்கினாா்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், திருப்பூா் மாநகராட்சி 4 ம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, ஆவின் பொதுமேலாளா் சுஜாதா, தூய்மைப் பணியாளா்கள், மாநில நலவாரிய துணைத்தலைவா் கனிமொழி பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • வளர்ச்சி திட்ட பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கு வேண்டும் என அறிவுறுத்தினார்.
    • ஆவின் பால் தயாரிக்கும் கட்டிடம் கட்டும் பணியை பார்வையிட்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆரப்பள்ளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், பிரதம மந்திரியின் வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் கலைஞர் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கிராம ஊராட்சி செயலகம் கட்டும் பணி, ஆவின் பால் தயாரிக்கும் கட்டிடம் கட்டும் பணி, அரசு வீடுகள் கட்டும்பணி, ஊராட்சியில் 600 குடும்பங்க ளுக்கு தனிநபர் உறிஞ்சிகுழி அமைக்கப்பட்டு வரும் பணி,கழிவு நீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி, அங்குள்ள சாவடிக்குளம் சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை கட்டும் பணி உள்ளிட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இது குறித்து கலெக்டர் அதிகாரிகளிடம் கூறுகை யில், அனைத்து பணிகளையும் தரமாகவும் விரைந்தும் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வில் ஒன்றிய ஆணையர் அருள்மொழி, பிடிஓ ரெஜினாராணி, ஒன்றிய பொறியாளர்கள்தாரா, பலராமன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அமலாராணி, ஊராட்சி மன்ற தலைவர் வனிதாமுரு கானந்தம் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • புதிய கட்டிடம் அமைப்பதற்கான இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகள் மற்றும் கொடுமுடி பேரூரா ட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, கலெக்டர் சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட வள்ளியம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.13.12 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுமார் 1.40 லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி யினையும் மற்றும் நீர்த்தேக்க தொட்டிக்கு காவிரிஆற்றில் இருந்து நீர் செல்வதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பகுதிக்கு குடிநீர் தேவைகள் குறித்தும் தொடர்புடைய அலு வலர்களிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து கொடுமுடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நூலகம் கட்டுவத ற்கான இடம் மற்றும் ஆவுடையார்பாறை பகுதி யில் பழுதடைந்த நிலையில் உள்ள துணை சுகாதார நிலை யத்தினை அப்பு றப்படுத்தி புதிய கட்டிடம் அமைப்பதற்கான இடத்தி னையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மேலும் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், நெல் தரிசில் எண்ணெய் வித்து பரப்பினை அதிகரித்தல் திட்டத்தின் கீழ் ரூ.42,000 மானிய உதவியுடன் ரோட்ட வேட்டர் வழங்கப்பட்டு ள்ளதையும் மற்றும் வடிவுள்ள மங்களம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம், பல்லாண்டுநறுமணபயிர் பரப்புவிரிவாக்கம் திட்டத்தின் கீழ் ரூ.20,000 மானியஉதவியுடன் மிளகு பயிரிடப்பட்டுள்ளதையும் மற்றும் இயற்கை முறையில் பாக்கு மரத்தில் வெற்றிலை கொடி பயிரிடப்பட்டுள்ள தையும் பார்வையிட்டார்.

    முன்னதாக, ஆவுடை யார்பாறை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், நூலக கட்டிடம் புணரமைப்பு பணி மேற்கொள்ளப் பட்டுள்ளதையும், ஆவுடையார்பாறைஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளி வளாகத்தில் பள்ளி உட்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.36,000 மதிப்பீட்டில் சத்துணவு சமையலறை பராமரிப்பு பணியினையும், ரூ.27.17 லட்சம் மதிப்பீட்டில் ஆவுடையார்பாறை ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியினையும்,

    ஆவுடையார் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.72 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும் மற்றும் நாகமநாயக்கன் பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.97 லட்சம் மதிப்பீட்டில் தென்னை மரத்திற்கு வாய்க்கால் வரப்புகட்டும் பணியினையும் (தனிநபர்) நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரை வாக முடித்திட அலு வலர்களுக்கு அறிவுறுத்தி னார்.

    இந்த ஆய்வின்போது கொடுமுடி பேரூராட்சி தலைவர் திலகவதி, கொடு முடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், உமா, கொடுமுடி தாசில்தார் முத்துகிருஷ்ணன், குடிநீர் வடிகால் வாரிய செய ற்பொறியாளர் வீரராஜன், உதவிபொறியளார் குருசாமி, ஊராட்சி ஒன்றிய உதவிபொறியாளர் விஜய ராகவன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
    • வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், படியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கனிமங்கள் மற்றும் குவாரிகள் சிறு கனிம திட்டத்தின் கீழ் ரூ.19.60 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டும் பணிகள், கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் எஸ்.என்.எம். சாலை முதல் படியூா் வரை சாலை மேம்படுத்துதல், சிவன்மலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.9.59 லட்சம் மதிப்பீட்டில் நாற்றாங்கால் அமைத்தல், ரூ.3.13 கோடி மதிப்பீட்டில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமானப் பணிகள் என ரூ.7.11 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேற்கண்டப் பணிகளை கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதையடுத்து, காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராகவேந்திரன், விமலாதேவி ஆகியோா் உடனிருந்தனா்

    ×