search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு
    X

    கொடுமுடி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்ைவயிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • புதிய கட்டிடம் அமைப்பதற்கான இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகள் மற்றும் கொடுமுடி பேரூரா ட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, கலெக்டர் சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட வள்ளியம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.13.12 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுமார் 1.40 லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி யினையும் மற்றும் நீர்த்தேக்க தொட்டிக்கு காவிரிஆற்றில் இருந்து நீர் செல்வதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இப்பகுதிக்கு குடிநீர் தேவைகள் குறித்தும் தொடர்புடைய அலு வலர்களிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து கொடுமுடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நூலகம் கட்டுவத ற்கான இடம் மற்றும் ஆவுடையார்பாறை பகுதி யில் பழுதடைந்த நிலையில் உள்ள துணை சுகாதார நிலை யத்தினை அப்பு றப்படுத்தி புதிய கட்டிடம் அமைப்பதற்கான இடத்தி னையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மேலும் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், நெல் தரிசில் எண்ணெய் வித்து பரப்பினை அதிகரித்தல் திட்டத்தின் கீழ் ரூ.42,000 மானிய உதவியுடன் ரோட்ட வேட்டர் வழங்கப்பட்டு ள்ளதையும் மற்றும் வடிவுள்ள மங்களம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம், பல்லாண்டுநறுமணபயிர் பரப்புவிரிவாக்கம் திட்டத்தின் கீழ் ரூ.20,000 மானியஉதவியுடன் மிளகு பயிரிடப்பட்டுள்ளதையும் மற்றும் இயற்கை முறையில் பாக்கு மரத்தில் வெற்றிலை கொடி பயிரிடப்பட்டுள்ள தையும் பார்வையிட்டார்.

    முன்னதாக, ஆவுடை யார்பாறை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், நூலக கட்டிடம் புணரமைப்பு பணி மேற்கொள்ளப் பட்டுள்ளதையும், ஆவுடையார்பாறைஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளி வளாகத்தில் பள்ளி உட்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.36,000 மதிப்பீட்டில் சத்துணவு சமையலறை பராமரிப்பு பணியினையும், ரூ.27.17 லட்சம் மதிப்பீட்டில் ஆவுடையார்பாறை ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியினையும்,

    ஆவுடையார் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.72 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும் மற்றும் நாகமநாயக்கன் பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.97 லட்சம் மதிப்பீட்டில் தென்னை மரத்திற்கு வாய்க்கால் வரப்புகட்டும் பணியினையும் (தனிநபர்) நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரை வாக முடித்திட அலு வலர்களுக்கு அறிவுறுத்தி னார்.

    இந்த ஆய்வின்போது கொடுமுடி பேரூராட்சி தலைவர் திலகவதி, கொடு முடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், உமா, கொடுமுடி தாசில்தார் முத்துகிருஷ்ணன், குடிநீர் வடிகால் வாரிய செய ற்பொறியாளர் வீரராஜன், உதவிபொறியளார் குருசாமி, ஊராட்சி ஒன்றிய உதவிபொறியாளர் விஜய ராகவன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×