search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளா்ச்சி திட்டப்பணிகள்"

    • பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்கள், ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூா் பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    திருப்பூர் கலெக்டர அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக திருப்பூா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்கள், ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூா் பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், 15-வது நிதிக்குழு மானியத்திட்டம், தமிழ்நாடு ஊரக கிராம சாலைகள் உட்கட்டமைப்புத் திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    குடிநீா் விநியோகம், வடிகால், தெருவிளக்கு, சாலை, பொதுக் கழிப்பிடம், நியாய விலைக் கடை, சமுதாய நலக்கூடம், தொகுப்பு வீடுகள், பேருந்து மற்றும் நிழற்குடை, பள்ளிக் கட்டடம், சத்துணவு மையம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம், கால்நடை மருத்துவமனை, மயானம் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேற்கண்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டு கொண்டுவர வேண்டும் என்றாா்.

    ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மதுமிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, திருப்பூா் மற்றும் ஊத்துக்குளி வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊத்துக்குளி மற்றம் குன்னத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
    • வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், படியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கனிமங்கள் மற்றும் குவாரிகள் சிறு கனிம திட்டத்தின் கீழ் ரூ.19.60 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டும் பணிகள், கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் எஸ்.என்.எம். சாலை முதல் படியூா் வரை சாலை மேம்படுத்துதல், சிவன்மலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.9.59 லட்சம் மதிப்பீட்டில் நாற்றாங்கால் அமைத்தல், ரூ.3.13 கோடி மதிப்பீட்டில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமானப் பணிகள் என ரூ.7.11 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேற்கண்டப் பணிகளை கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதையடுத்து, காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராகவேந்திரன், விமலாதேவி ஆகியோா் உடனிருந்தனா்

    ×