search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளி-குன்னத்தூா் பேரூராட்சி வளா்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை
    X

    வளா்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றபோது எடுத்த படம்.

    ஊத்துக்குளி-குன்னத்தூா் பேரூராட்சி வளா்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை

    • பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்கள், ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூா் பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    திருப்பூர் கலெக்டர அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக திருப்பூா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்கள், ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூா் பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், 15-வது நிதிக்குழு மானியத்திட்டம், தமிழ்நாடு ஊரக கிராம சாலைகள் உட்கட்டமைப்புத் திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    குடிநீா் விநியோகம், வடிகால், தெருவிளக்கு, சாலை, பொதுக் கழிப்பிடம், நியாய விலைக் கடை, சமுதாய நலக்கூடம், தொகுப்பு வீடுகள், பேருந்து மற்றும் நிழற்குடை, பள்ளிக் கட்டடம், சத்துணவு மையம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம், கால்நடை மருத்துவமனை, மயானம் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேற்கண்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டு கொண்டுவர வேண்டும் என்றாா்.

    ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மதுமிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, திருப்பூா் மற்றும் ஊத்துக்குளி வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊத்துக்குளி மற்றம் குன்னத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×