search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி திட்டப்பணி"

    • சாத்தூர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் அதனை தரமானதாகவும், விரைந்து முடித்தும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் கத்தாளம்பட்டி ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தினையும், பொது நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட்டு வருவதையும், முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28.17 லட்சம் மதிப்பில் அம்மா பட்டி சாலையிலிருந்து கே.புதூர் சாலை வரை அமைக்கப்பட்டுள்ள சாலை பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    நென்மேனி ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவல கத்தினையும், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி மதிப்பில் நென்மேனி-வன்னிமடை சாலையில் பாலம் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    முதல்-அமைச்சர் கிராம சாலைமேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.64.13 லட்சம் மதிப்பில் வன்னி மடை முதல் பெரியகுளம் கண்மாய் வரை சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், வன்னிமடை ஆதிதிராவிடர் காலனியில் ரூ.37.43 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    இதேபோல் சிந்து வார்பட்டி, போத்தி ரெட்டியாபட்டி, உப்பத்தூர், முள்ளிசெவல் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் அதனை தரமான தாகவும், விரைந்து முடித்தும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • மாணவர்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசின் சார்பில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    சாத்தூர் வட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் உள்ள சிப்காட்-க்கு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ரூ.26.50 கோடி மதிப்பில் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் இ.குமாரலிங்கம் மற்றும் மேட்டமலை ஆகிய இடங்களில் நியாய விலைக் கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, மேட்டமலை ஊராட்சி, மடத்துக்காடு பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 112 பயனாளிகளுக்கு, வீடுகட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும்,மேட்டமலை நடுத்தெருவில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினையும், சின்னக்காமன்பட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் செயல்படும் அரசு மாணவர் விடுதியினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மாணவர்களின் எண்ணிக்கை, வழங்கப் படும் உணவுகளின் தரம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சின்னகாமன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ-மாணவி களுடன் கலந்துரையாடி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள், உயர்கல்விக்கான வாய்ப்புகள், உதவித்தொகைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் உயர்கல்வி பயிலவதற்கான துறைகள் மற்றும் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது, தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வது உள்ளிட்டவைகள் குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

    பல்லடம் பஸ் நிலைய பகுதியில் ரூ.59 லட்சம் மதிப்பில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடத்தில் ரூ.2.20 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். பல்லடம் நகராட்சி தினசரி சந்தை பகுதியில் ரூ.1.61 கோடி மதிப்பில் புதிய கடைகள் கட்டும்பணி, மற்றும் பல்லடம் பஸ் நிலைய பகுதியில் ரூ.59 லட்சம் மதிப்பில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.

    திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், நகராட்சித் தலைவர் கவிதாமணி முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் விநாயகம் வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.மேலும் நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், திமுக., நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார், நகர் மன்ற உறுப்பினர்கள், திமுக., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு முதலமைச்சரே நேரில் சென்று இது போன்ற திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார்.
    • வறுமையை ஒழித்துத்தரமான வாழ்விற்கு தேவையான அடிப்படைகளை நிர்ணயம் செய்யும் என்றார்.

    குடிமங்கலம் 

    தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்த நிலையில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் இரண்டு, மூன்று மாவட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரே நேரில் சென்று இது போன்ற திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார். இந்த அரசின் தொடர் முயற்சிகள், வறுமையை ஒழித்துத்தரமான வாழ்விற்கு தேவையான அடிப்படைகளை நிர்ணயம் செய்யும் என்றார்.

    தொடர்ந்து 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.20,000 மதிப்பீட்டில் தொழில் கடனுதவிக்கான காசோலையையும், 8 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.70.20 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிக்கான காசோலையையும் என மொத்தம் ரூ.70.40 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மதுமிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுகந்தி முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாதிக் பாட்ஷா, சிவகுருநாதன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு தரமாக, சுவையாக உள்ளதா என சோதனை
    • அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டைமாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவ லர் வி.சம்பத் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் சிறுகரும்பூர், வேகா மங்கலம் ஆகிய ஊராட்சியில் தோட்டக்கலை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நலத் திட்ட உதவிகள் மற்றும் அவற்றை செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை நேரடியாக விவசாயிகள் நிலத்திற்கு சென்று பார் வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

    இதனை தொடர்ந்து சிறுகரும்பூர் ஊராட்சியில் முதலாவது தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை, உயரம் அளவீடு செய்வதை பார்வையிட்டார். மேலும் அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு தரமாக, சுவையாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் வளர்மதி, வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, துணை இயக்குனர்கள் லதா, விஸ்வநாதன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×