search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "development project"

    • நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா தலைமை தாங்கினார்.
    • கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி உலகநாத நாராயணசாமி கலை கல்லூரியின் கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு, திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு ஆதிதிராவிட கல்லூரி மாணவர் மாணவியர் விடுதிகளில் பயிலும் மாணவர்களுக்கான அண்ணல் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்டம் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் வரவேற்றார்.

    பொன்னேரி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாட்சியர் சித்ரா, பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலைக்கல்லூரி முதல்வர் தில்லை நாயகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு விடுதிகளில் பயிலும் மாணவிகள் கலந்து கொண்டு தாங்கள் விடுதியில் தங்கியிருந்து படிக்கும் நிலைகள் குறைத்து எடுத்துரைத்தனர் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர். செரின் ஆசா அண்ணல் அம்பேத்கரின் பிறப்பு மற்றும் வளர்ப்பு குறித்தும், சாதியல் தீண்டாமை கொடுமைக்கு ஆளாகி கல்வியால் சட்டம் பயின்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எவ்வாறு பல துன்பங்களுக்கு மத்தியில் உருவாக்கினார் என்பது குறித்தும் தியாகங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் பூபதிஜான், பட்டதாரி காப்பாளினி மரிய ஜெயந்தி, கல்லூரி தமிழ் பேராசிரியர் தேவராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி லேஜா உள்ளிட்டோர் நோக்க உரையாற்றினர். பட்டதாரி காப்பாளர் நன்றி உரையாற்றினார். கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

    • திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது.
    • இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூர் பனியன் தொழிலை நம்பியுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்களும், தொழில் நிமித்தமாக இங்கு வந்து செல்கின்றனர். இருப்பினும், கட்டமைப்பு வசதிகளில் சற்று பின்தங்கியுள்ளது.தற்போது வேகமாக வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.

    இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூர் பனியன் தொழிலை நம்பியுள்ளனர். திருப்பூர், பல்லடம், அவிநாசி சுற்றுப்பகுதியில் மட்டும் 1.60 லட்சத்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர்.

    வடமாநில தொழிலாளர்கள் தினமும் ஆயிரக்கணக்கானோர் ரெயில்கள் வழியாக வந்து செல்கின்றனர். அத்துடன் ஆயிரக்கணக்கான பயணிகள், தினமும் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இருப்பினும் கோவை, ஈரோடு ரெயில்வே சந்திப்புகளுடன் ஒப்பிடுகையில் திருப்பூர் ரெயில் நிலையம் வசதிகளில் பின்தங்கியுள்ளது.மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தில் திருப்பூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்திட ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன. விரைவில் முழுமையாக ஆலோசித்து மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் தொழில் அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:- திருப்பூர் ரெயில் நிலையம் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தில் மேம்படுத்தப்படுமென தெரிவித்துள்ளனர். தெற்கு பகுதியில் உள்ளது போலவே வடக்கு பகுதியிலும், இரு சக்கர வாகன நிறுத்தம், டிக்கெட் கவுன்டர், புக்கிங் சென்டர் போன்ற வசதிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ெரயில்வே பயணிகளுக்கு கூடுதல் வசதிகளும் செய்து கொடுக்கப்படும். ரெயில்வே சந்திப்பில் உள்ள அனைத்து வசதிகளும் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு கிடைக்கும். அம்ரூத் திட்டத்தில் ரெயில் நிலையம் மேம்பாடு செய்வது தொடர்பாக விரைவில் தொழில் அமைப்பு பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

    • சத்துணவு சமையலறை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
    • மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்கும் பணி புதிதாக தொடங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    முத்தூர் பேரூராட்சி காந்திநகர் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் பொது சுகாதார வளாக கட்டிடம், சக்கரபாளையத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 90 ஆயிரத்தில் அங்கன்வாடி கட்டிடம், மு.வேலாயுதம்பா ளையத்தில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.11 லட்சத்தில் இருப்பறையுடன் கூடிய சத்துணவு சமையலறை கட்டிடம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டுள்ளது.

    செங்கோடம்பா ளையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.72 லட்சத்து 60 ஆயிரத்தில் நொய்யல் ஆறு வரை தார்சாலை பலப்படுத்தும் பணி, புதுப்பாளையம், புளியங்காட்டுத்தோட்டம் வீதி, நகப்பாளையம், பெருமாள்புதூர் கிழக்கு குறுக்கு வீதி ஆகிய பகுதிகளில் மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்கும் பணியும் புதிதாக தொடங்கப்பட உள்ளது.

    வளர்ச்சித்திட்ட பணிகள் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும், தார்ச்சாலை பணிகளுக்கு பூமி பூஜை செய்தும் தொடங்கி வைத்தார். மேலும் மோளக்கவுண்டன்புதூர் கிராமத்தில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடை, சின்னமுத்தூர் பிரிவில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.2 கோடியே 8 லட்சத்தில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். விழாவில் முத்தூர் தி.மு.க. பேரூர் செயலாளர் செண்பகம் பாலு, பேரூராட்சி தலைவர் எஸ்.சுந்தராம்பாள், துணை தலைவர் மு.க.அப்பு, மாவட்ட துணை செயலாளர்

    ராசி கே.ஆர்.முத்துக்கு மார், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சுந்தரமூர்த்தி, செயல் அலுவலர் (பொறுப்பு) மீனா கவுரி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க.தெற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு தரமாக, சுவையாக உள்ளதா என சோதனை
    • அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டைமாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவ லர் வி.சம்பத் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் சிறுகரும்பூர், வேகா மங்கலம் ஆகிய ஊராட்சியில் தோட்டக்கலை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நலத் திட்ட உதவிகள் மற்றும் அவற்றை செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை நேரடியாக விவசாயிகள் நிலத்திற்கு சென்று பார் வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

    இதனை தொடர்ந்து சிறுகரும்பூர் ஊராட்சியில் முதலாவது தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை, உயரம் அளவீடு செய்வதை பார்வையிட்டார். மேலும் அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு தரமாக, சுவையாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் வளர்மதி, வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, துணை இயக்குனர்கள் லதா, விஸ்வநாதன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர்வினீத் நேரில் பாா்வை யிட்டு ஆய்வு செய்தாா்.
    • பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரில் குடிநீா் குழாய் பதித்தல், சாலை வசதி, பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மாநகராட்சி நிா்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திருப்பூா் மாநகராட்சி 2 மற்றும் 4 வது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர்வினீத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

    இதில் திருப்பூா் மாநகராட்சி 2 வது மண்டலத்துக்கு உள்பட்ட கவிதா நகா் பகுதியில் 4 வது குடிநீா் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளைப் பாா்வையிட்டாா். அதே போல 4 வது மண்டலத்துக்கு உட்பட்ட கிருஷ்ணா நகா், ஜான்ஜோதி காா்டன் பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது வளா்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினாா்.

    இதைத்தொடா்ந்து எஸ்.ஆா்.நகா் நீருந்து நிலையத்தில் மரக்கன்றுகளை கலெக்டர் நட்டுவைத்தாா். இந்த ஆய்வின்போது, திருப்பூா் மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மண்டல உதவி ஆணையா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    ரூ.2 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளன.

    அவினாசி:

    அவிநாசி வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தொடங்கி வைத்தார். அவிநாசி பேரூராட்சி எம்.ஆா்.பி. வீதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்.

    தொடா்ந்து, அவிநாசி காந்திபுரம் பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடை மற்றும் அம்மபாளையம், ராக்கியபாளையம், அவிநாசி, செம்யநல்லூா், நம்பியாம்பாளையம், தெக்கலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை ஆ.ராசா தொடங்கி வைத்தாா்.

    இதனைத் தொடா்ந்து, அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் 33 கிராம அருந்ததியா் மக்களுக்கு சொந்தமாக உள்ள இடத்தில் மண்டபம் அமைத்துத் தருமாறு அவிநாசி வட்ட அருந்ததியா் சமூக மட அறக்கட்டளையினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்ததையடுத்து, அந்த இடத்தை பாா்வையிட்டு விரைவில் மண்டபம் அமைத்து தரப்படும் என்றாா்.

    இந்நிகழ்ச்சியில், அவிநாசி பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, குமாா்(திருமுருகன்பூண்டி), செயல் அலுவலா் செந்தில் குமாா் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • நிலம் செம்மைப்படுத்தவும், இடுபொருட்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
    • நிலங்களிலுள்ள முட் புதர்களை அகற்றுதல், சமன் படுத்துதல், உழவு செய்தல் ஆகிய பணிகளுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் வட்டாரத்தில், 24 கிராமங்களில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நிலம் செம்மைப்படுத்தவும், இடுபொருட்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:-

    விவசாய நிலங்கள், போதியளவு மழை பொழிவு இல்லாததாலும், தொழிலாளர் பற்றாக்குறையாலும், விவசாயம் செய்யப்படாமல், தரிசு நிலங்களாக மாறி வருகிறது. வேளாண் துறை சார்பில், வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ், நிலங்களிலுள்ள முட் புதர்களை அகற்றுதல், சமன் படுத்துதல், உழவு செய்தல் ஆகிய பணிகளுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. மேலும் இந்நிலங்களில் சாகுபடி மேற்கொள்ள தேவையான விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகளும், வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக, மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    குடிமங்கலம் வட்டாரத்தில் 24 கிராமங்களில், தரிசு நில மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தரிசு நில விவசாயிகள், சிட்டா, பட்டா, ஆதார் அட்டை நகல், போட்டோ ஆகியவற்றுடன், வேளாண் அலுவலங்களை அணுகி தரிசு நிலங்களை திருத்தி விளை நிலங்களாக மாற்றி பயன்பெறலாம்.இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட கோட்டைமேடு கண்ணகி பள்ளி தெற்கு பகுதியில் விழுப்புரம் சாலையில், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு பகுதி சார்பில் ரூ.45 லட்சம் செலவில் யூ வடிவ கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.
    • வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் ரங்கமன்னார், கோட்டைமேடு பகுதி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சங்கர், தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட கோட்டைமேடு கண்ணகி பள்ளி தெற்கு பகுதியில் விழுப்புரம் சாலையில், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு பகுதி சார்பில் ரூ.45 லட்சம் செலவில் யூ வடிவ கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.

    அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சுந்தரராஜ், உதவி பொறியாளர்கள் பாவாடை, சீனிவாசன், இளநிலை பொறியாளர் சித்தார்த்தன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் ரங்கமன்னார், கோட்டைமேடு பகுதி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சங்கர், தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல், கண்ணகி அரசு பள்ளியின் நுழைவு வாயிலில் இரும்பு கதவு, விழுந்த மதில்சுவர்களை புதிதாக கட்டுவதற்கும், பள்ளி வளாக சாலைகள் பராமரிப்பு பணிக்கும் ரூ.25 லட்சம் மதிப்பில் பணிகளையும், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உறுவையாறு பாலாத்தின் ஷட்டர் அமைப்புகளை புதியதாக மாற்றுவதற்கு ரூ.36 லட்சம் மதிப்பிலான பணிகளையும் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் சங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
    கரூர்:

    கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, காதப்பாறை, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, கோயம்பள்ளி, சேமூர், வாங்கல் குப்புச்சிபாளையம், மண்மங்கலம், நெரூர் தெற்கு மற்றும் வடக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் சாலை மேம்பாடு செய்தல், சாக்கடை வசதி செய்தல், கூட்டு குடிநீர் திட்ட பணிகள் என ரூ.2 கோடியே 56 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

    பின்னர் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி அரசு காலணி-சோமூர் கல்லூப்பாளையம்- அச்சமாபுரம் ஆகிய பகுதிகளில் ரூ.36 லட்சத்து 55 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 3 சமுதாய கூடங்களையும், கோயம்பள்ளியில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தையும் திறந்து வைத்தல் என மொத்தம் ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதகிளில் இன்று 13 இடங்களில் ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலப்பாளையம் புலியூர் இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்டப்பாலத்தின் அணுகு சாலையை கரூரை சுற்றி அமையவுள்ள சுற்றுவட்டச்சாலையுடன் இணைத்து சாலை வசதி மேம்படுத்தப்படும். கோயம்பள்ளி, செல்லிபாளையம் ஊராட்சிகளில் ரூ.34 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கோயம்பள்ளி மற்றும் செல்லிபாளையத்தில் ஆதார் எண் பதிய தவறியதால் அரிசி பெற இயலவில்லை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையினை ஏற்று கோயம்பள்ளி மற்றும் செல்லிபாளையம் ஊராட்சியில் ஆதார் எண் பதியாமல் விடுபட்டுள்ள நபர்களின் குடும்ப அட்டைகளை உரிய முறையில் பதிவு செய்திட சிறப்பு முகாமினை நடத்த அமைச்சர் உத்தரவிட்டார்.

    இதில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோ, கரூர் வட்டார வளர்ச்சி அதிகாரி பரமேஸ்வரன், மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் காளியப்பன், கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, முன்னாள் மாணவரணி தலைவர் என். தானேஷ், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×