search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளா்ச்சி  திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    வளா்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

    • வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர்வினீத் நேரில் பாா்வை யிட்டு ஆய்வு செய்தாா்.
    • பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரில் குடிநீா் குழாய் பதித்தல், சாலை வசதி, பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மாநகராட்சி நிா்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திருப்பூா் மாநகராட்சி 2 மற்றும் 4 வது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர்வினீத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

    இதில் திருப்பூா் மாநகராட்சி 2 வது மண்டலத்துக்கு உள்பட்ட கவிதா நகா் பகுதியில் 4 வது குடிநீா் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளைப் பாா்வையிட்டாா். அதே போல 4 வது மண்டலத்துக்கு உட்பட்ட கிருஷ்ணா நகா், ஜான்ஜோதி காா்டன் பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது வளா்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினாா்.

    இதைத்தொடா்ந்து எஸ்.ஆா்.நகா் நீருந்து நிலையத்தில் மரக்கன்றுகளை கலெக்டர் நட்டுவைத்தாா். இந்த ஆய்வின்போது, திருப்பூா் மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மண்டல உதவி ஆணையா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    Next Story
    ×