search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்டம் துவக்கவிழா
    X

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்டம் துவக்கவிழா

    • நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா தலைமை தாங்கினார்.
    • கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி உலகநாத நாராயணசாமி கலை கல்லூரியின் கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு, திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு ஆதிதிராவிட கல்லூரி மாணவர் மாணவியர் விடுதிகளில் பயிலும் மாணவர்களுக்கான அண்ணல் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்டம் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் வரவேற்றார்.

    பொன்னேரி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாட்சியர் சித்ரா, பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலைக்கல்லூரி முதல்வர் தில்லை நாயகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு விடுதிகளில் பயிலும் மாணவிகள் கலந்து கொண்டு தாங்கள் விடுதியில் தங்கியிருந்து படிக்கும் நிலைகள் குறைத்து எடுத்துரைத்தனர் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர். செரின் ஆசா அண்ணல் அம்பேத்கரின் பிறப்பு மற்றும் வளர்ப்பு குறித்தும், சாதியல் தீண்டாமை கொடுமைக்கு ஆளாகி கல்வியால் சட்டம் பயின்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எவ்வாறு பல துன்பங்களுக்கு மத்தியில் உருவாக்கினார் என்பது குறித்தும் தியாகங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் பூபதிஜான், பட்டதாரி காப்பாளினி மரிய ஜெயந்தி, கல்லூரி தமிழ் பேராசிரியர் தேவராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி லேஜா உள்ளிட்டோர் நோக்க உரையாற்றினர். பட்டதாரி காப்பாளர் நன்றி உரையாற்றினார். கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×