search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி பகுதியில் ரூ.2.20கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் - ஆ.ராசா எம்.பி., தொடங்கி வைத்தார்
    X

    ஆ.ராசா எம்.பி., 

    அவினாசி பகுதியில் ரூ.2.20கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் - ஆ.ராசா எம்.பி., தொடங்கி வைத்தார்

    ரூ.2 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளன.

    அவினாசி:

    அவிநாசி வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தொடங்கி வைத்தார். அவிநாசி பேரூராட்சி எம்.ஆா்.பி. வீதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்.

    தொடா்ந்து, அவிநாசி காந்திபுரம் பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடை மற்றும் அம்மபாளையம், ராக்கியபாளையம், அவிநாசி, செம்யநல்லூா், நம்பியாம்பாளையம், தெக்கலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை ஆ.ராசா தொடங்கி வைத்தாா்.

    இதனைத் தொடா்ந்து, அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் 33 கிராம அருந்ததியா் மக்களுக்கு சொந்தமாக உள்ள இடத்தில் மண்டபம் அமைத்துத் தருமாறு அவிநாசி வட்ட அருந்ததியா் சமூக மட அறக்கட்டளையினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்ததையடுத்து, அந்த இடத்தை பாா்வையிட்டு விரைவில் மண்டபம் அமைத்து தரப்படும் என்றாா்.

    இந்நிகழ்ச்சியில், அவிநாசி பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, குமாா்(திருமுருகன்பூண்டி), செயல் அலுவலா் செந்தில் குமாா் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×