search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிமங்கலம் வட்டாரத்தில் 24 கிராமங்களில் தரிசு நில மேம்பாட்டு திட்டம் - விவசாயிகளுக்கு அழைப்பு
    X

    கோப்புபடம்.

    குடிமங்கலம் வட்டாரத்தில் 24 கிராமங்களில் தரிசு நில மேம்பாட்டு திட்டம் - விவசாயிகளுக்கு அழைப்பு

    • நிலம் செம்மைப்படுத்தவும், இடுபொருட்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
    • நிலங்களிலுள்ள முட் புதர்களை அகற்றுதல், சமன் படுத்துதல், உழவு செய்தல் ஆகிய பணிகளுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் வட்டாரத்தில், 24 கிராமங்களில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நிலம் செம்மைப்படுத்தவும், இடுபொருட்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:-

    விவசாய நிலங்கள், போதியளவு மழை பொழிவு இல்லாததாலும், தொழிலாளர் பற்றாக்குறையாலும், விவசாயம் செய்யப்படாமல், தரிசு நிலங்களாக மாறி வருகிறது. வேளாண் துறை சார்பில், வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ், நிலங்களிலுள்ள முட் புதர்களை அகற்றுதல், சமன் படுத்துதல், உழவு செய்தல் ஆகிய பணிகளுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. மேலும் இந்நிலங்களில் சாகுபடி மேற்கொள்ள தேவையான விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகளும், வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக, மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    குடிமங்கலம் வட்டாரத்தில் 24 கிராமங்களில், தரிசு நில மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தரிசு நில விவசாயிகள், சிட்டா, பட்டா, ஆதார் அட்டை நகல், போட்டோ ஆகியவற்றுடன், வேளாண் அலுவலங்களை அணுகி தரிசு நிலங்களை திருத்தி விளை நிலங்களாக மாற்றி பயன்பெறலாம்.இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    Next Story
    ×