search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
    X

    நென்மேனி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

    • சாத்தூர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் அதனை தரமானதாகவும், விரைந்து முடித்தும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் கத்தாளம்பட்டி ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தினையும், பொது நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட்டு வருவதையும், முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28.17 லட்சம் மதிப்பில் அம்மா பட்டி சாலையிலிருந்து கே.புதூர் சாலை வரை அமைக்கப்பட்டுள்ள சாலை பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    நென்மேனி ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவல கத்தினையும், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி மதிப்பில் நென்மேனி-வன்னிமடை சாலையில் பாலம் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    முதல்-அமைச்சர் கிராம சாலைமேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.64.13 லட்சம் மதிப்பில் வன்னி மடை முதல் பெரியகுளம் கண்மாய் வரை சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், வன்னிமடை ஆதிதிராவிடர் காலனியில் ரூ.37.43 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    இதேபோல் சிந்து வார்பட்டி, போத்தி ரெட்டியாபட்டி, உப்பத்தூர், முள்ளிசெவல் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் அதனை தரமான தாகவும், விரைந்து முடித்தும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    Next Story
    ×