search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சித் திட்டப் பணிகள்"

    • அரியலூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள்
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    செந்துறை ஒன்றியம், இருங்கலாக்குறிச்சி கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.106.95 லட்சம் மதிப்பீட்டில் இருங்கலாக்குறிச்சி முதல் ஆனைவாரி ஓடை வரை சாலை அமைக்கும் பணியினையும், பின்னர்புதுப்பாளையம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.80லட்சம் மதிப்பீட்டில் ஆதனக்குறிச்சி - புதுப்பாளையம் கிழக்குத்தெருவில் கழிவுநீர்வாய்க்கால் 210 மீ அமைக்கும் பணியினையும், தொடர்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் ஆதனக்குறிச்சி - புதுப்பாளையம் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2.53 லட்சம் மதிப்பீட்டில் ஆதனக்குறிச்சி - புதுப்பாளையம் ஆதிதிராவிடர்காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்து பணிகளை தரமான பொருட்களை கொண்டு விரைவில் முடித்திட சம்மந்தப்பட்ட அலுலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆதனக்குறிச்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.63 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைத்தல் பணியினையும், பின்னர்முதுகுளம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.27 லட்சம் மதிப்பீட்டில் ஆதனக்குறிச்சி முதுகுளம் அய்யனார்குளம் ஆழப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் பணியினையும், அதனைத் தொடர்ந்து ஆலத்தியூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர்தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6.00 லட்சம் மதிப்பீட்டில் அருந்ததியர்தெரு சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், பின்னர்முள்ளுக்குறிச்சி கிராமத்தில் நபார்டு கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.42.36 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய பள்ளிக் கட்டடம் கட்டும் பணியினையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர்பரிமளம், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறி யாளர்வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ஜாகிர்உசைன், ஊராட்சிமன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.


    • செந்துறை ஒன்றியத்தில் ரூ.11.44 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கபட்டது
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.11.44 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார். அதன்படி, இலைக்கடம்பூர்- ஆர்.எஸ்.மாத்தூர் சாலையை ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்து, இந்த சாலையினை செயல்படுவது மூலம் செந்துறை, ஆர். எஸ்.மாத்தூர், படைவெட்டிக்குடிகாடு, சோழங்குடிக்காடு, சன்னாசிநல்லூர், பெரியாக்குறிச்சி, நத்தக்குழி, பொன்பரப்பி மற்றும் திட்டக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்கள் பயன்பெறுவார்கள் என்றார். தொடர்ந்து, முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.75.19 லட்சம் மதிப்பிட்டில் பொன்பரப்பி -சிறுகளத்தூர் சாலை ரூ.1.24 கோடி மதிப்பீட்டிலும், சிறுகளத்தூர் கொடுக்கூர் சாலை ரூ.71.43 லட்சம் மதிப்பிட்டிலும், சன்னாசிநல்லூர் -தளவாய் பள்ளி சாலை ரூ.1.92 கோடி மதிப்பிட்டிலும், மற்றும் அயன்தத்தனூர் - முல்லையூர் பள்ளி சாலை மேம்படுத்தல் உள்ளிட்ட பணிகளை அமைச்சர் தொடக்கி வைத்தார்.

    தொடர்ந்து, குழுமூரில் 15-வது நிதி குழு மானியம் (சுகாதார நிதி) திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பிட்டில் துணை சுகாதார மைய கட்டட கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் முருகண்ணன், வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், நபார்டு மற்றும் கிராம சாலைகளின் திருச்சி கோட்டப் பொறியாளர் பெ.வடிவேல், உதவிக் கோட்டப் பொறியாளர் அரியலூர் வி.பி.சரவணன், உதவி பொறியாளர் எஸ்.பிரியதர்ஷினி, வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஒன்றியகுழு கூட்டத்தில் தீர்மானம்
    • பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதம்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு தலைமையில், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இதில் நம்முடைய ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்க ப்பட்டது. ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தேவைக்கேற்ப சிமெண்ட் சாலைகள் அமைத்தல், குடிநீர் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை சுமார் 1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டது.

    பொது மக்களின் கோரிக்கைகளை ஏற்று கிராமப்புறங்களில் புதியதாக பகுதிநேர ரேசன் கடைகளை அமைக்க கலெக்டரிடம் கோருவதெனவும், கட்டிட வசதி இல்லாமல் வாடகை கட்டிடங்களில் இயங்கும் சேரன் கட்டிடங்களை கட்டித்தருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, சிவராமன், பொறியாளர் ராஜேஷ், வேளாண்மை துறை, மருத்துவதுறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×