search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்துறை ஒன்றியத்தில் ரூ.11.44 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
    X

    செந்துறை ஒன்றியத்தில் ரூ.11.44 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

    • செந்துறை ஒன்றியத்தில் ரூ.11.44 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கபட்டது
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.11.44 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார். அதன்படி, இலைக்கடம்பூர்- ஆர்.எஸ்.மாத்தூர் சாலையை ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்து, இந்த சாலையினை செயல்படுவது மூலம் செந்துறை, ஆர். எஸ்.மாத்தூர், படைவெட்டிக்குடிகாடு, சோழங்குடிக்காடு, சன்னாசிநல்லூர், பெரியாக்குறிச்சி, நத்தக்குழி, பொன்பரப்பி மற்றும் திட்டக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்கள் பயன்பெறுவார்கள் என்றார். தொடர்ந்து, முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.75.19 லட்சம் மதிப்பிட்டில் பொன்பரப்பி -சிறுகளத்தூர் சாலை ரூ.1.24 கோடி மதிப்பீட்டிலும், சிறுகளத்தூர் கொடுக்கூர் சாலை ரூ.71.43 லட்சம் மதிப்பிட்டிலும், சன்னாசிநல்லூர் -தளவாய் பள்ளி சாலை ரூ.1.92 கோடி மதிப்பிட்டிலும், மற்றும் அயன்தத்தனூர் - முல்லையூர் பள்ளி சாலை மேம்படுத்தல் உள்ளிட்ட பணிகளை அமைச்சர் தொடக்கி வைத்தார்.

    தொடர்ந்து, குழுமூரில் 15-வது நிதி குழு மானியம் (சுகாதார நிதி) திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பிட்டில் துணை சுகாதார மைய கட்டட கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் முருகண்ணன், வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், நபார்டு மற்றும் கிராம சாலைகளின் திருச்சி கோட்டப் பொறியாளர் பெ.வடிவேல், உதவிக் கோட்டப் பொறியாளர் அரியலூர் வி.பி.சரவணன், உதவி பொறியாளர் எஸ்.பிரியதர்ஷினி, வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×