search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரைக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டும்
    X

    திருப்பரங்குன்றம் பகுதியில் அடிப்படை வசதி செய்து தர கோரி ராஜன் செல்லப்பா எம்எல்ஏ மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமாரிடம் மனு அளித்தார்.அருகில் பெரியபுள்ளான் எம்எல்ஏ,வழக்கறிஞர் ரமேஷ்,சோலைராஜா உள்ளனர்.

    மதுரைக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டும்

    • மதுரைக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
    • ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமாரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆணையர் அலுவலகத்தில் சந்தித்து தனது தொகுதியில் உள்ள குறைகள் அடங்கிய கோரிக்கை மனுவை வழங்கி னார். பின்னர் ராஜன் செல் லப்பா எம்.எல்.ஏ கூறியதா வது:-

    திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை, பாதாள சாக்கடை பிரச்சினை, சாலை பிரச்சினை ஆகிய வற்றை வார்டு வாரியாக மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்திருக்கிறேன். பாதாள சாக்கடை திட்டத்தை விரைவு படுத்த வும் வலியுறுத்தி உள்ளேன்.இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநக ராட்சி ஆணையர் உறுதி அளித்தார்.

    மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ெரயில்வே கேட் அடைத்திருப்பதால் பொது மக்கள், மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள். எனவே திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு வைகை கரை திட்டம், சாலைகள் என பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி னார். ஆனால் தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நாளை தனது தந்தை பெயரில் கட்டப்பட்ட நூல கத்தை அவர் திறக்கிறார். நூலகம் என்ற அடிப்படையில் நாங்கள் அதனை வரவேற்கிறோம் முதலில் 80 கோடிக்கு நிதி நிலையின் போது ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து 114 கோடி என்ற அளவில் தெரிவிக்கப்பட்டு இப்போது 210 கோடி என அறி விக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு பதிலாக மதுரை மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி இருக்கலாம். மகளிர் உரிமைத்தொகை ஒன்றை அறிவித்துவிட்டு அதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வழங்க வேண்டும். இந்த கட்டுப்பாடு களை புகுத்தினால் அரசு கூறியது போல் ஒரு கோடி மகளிர்க்கு வழங்க இயலாது.

    மதுரை மாநகராட்சிக்கு நிதி பற்றாக்குறை இருந்தால் மத்திய, மாநில அரசுகளிடம் நிதியை கேட்டுப் பெற வேண்டும். நாங்கள் இருந்த காலத்திலும் மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை இருந்தது. பல்வேறு நிதிகளை திரட்டி நிர்வாக திறனுடன் நிர்வா கத்தை செயல் படுத்தினோம். தற்போது இருக்கும் மேயர் மீது குற்றம்சாட்டவில்லை நிதியை பெற முயல வேண்டுெமன கூறுகிறேன்.நாளை மதுரை வரும் மு.க. ஸ்டாலின் மதுரைக்கான வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×