search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "control"

    • காரில் சென்று கொண்டிருந்தபோது, ரமேஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • 2 பேரையும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    புதுச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் மேனாங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது50). இவர் தனது குழந்தைகளுடன், காரைக்காலுக்கு வேலை விசயமாக வந்துவிட்டு, மீண்டும் திருவாரூர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் கிராமத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ரமேஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கார் திடீரென்று தனது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கடையில் மோதி நின்றது.

    இந்த விபத்தில், கார் மற்றும் கடை வாசலில் நிறுத்தியிருந்த 2 மோட்டார் சைக்கிள் சேதமானது. மேலும், கார் டிரைவர் ரமேஷ், கடை உரிமையாளர் திருவாரூர் நன்னிலத்தைச்சேர்ந்த ஜெயக்குமார்(50) என்பவரும் காயம் அடைந்தனர். தொடர்ந்து, அங்கிருந்தோர்,2 பேரையும் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து, ஜெயக்குமாரின் மகன் குருமூர்த்தி, காரைக்கால் போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில், கார் டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • செம்பேன் பூச்சி மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
    • பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களு டைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். nama

    நாமக்கல்:

    நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் அழகுதுரை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மோகனூர் ரோட்டில், கால்நடை மருத்துவக் கல்லூரி வளா கத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் (கே.வி.கே) வருகிற 19-ந் தேதி காலை 9.30 மணிக்கு மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் செம்பேன் பூச்சி மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

    இப்பயிற்சியில் மரவள்ளி பயிர்களைத் தாக்கும் செம்பேன்கள், அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள், இயற்கை முறையில் பூச்சி மற்றும் பூஞ்சாண எதிர் உயிர் கொல்லிகளைக் கொண்டு ஒருங்கிணைந்த முறையில் மரவள்ளியில் செம்பேன் நோய் கட்டுப்படுத்துதல் குறித்து தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இந்த பயிற்சியில், மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனை வரும் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயி களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    மேலும், பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களு டைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • காவல்துறையினருக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகவும் அவசியமானது.
    • பொது அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் பேணிக் காக்க வேண்டியது காவல்துறையினரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்

    திருச்சி

    திருச்சி கிராப்பட்டியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதல் அணி மைதானத்தில் பயிற்சி காவலர்களின் 7 மாத பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. சிறப்பு காவல் படை முதல் அணி கமாண்டன்ட் மு.ஆனந்தன் விழாவை ஒருங்கிணைத்தார். இதில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்த 274 பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் அவர் பேசுகையில், பயிற்சி முடித்த நீங்கள் காவல்துறையின் மாண்பையும், பெருமையையும் பேணிக்காக்கும் வகையில் உங்கள் பணியை அமைத்துக் கொள்ள வேண்டும். காவல்துறையினருக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகவும் அவசியமானது. காவல் பணி என்பது பொதுமக்களிடம் கனிவையும், அன்பையும் காட்ட வேண்டும். கயவர்களையும், சமூக விரோதிகளையும் இரும்பு கரம் கொண்டு அடக்க துணிய வேண்டும். பொது அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் பேணிக் காக்க வேண்டியது காவல்துறையினரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என கூறினார்.

    நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர்கள் சுரேஷ்குமார், அன்பு, ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானம் மற்றும் திருச்சி நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த பெண் காவலர்கள் உள்ளிட்ட 622 பேரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாக்களும் நடைபெற்றன. மேற்கண்ட விழாக்களில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ் குமார், கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தீபாவளியன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்
    • கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    மாவட்ட அளவில் உச்சநீதிமன்ற ஆணையின் படி நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சி யர்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடுவாரியம் மூலம் கேட்டுக் கொள்ளப் பட் டு உள்ளார்கள். சுற்றுச் சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில்கொண்டு, பொதுமக்கள் கீழ்கண்ட வற்றைக் கடைப் பிடிக்கு மாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது:-

    பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசு களை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வா கம், உள்ளாட்சி அமைப்பு களின் முன் அனுமதியுடன், பொது மக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதி களில் உள்ள நலச்சங்க ங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவ மனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டா டுங்கள்.

    இவ்வாறு அவர் அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

    • பயிர்களை சேதப்படுத்திய காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இந்த பகுதியில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடலை, கரும்பு, மக்காசோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி தாலுகா தென்னமநல்லூர், சித்துர், எம்.புளியங்குளம், சேர்வரக்காரன்பட்டி, மையிட்டான்பட்டி, உவரி, போத்தநதி, எம்.புதுப்பட்டி மறவப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பகுதியில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடலை, கரும்பு, மக்காசோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். 4 மாதத்திற்கு பின்பு தற்போது பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.

    சில தினங்களாக காட்டு பன்றிகள் இரவு வேளையில் கூட்டம், கூட்டமாக விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. கரும்பு, மக்காசோளம், கடலை பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    இது குறித்து தென்னமநல்லூர் விவசாயிகள் ரவி, பாண்டி ஆகியோர் கூறுகையில், கடலை, மக்காசோளம் மற்றும் கரும்பு பயிரிட்டுள்ளோம். இதுவரை ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.

    பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இரவு நேரத்தில் வரும் காட்டுபன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி உள்ளன.

    வயல்வெளியில் காவல் இருந்தாலும் ஆள்அரவரமற்ற பகுதியில் அவை நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வேளாண்மை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம்.

    இது குறித்து வனத்துறை யினரிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இரவு நேரங்களில் பயிர்களை சேதப்படுத்திவிட்டு பகலில் கண்மாயில் உள்ள முட்புதர்களில் காட்டுப்பன்றிகள் பதுங்கிக் கிடக்கிறது.

    எனவே கருவேல மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டு பன்றிகளிடம் இருந்து பயிர்களை காக்க நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்கவேண்டும்.

    சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தரவேண்டும் என்றனர்.

    • பாபு ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து திருப்பயத்தங்குடி வடிகால் வாய்க்காலில் விழுந்தார்.
    • நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மகன் சுரேஷ் பாபு (வயது 43) விவசாய கூலித்தொழிலாளி.

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருப்பயத்தங்குடியில் இருந்து சோழங்கநல்லூர் சென்றுள்ளார்.

    அப்போது சுரேஷ் பாபு ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் திருப்பயத்தங்குடி வடிகால் வாய்க்காலில் விழுந்தார்.

    அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சுரேஷ்பாபுவை மீட்டு திருப்பயத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சேர்த்தனர்.

    அங்கு சுரேஷ்பாபுவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் சுரேஷ் பாபுவின் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் சுரேஷ்பாபுவின் மனைவி மீனா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 4,000 ஏக்கர் பரப்பளவில், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
    • கருந்தலைப்புழு அனைத்து வயதுள்ள மரங்களையும் தாக்குகிறது.

    அவிநாசி :

    அவிநாசி வட்டாரத்தில் 4,000 ஏக்கர் பரப்பளவில், தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் தென்னையில் கருந்தலைப்புழு தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. பழங்கரையில் வேளாண்மை துறை மற்றும் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் இணைந்து கருந்தலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை குறித்து விளக்கினர்.

    அவிநாசி வேளாண்மை அலுவலர் சுஜி வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு பேசுகையில், கருந்தலைப்புழு, அனைத்து வயதுள்ள மரங்களையும் தாக்குகிறது. மரத்தின் அடிப்பகுதியில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால் கொண்டையின் மேற்பகுதியில் உள்ள 3,4 ஓலைகளை தவிர மற்ற அனைத்து ஓலைகளும் காய்ந்து விடுகிறது. ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சையத்தை சுரண்டி இப்புழுக்கள் உண்கின்றன. அதிகமாக நோய் தாக்கப்பட்ட மரங்கள் எரிந்து தீய்ந்தது போல் காட்சியளிக்கும் என்றார்.

    • வெள்ளை நிற மாவு போன்ற பூச்சிகள் இலை, தண்டு மற்றும் குருத்து பகுதிகளில் காணப்படுகிறது.
    • பூஞ்சாண வளர்ச்சி தோன்றும், தாக்கப்பட்ட செடிகள் வாடி கருப்பு நிறமாக மாறிவிடும்.

    செய்துங்கநல்லூர்:

    கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கருங்குளம் வட்டாரத்தில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பூ பிடிக்கும் பருவம், காய் தோன்றும் பருவம், காய் எடுக்கும் பருவம் ஆகிய மூன்று நிலைகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பருத்தியில் தற்போது மாவுப்பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.

    வெள்ளை நிற மாவு போன்ற பூச்சிகள் இலை, தண்டு மற்றும் குருத்து பகுதிகளில் காணப்படுகிறது. தாக்கப்பட்ட செடிகள் இலையின் அடிப்பகுதியில் கூட்டமாக மெழுகு போன்று காணப்படும். பூஞ்சாண வளர்ச்சி தோன்றும், தாக்கப்பட்ட செடிகள் வாடி கருப்பு நிறமாக மாறிவிடும்.

    மாவுப்பூச்சியின் தாக்குதல் ஆரம்பநிலையில் இருக்கும் போது பாதிக்கப்பட்ட செடியினை பிடுங்கி எறிந்து விட வேண்டும். தாக்கப்பட்ட செடியின் மீது அதிக வேகத்துடன் தண்ணீர் பீச்சி அடிக்க வேண்டும். மீன் எண்ணெய் ரோசின் சோப் ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது வேப்ப எண்ணெய் 20 மில்லி மருந்தினை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.

    வேப்பங்கொட்டைச்சாறு 50 கிராமினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகமாகும் போது பூச்சிகொல்லி மருந்தினை ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். தையோடிகார்ப் 75டபில்யூபி மருந்தினை 750 கிராம் அல்லது அஸிப்பேட் 75எஸ்பி 2 கிலோ அல்லது டைமீதோயேட் மருந்தினை 1 லிட்டர் அல்லது கார்பரில் 50பில்யூபி ஏக்கருக்கு 2.5 கிலோ அல்லது இமிடாகுளோபிரிட் 90 மிலி என்ற அளவில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் தெளித்து கட்டுப்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரே நாளில் மேலும் 33 பேருக்கு பாதிப்பு சேலத்தில் விரைவில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் திறப்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
    • 154 பேருக்கு சிகிச்சை.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

    மாவட்டத்தில் நேற்று முன்தினம் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 33 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் சேலம் மாநக–ராட்சியில் 17 பேர், சேலம் சுகாதார மாவட்டத்தில் 7 பேர், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 9 பேரும் அடங்குவர்.

    இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 10 பேர் குணமாகி வீடு திரும்பினர். மேலும் 154 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொேரானா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடை பிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும் கொரோனா தொற்று குறித்த சந்தேகங்க–ளுக்கும், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை தெரிந்து கொள்ளவும் கலெக்டர் அலுவலகத்தில் விரைவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது. இதில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் இணைந்து செயல்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பா.ஜனதாவின் கட்டுப்பாட்டின் கீழ் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
    மேற்கு வங்கத்தில் 19-ம் தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் நடக்கிறது. மாநிலத்தில் அமித்ஷா ஊர்வலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்களிடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு பெரிய வன்முறை வெடித்தது. இதனையடுத்து அரசியல் சட்டப்பிரிவு 324-ஐ கையிலெடுத்த தேர்தல் ஆணையம் ஒரு நாள் முன்னதாகவே அதாவது மே 16-ம் தேதி இரவு 10 மணியுடன் அனைத்து பிரசாரங்களும் முடித்துக் கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார். 

    மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமித் ஷா தனது கூட்டத்தின் மூலம் வன்முறைகளை உருவாக்கியுள்ளார், வித்யாசாகர் சிலை சிதைக்கப்பட்டது. இதற்காக பிரதமர் மோடி வருத்தப்படவில்லை. மேற்கு வங்காள மக்கள் இதனை தீவிரமாக எடுத்துள்ளனர். அமித் ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்று அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார், தேர்தல் ஆணையத்திற்கு மிரட்டல் விடுத்தார். அதன் விளைவுதான் பிரசாரத்திற்கு ஒருநாள் தடையா? வங்க மக்கள் பயப்பட மாட்டார்கள். 

    நான் மோடிக்கு எதிராக பேசுவதால்தான் மேற்கு வங்கம் இலக்காக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தை பா.ஜனதா நடத்துகிறது. இது இதுவரையில் இல்லாத ஒருநடவடிக்கையாகும். நேற்று வன்முறையே அமித் ஷாவால் நடத்தப்பட்டது. தேர்தல் ஆணையம் அமித்ஷாவிற்கு நோட்டீஸ் விடுக்காதது ஏன்? பிரசாரம் செய்ய தடை விதிக்காதது ஏன்? குண்டர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தார்கள், அவர்கள் காவி நிறம் அணிந்துக்கொண்டு வன்முறையை நிகழ்த்தியுள்ளனர். 

    பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இருந்த வன்முறைகளை உருவாக்கியுள்ளனர். தேர்தல் கமிஷனின் முடிவு நியாயமற்றது, அரசியல் ரீதியாக ஒருசார்பானது. பிரதமர் மோடி நாளை தன்னுடைய இரண்டு பேரணிகளை முடிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். 

    மேலும் பேசுகையில், பிரதமர் மோடி உங்களால் உங்கள் மனைவியையே கவனித்துக் கொள்ளமுடியவில்லை, எப்படி நாட்டை கவனித்துக் கொள்வீர்கள்? எனக் கேள்வியையும் எழுப்பியுள்ளார் மம்தா பானர்ஜி. மாயாவதி இதுபோன்ற விமர்சனத்தை முன்வைத்ததால், தனிமனித தாக்குதலில் தரம் தாழ்ந்து விட்டார் என பா.ஜனதா விமர்சனம் செய்தது. இப்போது மம்தாவும் அதுபோன்று பேசியுள்ளார். 
    சபரிமலை கோவில் நடை 12-ந்தேதி திறக்கும்போது, ஐயப்ப பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து பத்தனம்திட்டா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். #Sabarimala #Sabarimaladevotees
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வயது வித்தியாசம் இன்றி பெண்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கு கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஐயப்ப பக்தர்களுடன் இணைந்து பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்றவை போராட்டத்தில் ஈடுபட்டதால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை உருவானது.

    அதேசமயம் மாநில அரசு சபரிமலை செல்லும் இளம்பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்தது. இதனால் கனகதுர்க்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் முதல் முறையாக சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

    இந்த நிலையில் வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 5.30 மணிக்கு மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

    மறுநாள் அதிகாலை 4 மணிக்கு கோவில் மீண்டும் திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து 5 நாட்களுக்கு பல்வேறு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும். வருகிற 17-ந்தேதி இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை முடிவடையாததால் இப்பிரச்சினை இன்னும் நீடிக்கிறது. இதனால் சபரிமலை கோவில் நடை திறக்கும்போது இளம்பெண்கள் மீண்டும் தரிசனத்திற்கு வருவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களை தடுத்து போராட்டம் நடத்த ஐயப்ப பக்தர்களும் திட்டமிட்டுள்ளனர். எனவே சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சபரிமலை கோவில் நடை திறந்து இருந்தபோது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுபோல இந்த முறையும் தடை உத்தரவு பிறப்பிப்பது பற்றி பத்தனம் திட்டா கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடந்து வருகிறது.

    பத்தனம்திட்டா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் ஐயப்ப பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி சபரிமலை கோவில் நடை 12-ந்தேதி திறக்கும்போது பக்தர்கள் அமைதியாக சென்று வழிபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 12-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை காலை 10 மணிக்கு மேல்தான் நிலக்கல்லில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் கட்டுப்பாடுகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.



    இதற்கிடையில் சபரிமலை கோவிலில் இளம்பெண்களை அனுமதிக்க கால அவகாசம் வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறி வந்தது. சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணையின் போது திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஆஜரான வக்கீல் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்பதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து தேவசம்போர்டு ஆணையர் வாசுவுக்கு தேவசம்போர்டு சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தேவசம் போர்டு தனது நிலைப்பாட்டை மாற்றி, மாற்றி கூறி வருவதால் ஐயப்ப பக்தர்கள் இடையே இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. #Sabarimala #Sabarimaladevotees
     
    ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி நகரத்துக்கு தலீபான்கள், ஆப்கானிஸ்தான் அரசு என இரு தரப்பினரும் உரிமை கொண்டாடுகின்றனர். #Ghazni #Taliban #Afghanistan
    காபூல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படைகளுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் தொடர்ந்து 18-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் அங்கு கஜினி மாகாணத்தின் தலைநகரமான கஜினி நகரத்தை பிடிப்பதற்கு கடந்த 9-ந் தேதி இரவில் தலீபான்கள் களத்தில் இறங்கினர். அவர்களை எதிர்த்து ஆப்கானிஸ்தான் படையினரும் மோதினர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. தலீபான்களை குறிவைத்து வான் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் இரு தரப்புக்கும் பலத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன.



    இப்போது கஜினி நகரத்துக்கு தலீபான்கள், ஆப்கானிஸ்தான் அரசு என இரு தரப்பினரும் உரிமை கொண்டாடுகின்றனர்.

    இதுபற்றி ஆப்கானிஸ்தான் நாட்டின் எம்.பி.யான சாகுல் ரெஜாயி கூறும்போது, “காபூலில் உள்ள மத்திய அரசு அதிகாரிகள் கஜினி நகரம் அரசின் வசம் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் கஜினி நகரத்தில் உள்ள அதிகாரிகளை நாங்கள் தொடர்பு கொண்டால் அவர்கள் இன்னும் சண்டை நடந்து கொண்டு இருக்கிறது என்று கூறுகிறார்கள். அங்கு படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. அமெரிக்கா தாக்குதல் ஹெலிகாப்டர்களை களத்தில் இறக்கி உள்ளது. ஆளில்லா விமான தாக்குதலும் நடத்தப்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டார்.

    ஆனால் தலீபான்கள் கஜினி நகரம் தங்கள் வசம் வந்து விட்டதாக கூறுகின்றனர். இதுபற்றி தலீபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் கூறுகையில், “கஜினி நகரத்தை எங்கள் வீரர்கள் முழுமையாக வெற்றி கொண்டு விட்டார்கள். ஆயுதங்கள், வெடிபொருட்கள், வாகனங்களை கைப்பற்றி உள்ளனர். கஜினி நகரத்தை எங்கள் வீரர்கள்தான் பாதுகாத்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டார்.  #Ghazni #Taliban #Afghanistan 
    ×