என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காரைக்கால் அருகே கார் வணிக கடையில் மோதி விபத்து
- காரில் சென்று கொண்டிருந்தபோது, ரமேஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- 2 பேரையும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
புதுச்சேரி:
திருவாரூர் மாவட்டம் மேனாங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது50). இவர் தனது குழந்தைகளுடன், காரைக்காலுக்கு வேலை விசயமாக வந்துவிட்டு, மீண்டும் திருவாரூர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் கிராமத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ரமேஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கார் திடீரென்று தனது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கடையில் மோதி நின்றது.
இந்த விபத்தில், கார் மற்றும் கடை வாசலில் நிறுத்தியிருந்த 2 மோட்டார் சைக்கிள் சேதமானது. மேலும், கார் டிரைவர் ரமேஷ், கடை உரிமையாளர் திருவாரூர் நன்னிலத்தைச்சேர்ந்த ஜெயக்குமார்(50) என்பவரும் காயம் அடைந்தனர். தொடர்ந்து, அங்கிருந்தோர்,2 பேரையும் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து, ஜெயக்குமாரின் மகன் குருமூர்த்தி, காரைக்கால் போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில், கார் டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்