search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுப்பாடு"

    • முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.
    • கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    வடவள்ளி:

    மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கோவிலுக்கு நடந்து, வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, தடாகம், பேரூர், மருதமலை, போளூவாம்பட்டி, மதுக்கரை, ஆகிய பகுதிகளில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக மருதமலை, அனுவாவி முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.

    இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகின.

    இதேபோல், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    தற்போது இந்த இரண்டு வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்கு நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் நேரக்கட்டுப்பாடு விதித்து காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மருதமலை சரகத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் கோவிலுக்கு செல்லும் தார்சாலை, படிக்கட்டுகள் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், சிறுத்தைகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் பெரும்பாலான முறை கடந்து செல்கின்றன.

    கோவிலுக்குச் சென்று வரும் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் சத்தத்தால் பெரும்பாலும் பகல் நேரங்களில் அவை கடந்து செல்வதில்லை.வன விலங்குகளின் நடமாட்டத்தை இரவு, பகலாக கண்காணித்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொது மக்கள் நடந்து செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. வாகனங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சென்று வரலாம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 

    • தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று காலை சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.
    • எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூட மத்திய அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று காலை சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெகஜோதி தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் வரவேற்று பேசினார். மாநில பொருளாளர் ரமேஷ் தொடக்க உரையாற்றினார்.

    இதில் செயலாளர் மலர்விழி பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூட மத்திய அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை விடுத்தனர்.

    போராட்டத்தில் ராமாயி, ஜெயபாரதி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் பல்வேறு பணிகளை முடித்து நேற்று இரவு திருவண்ணாமலைக்கு காரில் திரும்பினர்.
    • அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம்:

    திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் ரியாஸ் (வயது 26), யாசின் (32), சராபுதீன் (28) ஆகியோர் காரில் புதுவைக்கு வந்தனர். இந்த காரினை யாசின் ஓட்டி வந்துள்ளார். புதுவையில் பல்வேறு பணிகளை முடித்து நேற்று இரவு திருவண்ணாமலைக்கு காரில் திரும்பினர். புதுவை - திண்டிவனம் 4 வழிச் சாலையில் மொளசூர் இடையன்குளம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற டிராக்டரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் சென்ற ரியாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். யாசின், சராபுதீன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் காயமடைந்தவர்கள் மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கிளியனூர் போலீசார் விரைந்து வந்தனர். ரியாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் ,திருக்கோவிலூர் திருச்சி ,சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்வார்கள்.
    • ஒரு மணி நேர மீட்பு பணிக்கு பிறகு விபத்துக்குள்ளான லாரி மீட்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் சென்னை -திருச்சி நெடுஞ்சாலையில் 4 வழி சாலையில் பிரதான சிக்னல் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து தான் புதுவை, பெங்களூர், திருவண்ணாமலை, கடலூர் ,திருக்கோவிலூர் திருச்சி ,சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்வார்கள். இந்நிலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த லாரியின் முன் அச்சு கழன்று, டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து சிக்னலில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    விபத்தை அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் கோபி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்ப டுத்தும் பணியில் ஈடுபட்ட னர். சரியாக ஒரு மணி நேர மீட்பு பணிக்கு பிறகு விபத்துக்குள்ளான லாரி மீட்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இப் பகுதி யில் விழா காலங்களில் போக்குவரத்து போலீசார் அதிக அளவில் நியமிக்கப் பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

    • கடலூர் முதுநகரில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கூலி தொழிலாளி பலியானார்.
    • தங்கை வீடான கடலூர் சாவடிக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கிருஷ்ணங்குப்பத்தை சேர்ந்தவர் நிக்சன் மோரோ (வயது 32). கூலி தொழிலாளி. நேற்று நள்ளிரவு தனது தங்கை வீடான கடலூர் சாவடிக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர் அடுத்த சேடப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழுந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் நிக்சன் மோரோவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து நிக்சன் மோரோவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் திருப்பூர் சிறு, குறு, நடுத்தரத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     திருப்பூர்

    திருப்பூர் வடக்கு மாநகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து நடைபயணப் பிரச்சாரம், பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.வடக்கு மாநகரின் கிழக்குப் பகுதியில் கருமாரம்பாளையத்தில் இருந்து ஒரு குழுவும், மேற்குப் பகுதியில் சாமுண்டிபுரம் எம்ஜிஆர் நகரில் இருந்து ஒரு குழுவும் புறப்பட்டு வடக்குப் பகுதியில் பல்வேறு மக்கள் குடியிருப்புகள் வழியாக 20 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் சென்று குமரானந்தபுரம் சிவன் தியேட்டர் சந்திப்பு அருகே சங்கமித்தனர். இதில் 60 இளைஞர்கள் பங்கேற்றனர்.

    பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் திருப்பூர் சிறு, குறு, நடுத்தரத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். பனியன் தொழிலுக்கு மூலப்பொருளாக உள்ள பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும்.திருப்பூரில் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகரின் வடக்குப் பகுதியில் ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உருவாக்க வேண்டும். நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்த குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்,

    பயிற்சி பெற்ற ஊழியர்களை நியமித்து, அளிக்கப்படும் சிகிச்சை விபரத்தை அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும். திருப்பூர் மாநகரில் அனைத்து பேருந்து நிலையங்களையும் இணைக்கக்கூடிய வகையிலும், கொரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட பேருந்துகளையும் முழுமையாக இயக்க வேண்டும். பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க வேண்டும், அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிட பற்றாக்குறையை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வடக்கு பகுதியில் மாணவர்கள், இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானங்கள் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள வறட்சியான காலங்களில் கரும்பில் வெண்புழு தாக்குதல் அதிகமாக இருக்கும்.
    • கரும்பு நடவு செய்யும் போது வேப்பம் புண்ணாக்கு இட்ட வயலில் இதன் தாக்குதல் இருக்காது.

    குடிமங்கலம்:

    கடந்த சில ஆண்டுகளாகவே தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, போதிய விலையின்மை உள்ளிட்ட காரணங்களால் பணப்பயிரான கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் குறைந்துள்ளது. இந்தநிலையில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை விவகார எல்லைகளுக்குட்பட்ட திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் தற்போது சாகுபடி செய்துள்ள கரும்புப் பயிரில் ஒருசில இடங்களில் வெண்புழுக்களின் தாக்குதல் தென்படுகிறது.

    இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதை தடுக்க கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்கு அலுவலர் காளிமுத்து, மடத்துக்குளம் தாலுகா கணியூர், காரத்தொழுவு, பழனி தாலுகா நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    வெண்புழு தாக்குதல் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அவர் கூறியதாவது:-

    மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள வறட்சியான காலங்களில் கரும்பில் வெண்புழு தாக்குதல் அதிகமாக இருக்கும். வெண்புழு தாக்குதலால் கரும்பு பயிரின் இலைகள் மஞ்சள் நிறமடைந்து வாடி சருகு போல மாறிவிடும். குருத்துப்பகுதி முழுவதும் காய்ந்து விடும். பாதிக்கப்பட்ட கரும்புத்தூரினை இழுத்தால் எளிதில் கையோடு மேலே வந்துவிடும். அத்துடன் வெண்புழுக்கள் வேர் மற்றும் அடிக்குருத்து பகுதியில் அதிக அளவில் சேதம் உண்டாக்கும். வெண்குருத்துப்புழு தாக்குதலை தவிர்க்க விவசாயிகள் கீழ்க்கண்ட முறைகளை கடைபிடிக்கலாம்.

    கரும்பு நடவு செய்யும் போது வேப்பம் புண்ணாக்கு இட்ட வயலில் இதன் தாக்குதல் இருக்காது. கோடை காலங்களில் அறுவடை முடிந்தவுடன் ஆழமாக உழவு செய்ய வேண்டும். வயலில் எப்போதும் ஈரத்தன்மை இருக்குமாறு வைத்திருக்க வேண்டும். இதனால் புழுக்கள் மண்ணை விட்டு வெளியே வந்துவிடும். பயிர் சுழற்சி முறைகளை கடைபிடித்தும் வெண்புழு தாக்குதல் பாதிப்பிலிருந்து பயிரைக் காப்பாற்றலாம். வெண் புழுக்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு மெட்டாரைசியம் அனிசோபிலியே மற்றும் பிவேரியா பேசியானா ஆகிய உயிரியல் பூஞ்சானக் கொல்லிகளை தலா 5 கிலோ வீதம் எடுத்துக்கொண்டு 100 கிலோ மட்கிய தொழு உரத்துடன் நன்கு கலந்து 10 நாட்கள் வைத்திருந்த பின் பாதிக்கப்பட்ட இடங்களில் தூவி விட்டு நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு குருத்துக்கு 2 முதல் 5 புழுக்கள் வரை இதன் பாதிப்பு தென்பட்டால் ஊடுருவி பாயும் ரசாயன பூச்சிக்கொல்லிகளான குளோர்பைரிபாஸ் ஏக்கருக்கு 80 கிராம் என்ற அளவில் 80 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலைகளை நிறுவும் இடத்தில் மாற்று மதத்தினர் புண்படும் வகையில் கோஷங்களை எழுப்பக் கூடாது.
    • சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் இந்து அமைப்புகள் மற்றும் பொதுநல சங்கத்தினரால் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட இந்து அமைப்பினர் திட்டமிட்டு உள்ளனர். இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் 18-ந் தேதி பூஜைக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் ஒரு வாரத்துக்கு பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் போலீசார் இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடங்கி இருக்கிறார்கள்.

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றி மாநிலம் முழுவதும் உளவுப் பிரிவு போலீசார் உஷாராகி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லாத வகையில் தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி தொடர்பாக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    பிரச்சினைக்குரிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்கக் கூடாது. சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்கும் போதே பிரச்சினைக்குரிய இடமாக கருதப்பட்டால் அந்த இடத்தில் எக்காரணத்தை கொண்டும் சிலைகளை வைக்கக் கூடாது. இதனை மீறி யாராவது சிலைகளை வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிலைகளை நிறுவும் இடத்தில் மாற்று மதத்தினர் புண்படும் வகையில் கோஷங்களை எழுப்பக் கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக சிலைகளை வைக்கக் கூடாது.

    சிலைகளை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக 17 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை மீறி மாற்று வழிகளில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிலைகளை கரைப்பதற்கு திருவொற்றியூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை, எண்ணூர் உள்ளிட்ட நான்கு இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். வேறு பகுதிகளில் குறிப்பாக அனுமதிக்கப்படாத இடங்களில் சிலைகளைக் கரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழா மேடையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் விழா ஏற்பாடுகள் பணியில் இருக்க வேண்டும். விநாயகர் சிலைகளை அமைக்கும் இடத்தில் போடப்படும் பந்தல் தீ பிடிக்காத வகையில் அமைக் கப்பட்டிருக்க வேண்டும். பிற மதத்தினர் புண்படும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்பது போன்ற 20-க்கு மேற்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி தொடர்பாக 5 கட்டங்களாக ஆலோசனை நடத்த போலீ சார் முடிவு செய்துள்ளனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து மேற் கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. முதலில் தங்களது பகுதி யில் சிலைகளை அமைப்பவர்களை அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் பிறகு உதவி கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் ஆலோசனை நடத்து கிறார்கள்.

    3-வதாக துணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் குழு சிலை அமைப்பவர்களுடன் ஆலோசனை நடத்துகிறது. இதன் பிறகு இணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

    கடைசியாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் சிலைகளை அமைக்கும் அமைப்பினரின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தில் கூடுதல் கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் கலந்து கொண்டு சிலைகளை கரைப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் இருக்கும் இடங்களில் செப்டம்பர் 18-ந் தேதியில் இருந்து ஒரு வார காலத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

    சென்னையில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அனைத்து துணை கமிஷனர்களுக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்.

    குறிப்பாக விநாயகர் சிலைகளை அமைக்கும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளனவா? என்பதை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் நேரில் சென்று அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

    அதே நேரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதி யான முறையில் நடத்தி முடிக்க சென்னை போலீசா ரும் தமிழக காவல்துறை யினரும் முடிவு செய்து உள்ளனர்.

    • நேற்று இரவு இந்த கார் மாம்பழப்பட்டு அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்தது.
    • காரை அங்கேயே நிறுத்திவிட்டு, பஸ் ஏறி சென்று விட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் டிரைவர் உள்பட 5 பேர் சென்றுள்ளனர். நேற்று இரவு இந்த கார் மாம்பழப்பட்டு அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசாமாக யாருக்கும் காயமோ, உயிரழப்போ இல்லை. விபத்துக்குள்ளான காரில் வந்தவர்கள், காரை அங்கேயே நிறுத்திவிட்டு, பஸ் ஏறி சென்று விட்டனர். இது தொடர்பாக காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஆண்டில் உள்நாட்டில் நிலவிய உச்சபட்ச விலை உயர்வால் பருத்தி இறக்குமதி 176 சதவீதம் அதிகரித்தது.
    • பருத்தி, பஞ்சு, நூலிழை போன்றவற்றை, இத்தகைய நாடுகள் நம் நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய துவங்கி விடுகின்றன.

    திருப்பூர்:

    நம் நாட்டில் உற்பத்தியாகும் பருத்தி, பஞ்சு, பருத்தி நூலிழை மற்றும் ஆடைகளுக்கு, சர்வதேச சந்தைகளில் வரவேற்பு அதிகம். சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற போட்டி நாடுகள் தரமான பருத்தி உற்பத்தியில் இந்தியாவை வெற்றி கொள்ள முடியவில்லை.

    பருத்தி சீசன் துவங்கியதும், பருத்தி, பஞ்சு, நூலிழை போன்றவற்றை, இத்தகைய நாடுகள் நம் நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய துவங்கி விடுகின்றன.கடந்தாண்டு தட்டுப்பாடு ஏற்பட்டதால் வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் பின்னலாடை தொழில் உட்பட, ஜவுளித் தொழில்துறையினர் அதிக விலை கொடுத்து பஞ்சை வாங்கினர்.

    முந்தைய நிதியாண்டில்(2021-22) 15 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக இருந்த பருத்தி நூலிழை துணி, ஜவுளி பொருள் இறக்குமதி கடந்த நிதியாண்டில்(2022-23) 21 ஆயிரத்து 11 கோடி ரூபாயாக அதிகரித்தது. முந்தைய ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவாக நடந்த பருத்தி , கழிவு பஞ்சு இறக்குமதி கடந்த நிதியாண்டில் 11 ஆயிரத்து 505 கோடியாக அதிகரித்தது.

    கடந்த ஆண்டில் உள்நாட்டில் நிலவிய உச்சபட்ச விலை உயர்வால் பருத்தி இறக்குமதி 176 சதவீதம் அதிகரித்தது. உள்நாட்டு தேவைக்கான பஞ்சு தடையின்றி கிடைக்கும் வகையில் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அதன் மூலம், நடப்பு நிதியாண்டில் இறக்குமதியை குறைத்து ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தை உயர்த்த முடியும் என்கின்றனர் திருப்பூர் பின்னலாடைத் தொழில்துறையினர்.

    • காரில் சென்று கொண்டிருந்தபோது, ரமேஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • 2 பேரையும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    புதுச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் மேனாங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது50). இவர் தனது குழந்தைகளுடன், காரைக்காலுக்கு வேலை விசயமாக வந்துவிட்டு, மீண்டும் திருவாரூர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் கிராமத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ரமேஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கார் திடீரென்று தனது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கடையில் மோதி நின்றது.

    இந்த விபத்தில், கார் மற்றும் கடை வாசலில் நிறுத்தியிருந்த 2 மோட்டார் சைக்கிள் சேதமானது. மேலும், கார் டிரைவர் ரமேஷ், கடை உரிமையாளர் திருவாரூர் நன்னிலத்தைச்சேர்ந்த ஜெயக்குமார்(50) என்பவரும் காயம் அடைந்தனர். தொடர்ந்து, அங்கிருந்தோர்,2 பேரையும் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து, ஜெயக்குமாரின் மகன் குருமூர்த்தி, காரைக்கால் போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில், கார் டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • செம்பேன் பூச்சி மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
    • பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களு டைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். nama

    நாமக்கல்:

    நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் அழகுதுரை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மோகனூர் ரோட்டில், கால்நடை மருத்துவக் கல்லூரி வளா கத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் (கே.வி.கே) வருகிற 19-ந் தேதி காலை 9.30 மணிக்கு மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் செம்பேன் பூச்சி மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

    இப்பயிற்சியில் மரவள்ளி பயிர்களைத் தாக்கும் செம்பேன்கள், அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள், இயற்கை முறையில் பூச்சி மற்றும் பூஞ்சாண எதிர் உயிர் கொல்லிகளைக் கொண்டு ஒருங்கிணைந்த முறையில் மரவள்ளியில் செம்பேன் நோய் கட்டுப்படுத்துதல் குறித்து தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இந்த பயிற்சியில், மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனை வரும் கலந்து கொள்ளலாம். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயி களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    மேலும், பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களு டைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×